Nov 10, 2011

சேட் றூம்.....

"ஹாய்" என்றான் -நானும் தான்
"ஹாய்" சொன்னேன்
நொடிகளில் அடுத்த கேள்வி
"எப்படி இருக்கீங்க" என்று...

யோசிக்கவே இல்லை நான்
"நலம்" என்றேன் - நீங்கள்..?
என்பதற்குள் அடுத்து வந்தது
கேள்வியா..? பதிலா.?

சுவாரஸ்யமான அந்த வரிகளுக்கு
என் இதயம் பதிலை மட்டும்
சொல்லச்சொன்னது - ஏன் என்ற
கேள்வியை கேட்க அனுமதிக்கவே இல்லை....

"நீங்கள் இருக்கீங்களா..?""
அடுத்த கேள்வி - பரிச்சயமில்லாதவன்
ஆனால் மிகவும்
பரிச்சயமான வார்த்தைகள்..

எனதாகிய சில கேள்விகளை
அந்த வார்த்தைகள் அலட்சியப்படுத்தின
என் மனம் நொடிப்பொழுதில்
சில பல கேள்விகளை தாண்டி
என்ன செய்றீங்க என்றது...

யாரென்று கேட்கவுமில்லை,
எங்கிருந்தென அறியவுமில்லை,
ஆண் என தெரிந்தபோது
புகைப்படத்தின் அழகு மட்டுமே
கண்ணில் நின்றது.....

நல்ல பெயர் என்ற அவனின்
பாராட்டு வைரங்களாய்
மின்னியது - என் விரல்கள்
அளவு கடந்து முத்தமிட
துடித்தது அந்த போக வரிகளை....

விரல் நுனியில் நகங்கள்
பளபளத்தன - பற்களின் இடையே
விறைத்தன நகங்கள்
கடித்து துப்பிய நகங்களில் இரத்தத்தின் நிறம்
அடுத்த வரியை எதிர்பார்க்கும்
இதயத்தின் சிதறல்கள்.....

""ஓவர்சீஸ் ப்றாஜக்ட் ""
புதிய வரிகள் - ஆனால்
வெளிநாடு பற்றிய வார்த்தைகள்
ஜிவ்வென ஏறியது எனக்கு
இருபது கேள்விகளை என் மனது
கேட்க மறந்தே போனது....

அவன் அழகும் எனக்கு
அவன் அறிவும் எனக்கு
என நானே அனுமானித்த
அழகிய உலகமானேன்....

இன்னும் கொஞ்சம்
புதியவளானேன் - ஒரு
பழைய கேள்வியை புதிதாய்
கேட்டேன்
""இப்போ எங்கே இருக்கீங்க""

"சென்னைக்கு நாளை
வந்துவிடுவேன்" -அவன் பதில்.
"நியூ யார்க் விமான நிலையம்
உண்மையிலேயே அழகுதான்.."
கூடவே ஒரு புதிய தகவலாய்...

நான் புரிந்துகொள்வதற்காகவா,
எனை அறிவிப்பதற்காகவா
எனக்கு புரியாமல் போனது அந்த பதில்....
ஆனால் அவனின் அமெரிக்கா
எனக்கு பிடித்துப்போனது.....

ஒரு பதில்
இரண்டு புரிதல்கள்...

நான் சொல்லக்கூடாத
யாரிடமும் இதுவரை எதார்த்தத்தோடு
பேசாத வார்த்தைகள் - "எனக்கு
பிடித்திருக்கிறது உன்னை...."
இது நான்...

சில கணங்கள் நான்
என்னை அறியாமல் ஆனேன்..
அவனை தெரியாதபோதும்
எனக்காய் அவனை தெரிவு செய்தேன்....

யாருமில்லை என் அருகில்
பரிசம் நானே போட்டுக்கொண்டேன்
பாசம், நேசம், பந்தம் எனக்கு நானே
ஆக்கிக்கொண்டேன்....

என் திரைகளில் சிலநிமிடங்கள்
பதில் வராததை என் விழிகள்
விளங்க மறுத்தன...
என் கண்களை நான் கோபித்தேன்....

