Feb 4, 2014


கட்டுச்சோறு.
***************

தூரமா போறா மோனேண்ணு
கேட்டா உம்மும்மா - பக்கந்தான்ணு
நான் சொன்னப்பொறவு
எங்கேண்ணு கேக்கைல உமும்மா...

வறுக்கத்தா போய்ட்டு வாண்ணு
சொன்னா வாப்பும்மா- வெளியில
போற புள்ளைய என்னவுள்ள
கேள்வி இதுண்ணு கொஞ்சம்
தேச்சியப்பட்டா வாப்பும்மா....

விடியக்காலம் எழும்பி
ஒலை போட்டு தேங்கா
பால் ஊத்தி கொதிக்க வச்சி
வத்த வச்சி வச்சிருந்தா உம்மா....

அம்மி கல்லுல எனத்தையோ
தல்லுற சத்தம் கேட்டுத்தான்
நானே எழும்புனேன் - வெளிய வந்து
கண்ணு தொறந்து பாத்தா
தாத்தா சம்மந்தி அரச்சி வச்சிருந்தா....

பல்லு தேச்சி மூஞ்சி கழுவி
குளிச்சி முடிஞ்சி ஓடி வந்து
உடுப்பு போடும்போ உம்மா
நியூஸ் பேப்பர் தேடீட்டிருந்தா...

கழுவி போட்ட சட்டையை
அசையிலயிருந்து எடுக்க
போவும்போ வாழையெல
வெட்டீட்டிருந்தா சின்னம்மா...

தல சீவி முடிஞ்சி பவுடர்
டப்பா தேடும்போ மாமியும்
தாத்தாயுமா சோறும்
சம்ந்தியும் பொதிஞ்சிட்டு
நிண்ணதையும் பாத்தேன்....

உடுப்பு உடுத்து தயாராயி
பேக்கெடுத்து தோள்ல
போட்டுட்டு ஷூ போடும்போ
எல்லாரும் வீட்டுக்கு மின்ன உண்டு....

வெளிய எறங்கிட்டு வாச்சை
பாத்தா பஸ்ஸுக்கு நேரமாச்சி
எல்லார்ட்டையும் செல்லீட்டு
ஓடிப்போவும்போ வாப்பா
செலவுக்கு வச்சிக்கோண்ணு
கொஞ்சம் பணமும் தந்துது....

துருசமா போவாத
நிதானமா போடாண்ணு
யாரோ செல்லி கேட்டுது
கேட்டது பாதி கேக்காத்தது
பாதீண்ணு பஸ் ஸ்டாண்டுக்கு
ஓடிப்போய் பஸ்ஸுல ஏறியாச்சி...

பஸ்ஸு பொறப்பட்டு
போகும்போ மின்னுக்கு
ரோட்டுல தம்பி ஓடி வாறான்
எனக்குள்ள சாப்பாட்டு பொதி
கையில வெச்சிண்டு
தொரத்தி வந்தான்...

வத்தவச்ச தேங்காச்சோறும்
எரிவுள்ள தேங்கா சம்மந்தியும்
எனக்கு குடுத்து வக்கைலதான்
பிரச்சினையில்லை...

ஆனா
உம்மா கரைவாளே
புள்ள என்ன செய்வானோண்ணு
அதை நெனச்சித்தான்
மனசு கலங்குனேன்....


அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...