எப்போதோ எழுதிய வரிகள்
**************************
உன் பார்வை
பயப்படுத்துகிறது - உன்
விழியால் விழுங்கிவிடுவாயோ
என பயப்படுத்துகிறது.....
என் இதயம்
படபடக்கிறது - நீ
உதிற்கும் வார்த்தைகள்
என்னவாக இருக்குமென்று....
நான் இன்னும்
தூங்கவில்லை - என்
இமைகள் மூட
மறுப்பதால் சொல்கிறேன்.....
இன்னும் உயிர்
இருக்கிறது - என்
இதயம் துடித்துக்கொண்டே
இருப்பதால்
சொல்கிறேன்....
யாரைக்கேட்டு
என் எதிரில் வந்தாய் - என்
பாதிப்புக்கு யார்
பதில் சொல்வார்......
உன் கண்களை
தந்துசெல் - நான்
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன்...
உன் இதயத்தை
தந்துசெல் - நான்
வாழ்ந்துகொண்டேயிருப்பேன்....
நான் கற்றுமுடித்த
பாடங்களில் இதுவரை
தோற்றதே இல்லை - இதோ
காற்றில் வரும் உன்
வார்த்தையில் தினம் தினம்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.....
நினைவுகளை என்னில்
நெய்து செல் - உன்
கனவுகளாய் நான்
வாழ்ந்துகொள்வேன்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...