""காத்திருப்பில் விருப்பமில்லை""
அவன் என் கண் பார்த்து
சொன்னதாய் உணர்ந்தேன் - என்
ஆட்காட்டி விரல் அவனை அப்படியே
பார்க்கச்சொன்னது...

அதனால் தானோ என்னவோ
சுயம் மறந்து தட்டச்சியது
என் விரல்கள் "'சந்திக்கலாமே"' என்று....

"கண்டிப்பாக" என்ற அவன்
வரிகளை மீண்டும் மீண்டும்
வாசித்து உறுதிமொழியாக்கியது
என் உதடுகள்......

"ஸ்பென்சரில் காஃபி ஷாப்பில்
சந்திக்கவேண்டும்"" அவன் சொன்னான்
நான் போய் சேர
ஒரு முழு நாள் பயணம் - அறியாத
ஊர் தேடி தெரியாத அவனை காண
என் வீடே, என் ஊரே யாரும் அறியாமல்
ஒரு பயணம்....

அவன் வருவதற்குள்
காஃபி வந்தது -நான்
தொடுவதற்குள் எதிரே ஒருவன்
அவ்வளவு அழகாய் இல்லை
எனினும் நான் சொல்லிவிட்டேன்....
சார் என் கணவர்
வருவார் என்று - சிறிது
என் கண்களை சுற்றவிட்டேன்
யாரும் சந்தேகப்படவில்லை....

நான் பார்க்காத என்னவனை
தேடும் எனக்கு எதிரில் சிரிப்பவனை
பிடிக்கவில்லை....
தாடியும் வகிடெடுத்து சீவிய தலையும்
அவன் கைப்பையும்
மரியாதை செய்யவைத்தது எனினும்
அவனை அவனாய் நினைக்க முடியவில்லை.....

அதே இருக்கையில் பல
மணிகளை விழுங்கினேன்
அவன் வரவில்லை - இவன்
போகவுமில்லை,
நான் என்னவனிடம் கேட்க்க மறந்த
கேள்விகளை ஒவ்வொன்றாய் இ்வனிடம்
கேட்டேன்...

நீங்கள் யார்...?
நான் முஹம்மத் ஹயாஸ்
இது அவன்

என்னை தெரியுமா..? - இது நான்
“தெரியாது ஆனால்
இப்போது தெரிந்துகொண்டேன்...””

முதலில் தெரியாமல் என்
முன்னால் எப்படி நீங்கள்...?
மீண்டும் நான்....

இவை எங்கோ நீங்கள்
மறந்த கேள்விகள் - இது அவன்..!!
நான் மிரண்டேன்...

எப்படி உங்களுக்கு தெரியும்
எனது கேள்விகள்..??
மறுக்க முடியாத பதிலுக்கு
மறு கேள்வி வைத்தேன் நான்....

அறிவதும் தெரிவதும்
பெண்ணின் கடமை - நீங்கள்
மதி மறந்ததை நான் அறிந்ததால்
உங்கள் கேள்விகள்
என் பதிலாய் உங்கள் முன்...

உள் அர்த்தம் வைத்தான் அவன்
வார்த்தைகளில்....
அவன் வராதபோது யாருமற்று நின்ற நான்
ஏதோ அறிந்துகொள்ள துவங்கியிருந்தேன்
இவனிடமிருந்து....

தாலைவலை உரையாடல்கள் தவறு
என்று நான் சால்லவில்லை - ஒரு
பெண் வெறும் உரையாடலை நம்பி
கலந்துரையாட வருவது
அறியாமை இல்லை,
சில பல காரணங்கள் இல்லாத
தற்கொலை......

நான் மாணவியானேன் முதல்
முதலாய் ஒழுக்கம் பேசும்
ஓர் இளைஞனின் முன்னால்....

நீ தேடும் அவன் நானில்லை
உன்னோடு உரையாடியவன் மட்டுமே நான்,

அவன் வரிகள் என்னை
முதல் முதலாய் என் வீட்டுப் படிகளை
ஞாபகப்படுத்தியது....

உனது கேள்விகளை
மறக்கவைத்தவன் நானில்லை - நீ
மறந்துபோன கேள்விகளுக்கு
விடை மட்டுமே நான்....

