Feb 4, 2014

குடியரசு தினம்
-----------------------


குடியரசுகள் ஆங்காங்கே
குடிமுழுகிப்போகிறது 
ஏழ்மையின் ஆழங்களை 
நிரப்பஇயலாமல்- இதோ
என் தாய்நாடு தலை 
நிமிர்ந்து நிற்கிறது....

குடிமக்களின் குடலைக் கட்டி
குடி மகன்களை குடிக்கவைத்து
காலடியில் சேர்த்துவைத்த
காந்தியின் தலைகள் பதித்த
ரூபாய் நோட்டுக்களில்
காலூன்றி நிற்கிறது
தலை குனிந்த எனது குடியரசு......


கிழக்கும் மேற்கும்
வெறி பிடித்த நாய்களுக்கு
இரையாகும் ஏழைகள்
வடக்கும் தெற்கும்
சித்திரவதையின் தியாத்தழும்புகள்
சுமந்த வீரமகன்கள்
மத்தியில் மானம் கெட்டது
என் மண்ணின் குடியரசு...

பணக்கார காலடிகளில்
மிதிபடும் பணக்கட்டுகளில்
ஏழ்மையில் இறந்துபோன
பிணங்களின் வாசம்....

விற்று வரவுகளில் இரத்த வாடை
ஏற்றுமதிகளில் செத்த வாடை
கட்டி வைக்கப்பட்டிருக்கும்
அலுவலக கோப்புகளில்
இன்னும் தூங்குகிறது
வட்டிக்கணக்குகளாய்
ஏழையின் குடியரசு....

இத்தனைக்கும் மத்தியில்
வாழ்த்தித்தான் ஆகவேண்டும்
என் நாடு பொன் நாடு
என் மக்கள் மேன் மக்கள்
என் தேசம் நிறை பாசம்

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...


அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...