Nov 20, 2010

மெளனங்கள்..

தொலைபேசியில் நானும் நீயும் 
சில மவுனங்களோடு

பல கேள்விகளையும்

சில விடைகளையும்

பரிமாறிக்கொள்கிறோம்..



நிஷப்தம் நமது உறவின்

மிகப்பெரிய பலம்

நமது தொலைபேசிகள் 

அதிகம் சுவாசித்தது

நமது மூச்சுக்காற்றைத்தான்...



உன்னைச்சுற்றியும்

என்னைச்சுற்றியும் கேட்கும்

சப்தங்கள் நம் சுற்றுப்புற

வெளிப்பாடுகளை நம்மில்

திணிக்கும்போது நமது மெளனம் 

விடுகதையாகிறது...



பொருட்படாத சில சப்தங்கள்

உன்னிலிருந்து

வெளிப்படும்போதெல்லாம்

நான் என்னில் இல்லாமல் போகிறேன்...



நான் பேசும் கேட்கும்

வார்த்தைகளுக்கும் கேள்விகளுக்கும் 
 தண்ணீரில் விழும் ஒற்றை

மழைத்துளியாய் ஒரே வார்த்தையில்

பதில் சொல்வாய் அது

அழகை விட அழகானது...



பக்கத்து அறை ரகசியங்களை

ஒட்டுக்கேட்பது போல் உன்

உள் உணர்வுகளை அறிவதர்க்காய்

மிகத்துல்லியமாய் என் காதுகளை

தொலைபேசியில் வைப்பேன்

சில தொலைந்து போன மகிழ்ச்சிகள் கூட

திடீரென என்னை வந்து

ஒட்டிக்கொண்டதாய் உணர்வேன்..



 மிகப்பெரிய மெளனத்தைக்கூட

சின்ன சிணுங்கல்களால் கலைக்கும் 

குழந்தையைப்போல் அடிக்கடி

மெல்லமாய் நீ சிரிப்பதும் நமது

நிஷப்தத்தின் அலங்காரம்....



உன்னைப்பற்றி நானும்

என்னைப்பற்றி நீயும்

மெளனமான தேடல் தெடர்கிறது..



உன்னில் எனது தேடல்களின்

ஆதங்கங்கள் உன் காது மடல்களை

தொடும்போது நீ சிணுங்குகிறாய் எனது

தொலைபசி சிரிக்கிறது....



அறியத்தருவது மெளனத்தினூடே 

என்பது அனேகர் அறிந்ததில்லை

எனினும் எனதும் உனதுமாகிய

இரகசியங்களை அதிகம்

அறிந்திருப்பது நமது தொலைபேசிகள்தான்....



ஒவ்வொரு முறை மரணித்து

உயிர்பெறும்போதும் எதையோ

எதிர்பார்த்து காத்திருப்பதுபோல்

நம் மெளனங்களை எதிர்நோக்குகிறது

நமது தொலைபேசிகள்..

கூடவே நமது மூச்சுக்காற்றையும்...



அபூ ஃபகத்

3 comments:

  1. அருமையான கவிதை.இதயத்தில் இறங்கும் எழுத்துக்கள் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. comment verification ஐ எடுத்துவிடவும்

    ReplyDelete
  3. நன்றி சாதிக் அலி...

    ReplyDelete

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...