வெறும் வார்த்தைகளில்
வாழ்க்கையை தேடிப்புறப்பட்ட நீ
கடல் தாண்ட நினைத்த நீ
காதலாய் மாறிய நீ
கண நேரத்தில் கசங்கிப்போயிருப்பாய்...

விடைகளற்ற கேள்விகளாய்
விளம்பப்பட்டிருப்பாய்...
அவன் அறுதியிட்டுக்கூறியபோது
என் வழிகள் பிழைத்திருக்குமோ என
கடைசியாய் பயந்தேன்....

வா சகோதரி..வா...
உன் தாய் காத்திருப்பாள் - நீ
பிறந்த கருவை அவள் சுமந்த சிரமத்தை
நீ வளர்ந்த முறையுடன் நினைத்து
வருந்திக்கொண்டிருப்பாள்......

முதல் முறையாய் எனக்கு
சாவதற்கு காரணம் இருந்தது - ஆனால்
நான் வாழ்வதற்காய் கேல்விகளில்லா
பதில்களும் இருந்தது....

அவன் எனக்கு முதல் முதலாய்
அழகாய் தெரிந்தான்...
பேரழகாய்...

உருக்குலையாமல் என்னை
உருவாக்கியவரிடம் ஒப்படைத்தான்...

என் தாயின் கண்களும் கண்ணீரும்
பல கேள்விகளை கேட்டது - நான்
பதில்களற்ற வார்த்தைகளானேன்....
அவன் கேள்விகளே இல்லாத
பதிலானான்...

நான் திரும்பி கிடைத்த சந்தோஷமும்
எனை கொணர்ந்த அவனின்
பதில்களின் பெருமிதமும் என்
பெற்றோரிடம் இன்னும் இன்னும் அவனை
அழகாக்கியது....

திருந்தி வந்த என்னை திரும்பாமல்
பார்கக்கவைத்து அவன் பயணமானான்
கைப்பையும், அழகிய தாடியும், வகிடெடுத்த
அந்த தலைமுடியும் என் கண்களை
இன்னும் ஒரு முறை தொலையச்சொன்னது.....

எதேச்சையாய் மறந்துபோன
எதையோ எடுக்க வந்தவன்
என் தாயிடம், என் தந்தையிடம்
ஒரு கேள்வியை வைத்து
பதிலை மீதமாக்கிச்சென்றான்....

சில மாதங்களில் அந்த அழகிய
கேள்விக்கு விடையாய் இதோ
நான் அவன் தாயின் மடியில்
அழகிய மனைவியாய்....
ஒருக்களித்த வாழ்க்கைப்பயணத்தில்....

என்றும் அன்புடன்

அபூ ஃபஹத்
எனது ஒரு சிறு கதை கவிதை வடிவில்
பிடித்திருநத்தால் பதில்களை கேள்விகளாக்குங்கள்...

சேட் றூம்

"ஹாய்" என்றான் -நானும் தான்
"ஹாய்" சொன்னேன்
நொடிகளில் அடுத்த கேள்வி
"எப்படி இருக்கீங்க" என்று...

யோசிக்கவே இல்லை நான்
"நலம்" என்றேன் - நீங்கள்..?
என்பதற்குள் அடுத்து வந்தது
கேள்வியா..? பதிலா.?

சுவாரஸ்யமான அந்த வரிகளுக்கு
என் இதயம் பதிலை மட்டும்
சொல்லச்சொன்னது - ஏன் என்ற
கேள்வியை கேட்க அனுமதிக்கவே இல்லை....

"நீங்கள் இருக்கீங்களா..?""
அடுத்த கேள்வி - பரிச்சயமில்லாதவன்
ஆனால் மிகவும்
பரிச்சயமான வார்த்தைகள்..

எனதாகிய சில கேள்விகளை
அந்த வார்த்தைகள் அலட்சியப்படுத்தின
என் மனம் நொடிப்பொழுதில்
சில பல கேள்விகளை தாண்டி
என்ன செய்றீங்க என்றது...

யாரென்று கேட்கவுமில்லை,
எங்கிருந்தென அறியவுமில்லை,
ஆண் என தெரிந்தபோது
புகைப்படத்தின் அழகு மட்டுமே
கண்ணில் நின்றது.....

