Oct 8, 2013

வெளிநாட்டில் குடும்ப ஒன்றுகூடல்கள்.....


வெளிநாடு வாள் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும்...
***************************************************
குடும்ப ஒன்றுகூடல்கள் பற்றிய ஒரு பார்வை.

KIFA பற்றிய சில கேள்விகள் என் நண்பர்களிடமிருந்தும், KIFA வின் எந்த நிகழ்சியிலும் இதுவரை பங்குகொள்ளாத என்னைத்தெரிந்தவர்களிடமிருந்தும் சில நக்கல் விமர்சனங்கள் வருவதுண்டு...அது அவர்களின் குற்றமல்ல... முன்பு நானும் இதபோன்றே விமர்சிக்கவோ, கிண்டல் செய்வதோ உண்டுதான்..

சிலர் நான் KIFA-மீட்டிற்கு செல்வதைக்கூட கொஞ்சம் வெட்கத்தோடு உண்ரந்துகொள்கிறார்கள்.

ஆனால் அதன் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதற்கு ஒன்றுமே இல்லாத அந்த நிகழ்சிகளில் பங்கு கொள்ளும் குடும்பங்களின் குழந்தைகளிடம் கேட்டால் அந்த ஒரு நாளை பற்றி ஒரு நூறு கதைகள் சொல்லி தங்களுக்குள் மகிழந்துகொள்வதை எட்ட நின்று பார்த்தால்தான் அதன் எதார்த்தம் அல்லது அதன் தேவை புரியும்...


சகோ. Mohamed Sainuddin B, சகோ. Bava Sulaiman A,  இதுநாள் வரை எங்களோடு எல்லா KIFA MEET -லும் எங்களோடு சரி சமமாக இருந்து, குழந்தைகளுக்கு குழந்தையாய், பெரியவர்களுக்கு பெரியவராய், என்னைப்போன்ற சிறியவர்களுக்கு சிறியவராய் நகைச்சுவைக்கு நகைச்சுவையாய் இருந்த Ahmed Shajahan அவர்கள் போன்றவர்கள் தந்த அந்த ஒரு நாள் சந்திப்புகள் பல கதைகளை சொல்லும்...


வலிகளையும், வேறு வேறு மனிதர்களின் உள்ளக்குமுறல்களை, சந்தேஷங்களை, விளையாட்டுக்களை, நாடு மற்றும் ஊர் சார்ந்த சமூக தொண்டுகள் பற்றிய தகவல்களை, அரசியல், மற்றும் மார்க்கம் பற்றிய வேறுபட்ட கருத்தாடல்களை ஆங்காங்கே குழுமியிருந்து பகிரந்துகொண்டுவிட்டு,

கடைசியில் விளையாட்டாய் சில விளையாட்டுப்போட்டிகள் வைத்து ஏறத்தாள குழந்தையாகவே மாறும் அந்த விலை மதிக்கமுடியாத தருணங்களை ஏகாந்த வாழ்க்கை வாழும் யாராலும் யோசித்துப்பாற்கவே இயலாது...


எப்போதும் எல்லோரும் போகிறோம், வருகிறோம், ஆனால் அதனை ஒன்றுதிரட்டி ஒரு குடையில் கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக முடிப்பது என்பது மிகவும் சிரமம்.... அதற்காகவே சகோ. செய்னுத்தீன் சாஹிபையும் பாவா சுலைமான் போன்றோர்களை எத்தனை பாராட்டினாலும் தீராது...




வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களின் தினப்படி வாழ்க்கை என்பதே ஒரு வகையில் ஜாடிக்குள் அடைத்து வைத்து வளற்கப்படும் தங்க மீன்களின் வாழ்க்கையேதான்....


மனைவி பக்கத்தில் இருந்தால், பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் நலம் என்று நினைக்கும் நாம் அவர்களின் இயந்திரமயமான இந்த நகர வாழ்க்கையில் அவர்கள் அதிகம் விரும்பும் ஊர் வாழ்க்கை போன்ற ஒரு ரிலாக்ஷேஷனாக மாற்றுவதற்கான ஒரு தருணத்தை பலபொழுதும் நாம் சிந்திப்பதில்லை....


