Apr 10, 2012

கஃபாலத்து.......



கஃபாலத்து.......
------------------------

ஈரேழு வழுஷமாச்சி
இழமையை நானிழந்து - இப்போ
ஈராறு மாசமாச்சி
இகாமா தானிழந்து..!

வேலைக்கும் போவயில
என் கஃபீலையும் காணயில
விசா அடிக்க கொடுத்த பைசா
விவரமும் தெரியயில....!

சிவப்புண்ணும் மஞ்சைண்ணும்
புதுசு புதுசா சொல்றாங்க - என்
கலறு என்னேண்ணு
எங்க போய் நான் பாற்க.....

ரீ எண்ட்ரி கெடச்சாத்தான்
பட்ட கடன் தீர்க்க முடியும்- பைனல்

எக்ஸிட் ஆயிட்டா விசா வேற
எடுக்கவேணும்....

கஃபாலத்து விசாவால
காப்பாத்த வழியில்லை - என்
குடும்பத்தில கடமைகள்
ஒண்ணுமே ஒதுங்குதில்ல....

வேலைக்கு போனாலோ
ஏஜெண்டு கஃபாலத்து - வேலைக்கு
போகலைண்ணாலும்
கஃபீலுக்கு கஃபாலத்து....

காலம் கொறய ஆச்சு
கம்பனி விசா கேட்டு - வேலை
கெடச்சாலும் முதலாளி
தரமாட்டான் றிலீசு...

வச்ச வீடும் பாதியில
மச்சான் வீடும் பாதியில
இருக்கிற நெலமையில
ஒண்ணுமே ஓடயில....

அஞ்சிக்கும் பத்துக்கும் வழி
சொல்ல கேக்குறேன் நான் - றிலீசுக்கு
அவன் ஐயாயிரம் பத்தாயிரம்
கேட்டாக்கா எங்க போவேன்....

சாப்பாடு றூமோட
ஒரு வேலை கெடச்சாலும்
அதுக்குப் பின்னால
ஆயிரம் பேர் அதுக்கு மேல.....

ஊரு ஊருண்ணு மனசெல்லாம்
கெடக்குதங்கே - நிலைமை
நெனச்சாக்கா பாரு பாருண்ணு
வேலையத்தான் தேடுதுங்கே......

நல்ல காலத்தில படிச்சிருந்தா
போதும்தான் - பாவி
என் கதி அதோகதியாயிடிச்சி...

உண்டோ இல்லியோ
உள்ள தொழில் போதுமென்று
உள்ளூரில் வேலை செய்து
உள்ளபடி வாழ்ந்திடலாம்...

எல்லாம் சேர்த்து வச்சி
கையேந்தி நிக்கிறேன் நான்
எல்லாம் வல்லவன்தான்
ஏதாதவது செய்யவேணும்.....

அன்புடன்

அபூ ஃபஹத்

1 comment:

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...