நல்ல பெயர் என்ற அவனின்
பாராட்டு வைரங்களாய்
மின்னியது - என் விரல்கள்
அளவு கடந்து முத்தமிட
துடித்தது அந்த போக வரிகளை....

விரல் நுனியில் நகங்கள்
பளபளத்தன - பற்களின் இடையே
விறைத்தன நகங்கள்
கடித்து துப்பிய நகங்களில் இரத்தத்தின் நிறம்
அடுத்த வரியை எதிர்பார்க்கும்
இதயத்தின் சிதறல்கள்.....

""ஓவர்சீஸ் ப்றாஜக்ட் ""
புதிய வரிகள் - ஆனால்
வெளிநாடு பற்றிய வார்த்தைகள்
ஜிவ்வென ஏறியது எனக்கு
இருபது கேள்விகளை என் மனது
கேட்க மறந்தே போனது....

அவன் அழகும் எனக்கு
அவன் அறிவும் எனக்கு
என நானே அனுமானித்த
அழகிய உலகமானேன்....

இன்னும் கொஞ்சம்
புதியவளானேன் - ஒரு
பழைய கேள்வியை புதிதாய்
கேட்டேன்
""இப்போ எங்கே இருக்கீங்க""

"சென்னைக்கு நாளை
வந்துவிடுவேன்" -அவன் பதில்.
"நியூ யார்க் விமான நிலையம்
உண்மையிலேயே அழகுதான்.."
கூடவே ஒரு புதிய தகவலாய்...

நான் புரிந்துகொள்வதற்காகவா,
எனை அறிவிப்பதற்காகவா
எனக்கு புரியாமல் போனது அந்த பதில்....
ஆனால் அவனின் அமெரிக்கா
எனக்கு பிடித்துப்போனது.....

ஒரு பதில்
இரண்டு புரிதல்கள்...

நான் சொல்லக்கூடாத
யாரிடமும் இதுவரை எதார்த்தத்தோடு
பேசாத வார்த்தைகள் - "எனக்கு
பிடித்திருக்கிறது உன்னை...."
இது நான்...

சில கணங்கள் நான்
என்னை அறியாமல் ஆனேன்..
அவனை தெரியாதபோதும்
எனக்காய் அவனை தெரிவு செய்தேன்....

யாருமில்லை என் அருகில்
பரிசம் நானே போட்டுக்கொண்டேன்
பாசம், நேசம், பந்தம் எனக்கு நானே
ஆக்கிக்கொண்டேன்....

என் திரைகளில் சிலநிமிடங்கள்
பதில் வராததை என் விழிகள்
விளங்க மறுத்தன...
என் கண்களை நான் கோபித்தேன்....

""காத்திருப்பில் விருப்பமில்லை""
அவன் என் கண் பார்த்து
சொன்னதாய் உணர்ந்தேன் - என்
ஆட்காட்டி விரல் அவனை அப்படியே
பார்க்கச்சொன்னது...

அதனால் தானோ என்னவோ
சுயம் மறந்து தட்டச்சியது
என் விரல்கள் "'சந்திக்கலாமே"' என்று....

"கண்டிப்பாக" என்ற அவன்
வரிகளை மீண்டும் மீண்டும்
வாசித்து உறுதிமொழியாக்கியது
என் உதடுகள்......

"ஸ்பென்சரில் காஃபி ஷாப்பில்
சந்திக்கவேண்டும்"" அவன் சொன்னான்
நான் போய் சேர
ஒரு முழு நாள் பயணம் - அறியாத
ஊர் தேடி தெரியாத அவனை காண
என் வீடே, என் ஊரே யாரும் அறியாமல்
ஒரு பயணம்....

அவன் வருவதற்குள்
காஃபி வந்தது -நான்
தொடுவதற்குள் எதிரே ஒருவன்
அவ்வளவு அழகாய் இல்லை
எனினும் நான் சொல்லிவிட்டேன்....
சார் என் கணவர்
வருவார் என்று - சிறிது
என் கண்களை சுற்றவிட்டேன்
யாரும் சந்தேகப்படவில்லை....

