யாசித்தலின் மொழி
என் வாசலில் நீட்டி
ஒலிக்கிறது அம்மா என்று.......
நான் சில்லறைகளை
தேடுகிறேன் - என்
மனைவி நேற்றைய இரவில்
மிச்சமாகிப்போன
ரொட்டித்துண்டுகளையும்.....
முப்பதும் முப்பதும் அறுபது
நாளிகை நேரவும் பிச்சக்காரன்
தொல்லைதானா - உள்ளிருந்து
பாட்டியின் சப்தம்.......
என் குழந்தை மட்டும்
அடம் பிடிக்கிறது - எங்கிட்ட குடு
நான்தான் குடுப்பேன்
நானேதான் குடுப்பேன் என்று.....
பழையதாயினும்
சில்லரையாகினும் வயோதிக
வெறுப்பின் அர்ச்சிப்பாகினும்
எதனையும் பொருட்படுத்தாமல்
நிமிடத்தில் கவர்ந்துசெல்கிறான்
என் குழந்தையின் அன்பையும்
புன் சிரிப்பையும்.........
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...