Jan 4, 2014



பெரிதாக ஒன்றும்
சொல்வதற்கில்லை
என் சினேகிதியே...

புது வருடம் பிறந்திருக்கிறது இன்று,

கழிந்த வருடம் இதே போன்றொரு தருணம்தான் உன்னை நான் வாழ்த்த மறந்தேன். இரண்டு தினங்கள் கழிந்து உன் அலைபேசியிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தாய், அந்த எண்ணில் பல முறை தொடர்பு கொண்டேன், விபரம் இல்லை, மீண்டும் மீண்டும் மிஸ்டு கால்.... நான் களைத்துப்போயினேன்....

பரிதாபப்பட்டாயோ என்னவோ, ஒரு நாள் முழுக்க தொல்லையான நட்பை மீண்டும் தொலைக்க விரும்பாமல் அலைபேசியை எடுத்து ஹலோ என்றாய்...

வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த மிருகத்தின் பெயரை எந்த தயக்கமுமின்றி வாரி இறைத்தாய்...

என்ன செய்வது நட்பின் முன்னால் மகிழவேண்டியிருந்தது, வாழ்த்து சொல்லாததற்காக இவ்வளவு கோபம் காட்டுகிறாய் என்று தெரியாமல் போனது...

சகட்டு மேனிக்கு அலப்பரை செய்து புது வருடம் முதல்நாள் முதல் கடைசி நாள் வரை புதுப்புது பெயர் போட்டு கொண்டாடித்தீர்த்தபோது வராத வெறுப்பா இப்போது வந்துவிடப்போகிறது...

கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்கள், புது வருடத்தின் பிறப்பு இப்போதெல்லாம் டாஸ்மாக்கிலும், இரவு விடுதிகளிலும் ஆனபோது இங்கே நோயினாலும், அடுத்த வேளை சோற்றுக்கும், அடுத்த வேளை மருந்துக்கும், இருக்க இடம், குளிரில் போர்த்திக்கொள்ள ஆடை, என எதுவுமில்லாத சாதி மத இன மொழிகள் தாண்டிய ஒரு சமூகம் தெருவிலும் முகாம்களிலும் இருந்துகொண்டிருப்பதை நினைத்தால் புது வருடம் என்ற ஒன்று சாதாரணமாக இருந்துவிட்டது...

உனக்கு மட்டுமல்ல, எனது அன்புச்சினேகிதர்களுக்கும் நான் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை....


நான் ஏதோ பெரிய கதையோ, சட்டங்களோ, விலக்குகளோ, அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்றெல்லாம் பார்த்து வெறுமனே இருக்கவில்லை...

மனதுக்குள் உனக்காக நான் பிரார்த்தித்துள்ளேன்....

நீ முடிந்தால் நம்மை தெரிந்த நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும்போது அவர்கள் கொண்டாட்டங்களை ஏதேனும் ஏழையின் வீட்டில் சென்று அவர்களோடு இருந்து அவர்களின் வாழ்க்கையை ஒரு தினம் முழுக்க அனுபவித்து அவர்களுக்காக ஏதேனும் நற்சேவை செய்து திரும்பி வரச்சொல்...

குறைந்த பட்ஷம் மதுவுக்காக செலவிடும் பணத்தையாவது இவ்வழியே செலவிடச்சொல்...நீயும் சேர்ந்து செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....


இறையருளால் மாதம் யாராவது ஒருவருக்காவது நானும் எனது நண்பர்களும் எங்களால் இயன்ற ஏதேனும் உதவி செய்துவிடுகிறோம்...




மன்னித்துவிடு.....

நீயும் நமது நண்பர்களும் எங்கே இருந்தாலும் உனது இந்த நாளுக்காகவும் எல்லா நாட்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்....

நட்போடும் வாஞ்சையோடும்..

அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...