நான் பார்க்காத என்னவனை
தேடும் எனக்கு எதிரில் சிரிப்பவனை
பிடிக்கவில்லை....
தாடியும் வகிடெடுத்து சீவிய தலையும்
அவன் கைப்பையும்
மரியாதை செய்யவைத்தது எனினும்
அவனை அவனாய் நினைக்க முடியவில்லை.....

Jul 13, 2011

மண் வேலிகள்............


கள்ளிச்செடிகளும்

பனை ஈற்கல்களால் நேர்த்தியாய்

கட்டி முடியப்பட்டஓலைக்கீற்றுகளுமாய்

நேற்றைய வேலிகள்....


இடையிடையே பூவரச

மரங்களும் முருக்கம் கம்புகளும்

கம்பீரத்தோற்றத்தில்

வேலிகளுக்கு பலமும் அழகுமாய்....


ஓலைக்கீற்றுகள் நெருக்கமாய்

அடுக்கப்படினும் நாய்களும் பூனைகளும்

தலைகளால் வளைகளை

உருவாக்காமல் இருப்பதில்லை....


வேப்ப மரங்களை வேலிகளுக்கு

நடுவே வைப்பதில்லை – அவைகள்

வேர்கள் புடைக்க ஓடி

தெருவைக்கடந்து விடுவதால்...


உயர உயர பார்த்த ஞாபகம்

இருக்கிறது இன்றும் – பக்கத்து

வீட்டு வேலியில் ஒரு இலவம் மரம்

தலை விரி கோலமாய்.....


என் வீட்டு தென்னை மரங்கள்

வேலிகளில் சாய்ந்தே நிற்கிறது - கோடையில்

நிழல் தருவதாய் தோன்றும் எனினும்

மழை நீரை வேலிகளின் வயிற்றில்

பாய்ச்சி பிய்த்து காயப்படுத்தாமலுமில்லை.....


பச்சைப்பசேலென வளர்ந்துவிட்ட

செடிகளும் கொடிகளும் வேலிகள்

இல்லையெனில் கால் நடக்க கடித்தெறியும்

ஆடுகளும் மாடுகளும்......


உடைந்த மண்குடத்தின் வட்ட

வாய் பகுதியை மட்டும் வளைகளில்

வைக்கும் வரப்பாளனின் கோபம்

நாய்களின் கழுத்தில் மாலையாய்....


கோபத்தின் உச்சத்தில் ஒலைகளை

பிறாண்டும் பூனைகள் குத்திக்கிழிப்பது

வேலிகளை மட்டுமல்ல

வீட்டம்மாக்களின் காதுகளையும்தான்.......


மறந்து போயிருக்கிறோம் நாம்

மண் வேலிகளை – மானம்

கெட்டுப்போய் நிற்கிறது மனைகள்,

நாகரீகத்தின் வளற்சி

மதிற்சுவர்களாய் பரிணமித்து

நிற்கிறது மண் வேலிகள்....


மதிற்சுவருக்காய்

அளந்து முறித்ததில் அறுந்து போனது

அண்டை வீட்டு அண்ணன்

உறவு மட்டுமல்ல - ஆண்டாண்டுகால

மண்வாசனையும்தான்...


எதிர்வீட்டு மாமாவின்

வெளிக்கதவை நேற்று நடு நிசியில்

அளந்து பார்த்தேன் – என் இரும்புக்கதவினும்

ஓரடி குறைவுதான் அதுவே

ஒரு வேலி கடந்த மகிழ்ச்சிதான்....


தெருவோரங்கள் வழி பிழைத்தன

தொட்டுத் தாலாட்டவும், தவழ்ந்தோடவும்

மடிகளில்லாமல் போனதாலும்....


வீட்டுப்படிகளை தொடும்முன்னே

மதிற்சுவர்கள் விளம்பர அட்டைகளுடன்

நாய்கள் ஜாக்கிரதையாம்....


வேலிகளில் சுதந்திரமாய் பூத்த

ரோஜாக்கள் இன்று மதிற் சுவர்களுக்குள்

சிறைக்கைதிகளாய் – ஆயிரம் மனங்களையும்

கவராமல் பூச்சூடும் பெண்டிரின்

முகங்களும் மலராமல்.....


