Apr 7, 2012

அம்மா இங்கே வா வா.....



நீ சொல்லித்தராமல் நான்
அம்மா சொல்லவில்லை - நீ
கை நீட்டாமல் நான்
அப்பாவை அறியவில்லை....

உன் விரல் பிடிக்காமல்
முதன்தலாய் என்
பாதம் பதிக்கவில்லை - எனை
நீ வாரி அணைக்காமல்
நான் அழுகை நிறுத்தியதில்லை....

நீ தாலாட்டாமல் நான்
தூங்கியதுமில்லை - நான்
சிரிக்காமல் நீ ஆனந்தம்
கொண்டதில்லை.....

உன் கனவுகளை நான் தினம்
ஆட்கொள்ளாமலுமில்லை - உன்
நினைவுகளில் எனைத்தவிர யாரையும்
பெரிதாய் உட்படுத்தவுமில்லை....

உறவுகளில் யாரையும்
இப்போதெல்லாம் நீ
நினைப்பதே இல்லை - கண
நேரங்கள் கூட எனை நீ
காணாமல் இருப்பதுமில்லை....

நான் அழைக்கும்போதெல்லாம்
உன் அலைபேசி கண்ணீரில்
நனையாமல் இருந்ததில்லை...

நான் அழுதாலும் நீ அழுதாய்
நான் சிரித்தாலும் நீ அழுதாய்
நான் ரசித்தாலும் நீ அழுதாய்
நான் பசித்தாலும் நீ அழுதாய்

நின் கண்கள் பாடும்
கண்ணீரின் நிறங்கள்
தேடி உன் கண்ணீர் விழுந்த
சுவடுகளின் தூரம் தேடி.....

அன்புடன்

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...