Jan 4, 2014



உனது தோள்களை
பலப்படுத்து - உனது
கால்களை ஸ்திரப்படுத்து
உனது கைகளை
எந்நேரமும் அகலமாய் வை
உனது மனதை விஷாலமாக்கு

வயோதிகத்தின் கழைப்பில்
ஏழ்மையின் இயலாமையில்
நோயின் வலியில்
எந்நேரமும் உன்னைத்தேடி
யாரும் வரலாம்

உனக்கு பிடித்தமானவர்கள்
உனது உறவினர்கள்
உனது நண்பர்கள்
நானும் வரலாம்

உன்னைப்பிடிக்காதவரும்
உனக்குப்பிடிக்காதவரும்கூட
வருவதற்கான சாத்தியம் உண்டு

இவை அனைத்தும் உன்
வாழ்நாளில் எப்போதும்
நிகழாமலும் போகலாம்
எனினும் நீ மனதை
விஷாலமாக்கு ...


உன்
இதயத்தை பாவத்திற்கு
விற்றுவிடாமல்
பரிதவிப்பிற்காக கொஞ்சம்
வைத்துக்கொள்......

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...