கூட்டுப்புழுக்களாய் மாறிப்போன

மனிதர்கள் பரிமாறிக்கொள்ள

கதைகள் இல்லை – இதயங்களும்

வேலிகளும் முகவரிகளை

தொலைத்துவிட்டதால்....


விரிசல்களில் வாழும்

விருப்பமில்லா மனிதர்களைப்போல்

மண் வேலிகள் மதிற்சுவர்களுக்குள்

வாழ்வாதாரம் தேடி..................



என்றும் அன்புடன்

அபூ ஃபஹத்.

Jun 27, 2011

ஐ.டி. ஊளியன்

காதில் கடுக்கண்,
கண்ணில் கலர் லென்ஸ்,
பிருவம் துளைத்து வளையம்
காதிலும் வளைந்து....

முன்குறிப்புடன் பனியன்
பின்னங்கீற்று தெரிய பேன்ட்
பிடரியின் கீழ்வரை மயிர்
கையில்லாதவனும்
அடிக்க நினைக்கும் முகம்,

தேய்த்துப் பழக்கமில்லாத சட்டை
அதில் சும்மா இரண்டு பொத்தான்கள்
இடுப்பை இறுக்காத பெல்ட்
கர்மம் என்னத்துக்கோ என தொங்கும்
முன்னாலே...

தீய்ந்துபோன வயிறு
தேய்ந்து போன தோள்பட்டை
அதில் தூக்கு மாட்டும் அளவுக்கு
நீளத்தில் ஒரு பை,

இரண்டு புத்தகம்,
15 சி.டி க்கள்,
கிரியேஷனும் பாதியில்
இம்ப்ளிமென்டேஷனும் பாதியில்

ராத்திரியில் கப்பும்
நடு சாமம் வரை பப்பும்,
குட்டிகள் சிலநேரங்களில்
சிலருடன் - கேட்டால்
கேள் பிரண்ட்,
கேட்காவிட்டால் எந்த பெட்டோ....

நுனி நாக்கில் ஆங்கிலம்
ரோட்ல எவனாவது
பிச்சை கேட்டா மட்டும்
தள்ளக்கும் தகப்பனுக்கும்
தானா வரும்...

தூங்காம பேஸ் புக்
தூங்கி தூங்கி
பீஸிபிள் புடுங்கல்,
இதுக்கு லகரங்களில் சம்பளம்

வீட்ல பணம் கேட்டா
சாரிம்மா இனி எதுவும் கேக்காத
நான் MBA ஜாயின் பண்ணீருக்கேன்...

இவனுக்காக அம்மாபொண்ணு பாத்து வப்பா
கால் காசுக்கு தேறாத சுபாவம்
இவனுக்கு ஒண்ணேகால் கிலோ தங்கம்
கேக்கும்...

சைக்கிள்ள ஏத்தினாலே
கொய்யால பத்து தபா கழுவணும்
இவனுக்கு ஸ்கோடா கார்
கேக்கும்....

இவன நம்பி பொண்ண குடுக்கிறவன்
நேந்துதான் குடுக்கணும்
குடுக்கிறவனுக்கென்ன
பையன் ஐ.டி.யா.? வாங்குறது லகரமா
அவ்ளவுதான்...
அவன் கன்னியா..!!!
துலாமா எதுவும் வேண்டாம்...

இவன்தான்
இன்றைய ஐ.டி ஊளியன்...

எல்லாரும் இல்லப்பா
இப்படி இருக்கிற பலரைப்பற்றி
சொல்றேன்....

மனசு வலிச்சா திருந்திரு...

இல்லண்ணா
எழுதுன என்னைய திட்டீரு....

அன்புடன்

குளச்சல் ""பூ ஃபஹத்.""


காதில் கடுக்கண்,
கண்ணில் கலர் லென்ஸ்,
பிருவம் துளைத்து வளையம்
காதிலும் வளைந்து....