எல்லா வாரமும் விடுமுறை நாட்களில் நண்பனை பாற்கவேண்டும், அல்லது மாமாவை, காக்காவை பாற்கவேண்டும் என்று நினைக்கும் என்போன்ற பேக்ஷலர்கள், குறோணிக் பேக்ஷலர்கள், குடும்பத்தோடு இருப்பவர்களை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு செல்வதால், அவர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, அல்லது அவர்களின் ஒரு ரிலாக்ஷேஷன் கிடைப்பதற்காக வெளியே செல்வதை தடை போடுகிறோம் என்றே சொல்லலாம்...


நாம் அவர்கள் வீட்டில் சென்று மணிக்கணக்கில் பேசிப்பேசி இருந்து அவர்களின் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதைவிட அந்த குழந்தைகளின் ஆசையை, அவர்களுக்கு சுதந்திரமா்க விளையாட கிடைக்கும் ஒரு மாலை நேரத்தை சூறையாடுகிறோம் என்றே சொல்லலாம்...




அப்படியென்றால் பேக்ஷலர்கள் என்னதான் செய்வது..?? மன்னிக்கவும்,


குடும்பமாக இருப்பவர்களை முடிந்தவரையில் நாம் அவர்கள் குழந்தைகளோடு விளையாடும், அல்லது நேரம் செலவிடும் இடத்திற்கு அவர்கள் அனுமதி பெற்று சென்று பாற்கலாம், அடுத்து வீட்டிற்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும், நிறுவனத்தில் வேலையிலும் இருந்து புழுங்கிப்போன நாம் இன்நொரு வீட்டின் அறையை ஆக்கிரமிப்பதைவிட புத்துணற்சியூட்டும் பூங்காக்களில் அல்லது, கடற்கரைகளில் அவர்களோடும் அவர்களின் பிள்ளைகளோடும் நேரம் செலவிடலாம்....



ஒரு வீட்டை அடைந்தாலே அவர்களின் வரவேற்பு அறையில்முதலில் கேட்கும் நலம்தானா என்ற கேள்வியி்ல் ஆரம்பிக்கிறது நமது மன அழுத்தத்தின் முதல் வாயில்படி...அதிகமானவர்களின் மனதில் ஏதோ ஒரு சோகம், நிறை மாத கற்பிணியாக வலியோடு நின்றுகொண்டேதான் இருக்கும், அதனை இறக்கி வைக்க அங்கே நினைத்தால் அடு்தது இருக்கும் மற்றொருவரோடும் அது பகிரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அது அப்படியே வலி வழிமாறி வேறு வேறு கதைகளாக பயணித்து பின் மிக மோசமாந மன அழுத்தத்திற்கும் அதன் வாயிலாக பல ஆபத்துக்களுக்கும் வழி வகுக்கும்,

பின் நம்மிடையே இருந்த அழகிய நட்பு, அல்லது சகவாசம் தேவையற்ற புரிந்துகொள்ளாமையினால் அறுந்துபோகும். இவைகள் அனைத்தையும் களையும் முகமாகத்தான் நாம் குடும்பமாக இருப்பவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகமும் வெளியே வைத்துக்கொள்வது நல்லது என்று சொல்கிறேன்....



ஊரில் இருக்கும்போதான பிரச்சினைகள் இல்லை இங்கே வெளிநாடுகளில் வாழும்போது வருவது. மிக மோசமான பிரச்சினைகள் வந்து நல்ல உறவுகள் கூட தொடர்பற்று பல வருடங்களாக பேசால் இருக்கும் நிலைகள் ஊட இங்கே இருந்துதான் வருகிறது.

