Apr 12, 2012

இறைவா...

இறைவா...

காற்றைக் கிழிப்பரோ
கடலை பிழப்பரோ இவர்கள்– நின்
கரங்களில் பிழை காண்பரோ இறைவா....

அணுவை உடைப்பரோ
மலையை தகற்பரோ இவர்கள் – நின்
ஆற்றலின் வலிமையை
இவர் அறிவரோ இறைவா....

விண்ணை அறிவரோ
மண்ணை தெரிவரோ இவர்கள் – உன்
பார்வைகள் தவறுமோ இறைவா...


சூரியன் சுழலுதோ
சந்திரன் ஒளிருதோ – நின்
வழிகளில் குறைகளோ இறைவா
விண் வெளிகளில் குறையுமோ
என் இறைவா.....

ஆக்கமும் தந்தாய்
அழிவையும் தருகிறாய் – நின்
அருளினில் குறையுமோ இறைவா
எமது ஆசைகள் குறையுமோ இறைவா....

செல்வம் தந்தாய்
சேதாரமும் தருகிறாய் – நின்
நன்றி மறந்தேனே இறைவா
உனக்கு நன்றி மறந்தேனே இறைவா....

அறிவையும் தந்தாய் அதை
அறியவும் வைத்தாய் – நான்
அகந்தை கொண்டேனே இறைவா
எனக்கே தெரியும் எல்லாம் என
அடங்க மறுத்தேனே இறைவா.....

நீ கொடுத்தது எதையும் நான்
நான் மறுக்கவில்லை – நான்
மறுத்ததையும் கூட நீ
மன்னிப்பாயோ இறைவா

சிந்தை தந்த இறைவா நீ
சிரமம் தந்திடாதே – எந்தை
தாய்க்கும் நீ
மன்னிப்பருள்வாய் இறைவா.....

எந்தன் சக மனிதம்
காத்தருள்வாய் இறைவா – எம்
சொந்தங்களின் சுகங்கள்
காத்தருள் இறைவா.....

அண்டிப் பிழைப்போர் தனை
அன்றாடம் ஆக்கிடு இறைவா – நீ
மண்டியிடுவோற்கு மன்னிப்பருள்வாய் இறைவா....

பொங்கும் அலைகள் வேண்டாம்
தாங்காத பூகம்பம் வேண்டாம் – நச்சு
ஜந்துக்களும் வேண்டாம் இறைவா
எங்களை பிய்த்து எறிந்திடாய் இறைவா
எம் துக்கம் தெரியாமல் தூங்கவைப்பாய் இறைவா.....

நொடிப்பொழுதில் நின் திருவழியில்
ஒன்று சேர்ப்பாய் இறைவா...
எமை உன்பால்
ஒன்றாய் சேர்ப்பாய் இறைவா.....

___ அபூ பஹத் ______

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...