முன்குறிப்புடன் பனியன்
பின்னங்கீற்று தெரிய பேன்ட்
பிடரியின் கீழ்வரை மயிர்
கையில்லாதவனும்
அடிக்க நினைக்கும் முகம்,

தேய்த்துப் பழக்கமில்லாத சட்டை
அதில் சும்மா இரண்டு பொத்தான்கள்
இடுப்பை இறுக்காத பெல்ட்
கர்மம் என்னத்துக்கோ என தொங்கும்
முன்னாலே...

தீய்ந்துபோன வயிறு
தேய்ந்து போன தோள்பட்டை
அதில் தூக்கு மாட்டும் அளவுக்கு
நீளத்தில் ஒரு பை,

இரண்டு புத்தகம்,
15 சி.டி க்கள்,
கிரியேஷனும் பாதியில்
இம்ப்ளிமென்டேஷனும் பாதியில்

ராத்திரியில் கப்பும்
நடு சாமம் வரை பப்பும்,
குட்டிகள் சிலநேரங்களில்
சிலருடன் - கேட்டால்
கேள் பிரண்ட்,
கேட்காவிட்டால் எந்த பெட்டோ....

நுனி நாக்கில் ஆங்கிலம்
ரோட்ல எவனாவது
பிச்சை கேட்டா மட்டும்
தள்ளக்கும் தகப்பனுக்கும்
தானா வரும்...

தூங்காம பேஸ் புக்
தூங்கி தூங்கி
பீஸிபிள் புடுங்கணும்,
இதுக்கு லகரங்களில் சம்பளம்

வீட்ல கேட்டா
சாரிம்மா இனி எதுவும் கேக்காத
நான் MBA ஜயின் பண்ணீருக்கேன்...

அம்மா பொண்ணு பாத்து வப்பா
கால் காசுக்கு தேறாத சுபாவம்
ஒண்ணேகால் கிலோ தங்கம்
கேக்கும்...

சைக்கிள்ள ஏத்தினாலே
கொய்யால பத்து தபா கழுவணும்
இவனுக்கு ஸ்கோடா கார்
கேக்கும்....

இவன நம்பி பொண்ண குடுக்கிறவன்
நேந்துதான் குடுக்கணும்
குடுக்கிறவனுக்கென்ன
பையன் ஐ.டி.யா.? வாங்குறது லகரமா
அவ்ளவுதான்...
அவன் கன்னியா..!!!
துலாமா எதுவும் வேண்டாம்...

இவன்தான்
இன்றைய ஐ.டி ஊளியன்...

எல்லாரும் இல்லப்பா
இப்படி இருக்கிற பலரைப்பற்றி
சொல்றேன்....

மனசு வலிச்சா திருந்திரு...

இல்லண்ணா
எழுதுன என்னைய திட்டீரு....

அன்புடன்

குளச்சல் ""அபூ ஃபஹத்.""

Jun 10, 2011


கருவின் குற்றம்....

"என் உயிரினும் மேலான"
எனும் போதெல்லாம் உனக்காய்
உடன் பிறப்புக்கள் தனது
உயிரையே கொடுத்தார்கள்...

முரண்பாடுகள் முளைக்காமல்
உடன்பிறப்பின் முகங்களை
முரசொலியின் முந்தானையால்
மூடிமறைத்தாய்..

வலத்தொன்றும் இடத்தொன்றுமாய்
கவிக்கோக்களும் கவியரசுகளும்
நின் புகழ் பாட
மானும் மயில்களும்
நின் முன் ஆட திரைத்துறையாய்
மாறிப்போனது உன் வாழ்க்கை...

எமக்குத்தெரியும் இப்போதெல்லாம்
நின் புகழ் பாடாத எந்த வரிகளும்
கவிதையாவதில்லையென்று-
வரிகளோ வார்த்தைகளோ
விஷம் கலக்காமல் விஷயம்
அறியத்தருவதே எமது லட்சியம்

சுயநலத்தின் சுய ரூபம்
அரசு ஊளியன் – நின் கைகள்
அவனுக்காக மட்டும் சூரியக்கதிராய்
சுழன்று வெளிச்சம் பரப்பும்,
நீயும் அப்படித்தானே
பாட்டாளியை ஏமாற்றினாலும்
படிப்பாளியை ஏமாற்றமாட்டாய்...

