Jan 4, 2014




நீ சொன்ன அதே
நிறுத்தத்தில்தான் இறங்கினேன்
அங்கே நீ இல்லை - உன்னை
தேடி வந்தது தெரிந்து
வெறுமனே சிலர் வேடிக்கை
பார்ப்பதுபோல் தெரிந்தது....


சிறிது தூரத்தில் வேறு
ஒரு பேருந்து வருவதைக்கண்டு
நான் அங்கேயே
நின்றுகொண்டேன் - ஒருவேளை
நீ நிற்பதாய் சொன்ன
அதே இடத்தில் என்னை
தேடலாமல்லவா.....

இன்னும் சிலர் என்னையே
வெறித்துப்பார்ப்பதுபோல்
உணர்கிறேன் - அந்த பேருந்தில்
நீ இல்லாமல் போனதை
நான் வெறுப்பாய்
பார்த்துக்கொண்டிருந்தேனே....

யாரோ ஒருவருக்காய்
எப்போதோ தேடி நின்றதை
இப்போதும் நினைத்துப்பார்க்க
இயல்கிறது இன்னும்
மாய்ந்து போகாத அதே
பேருந்து நிறுத்தத்தில்
யாருக்காகவோ எதற்காகவோ
காத்து நிற்கும்போதும்
மனதை விட்டு விலகாத
அதே வெறித்த முகங்களும்
வெறுமையின் எனது பார்வையும்.......

      ........



No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...