நாம் எப்போதும் மறந்துபோகும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது குழந்தைகளின் வாழ்க்கை. கூட்டுக்குள் புதிதாக வாங்கி விடப்பட்டிருக்கும் கோழிக்குஞ்சைக்கூட அவ்வப்போது நாம் அதிசயித்து பார்த்துக்கொள்வோம். அவைகளுக்கு ஒரு நாளில் சில மணி நேரங்கள் சுதந்திரமாக மேய அணுமதிப்பதுண்டு. மீண்டும் கூடையால் மூடி வெளியே இருந்து அதிசயிப்போம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நாம் குழந்தைகளை அப்படி பாற்கிறோமா..?? அவர்களின் குசுருதிகளை அதிசயித்தோமா...?? அவர்களுக்கு அப்படிப்பட்ட குறும்பு செய்வதற்கான அழகிய தருணங்களை  உருவாக்கி கொடுத்தோமா...? அவர்களுக்கு நமது நட்பு வட்டாரத்திலோ, சொந்த பந்தங்களிலோ நண்பர்களை ஏற்படுத்திக்கொடுத்தோமா...?
அப்படி அவர்கள் பழகிய நண்பர்களோட குறைந்தபட்ஷம் வாரத்திற்கு ஒருமுறையேனும் பரஸ்பரம் பேசிப்பழக வாய்ப்பேற்படுத்திக்கொடுத்தோமா.....?? இல்லவே இல்லை...


பணம், பணம், பணம்.. என்ற ஒற்றை வேட்டைக்குப்பின் மறந்துபோவது குழந்தைகளின் மகிழ்ச்சி..... ஆனாலும் நாம் நமது தேவைக்கான மகிழ்ச்சிக்காக நமது நண்பர்களை சந்திப்பதற்கோ அல்லது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து பார்த்து சந்தோஷிப்பதற்கோ மறப்பதோ இல்லை... என்ன ஒரு கேவலமான சுயநலம்.....


ஆக மேலே குறிப்பிட்ட ஒரு நாள் சந்திப்புகள் வெறும் சாப்பாடு அல்லது பார்ட்டி அல்லது கெளரவம் சாரந்ததே அல்ல... மாறாக நமது குழந்தைகளுக்கான ஒரு மகத்தான ஒன்றுகூடல் அல்லது குழந்தைகள் பழகிப்பயிலும் அழகிய தளம். A wonderful platform for our children's get together...



மனோவியல் ரீதியாக நாம் படித்தறிவதைவிட ழகி அறியவேண்டிய விஷங்கள் நிறையவே இருக்கிறது.

சகோதரர் Colachel Mj Hussain அவர்களின் வற்புறுத்தலின் பேரில் நான் கலந்துகொண்ட முதல் KIFA MEET எனக்கும் மிக மோசமான போர் அடிக்கிற ஒரு அனுபவத்தை தரும் என்றே நினைத்தேன்...


சவூதி அரே்பியா வந்தபின் இன்னும் சொல்லபேனால் வளைகுடாவில் ஏறத்தாள வெறும் 12 வருடங்கள் அனுபவத்தில் எனக்கு பல விதமான புதிய மாறுதல்களை தந்ததும் நிறைய நண்பர்களை நல்ல மனிதர்களை சமம்பாதிக்க இயன்றதும் முதல் KIFA MEET -ற்குப்பின்தான்...

ஆக நாம் ஒன்றை விமர்சிப்பதற்கு முன் அவைகளை பற்றிய சரியாக தெரிந்துகொள்வேண்டியதும் நமது கடமையாகும்...



சகோ. JAHIR HUSSAIN அவர்களுக்குத்தான் அத்தனை நன்றிகளும் கூறவேண்டும்...

எனது வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணமான மகத்தான மனிதர்களை கொண்டது KIFA எனும் குடும்ப சங்கமம்...



மனோவியல் ரீதியான எனது பல கருத்துக்களை ஒரு தந்தை என்ற இடத்திலிருந்து உங்களோடு பகிர்ந்துகொண்டேன்...

படிக்க கொஞ்சம் சிரமமாகவே இருக்கலாம்... ஆனாலும் சகித்துக்கொள்ளுங்கள்..


நேசத்துடன்


அபூ ஃபஹத்

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...