பாழ்பட்ட பாட்டாளிக்கு ஒரு ரூபாய்க்கு
அரிசி கொடுப்பாய் - நின்
வீட்டில் மட்டும் பட்டை தீட்டிய
பசுமதி அரிசியல்லவா

உனது விழுதுகள்
நிமிர்ந்தால் பாரீசில் மதிய உணவு
உட்கார நேர்ந்தால் ஹாங்காங்கில்
தேநீர் விருந்து.....

எமது குழந்தைகள் இன்றும்
கையால்தான் உண்கிறது
பசுமதி ஆனாலும் பழைய சோறானாலும்
ஏனெனில் கரண்டிக்கு ஆசைப்பட
அவர்களுக்கு காரணங்கள் இல்லாததால்....

எம்மீது உனக்கு சிரத்தை போனது
உமது குடும்பம் சிறைக்கு போகிறது
உனக்கென்ன கவலை
வீரத்தம்பிகளாய் நின்
முன்னால் அஞ்சா நெஞ்சர்கள்
நின் பின்னால் தழபதிகள் – தங்கை
என்ன தரணியையே மீட்பார்கள்...


வழி பிழைத்ததோ உனக்கு..?
பெரியார் தெரியாதானாய்,
அண்ணாவின் அறிவிழந்தாய் - உன்
உதிரத்தில் முழைத்த
விருட்சங்களுக்கு மட்டும் கிளை
பரப்பினாய் அதற்காய் எம் செந்நீரை
பிழிந்தெடுத்தாய்......


முதல் முதலாய் நின்
இமை தாண்ட துடிக்கிறதோ
குளமாகிப்பான விழி நீர் – வேண்டாம்
உம் கண்ணீர் பட்டு இம்மண் நச்சுறவேண்டாம்....


ஊழல் எனும் முதல் விதையை
குளோனிங் செய்து
எமக்கறிவித்தவன் நீ – இதோ
கணம் நோக்கி நின் கால்களையே கொய்யப்போகிறது...


யாருமின்றி அன்னமுண்டு,
அன்னமின்றி யாருமில்லை
இவ்வுலகில் - அன்றே கொல்லும்
அரசனுக்கு பிழைக்கும்,
நின்று கொல்லும் இறைவனுக்கு பிழையேது....

உன் வழி பிழைத்தது யார் குற்றம்...???
வாழ்விழந்து போன எமது குற்றமா....???
ஊழல் கிளை பரப்பி நிற்கும் நி்ன்
குற்றமா..???

விழி பிதுங்கி நிற்கும்
உடன் பிறப்பிற்கோர் வழி சொல்,
இல்லையேல் வழக்கம்போல்
அவன் மீதே பழி சொல்....
அவனறியான் ஒருபோதும்
இது கருவின் குற்றமென்று......



அன்புடன்

குளச்சல் அபூ ஃபஹத்

May 4, 2011

கேரளாவும் இந்தியாவும்.....


படிப்பறிவு அதிகம் உள்ள சனம் – ஆனால்

எல்லாம் அரை குறைதான்,

உலகமே உள்ளங்கையில் என்பர் – நல்ல

விலை கிடைத்தால் விற்றும் விடுவர்..

நிலவில் கால் வைக்கும் வரை

ஆம்ஸ்ட்ராங் யாரென்று தெரியாது – கால் வைத்து

திரும்பியபோது அவன் மலையாளியோ எனும்

சந்தேகம் கேரளாவில்

இன்றும் தினப்படி சர்ச்சைதான்....

ஆழிப்பேரலை ட்சுனாமி

ஆய்ந்தடித்தபோது அழிந்துபோன மக்களில்

மலையாளிகள் குறைவாம் – இது ஒரு

மலையாளிக்கு அபிமானம்....

ஆஷ்கார் விருது அறிவிப்பு வந்தது,

கேரளாவுக்கு ஒன்றும்

இந்தியாவுக்கு இரண்டும் – அந்த

இரண்டும் கூட தந்தை வழி கேரளாதானாம்...

உலகப் பொருளாதார மையம்

தகர்ந்து வீழ்ந்தது அமெரிக்காவில் – எல்லா

மலையாள ஊடகமும் நேரலையில்

கேட்டது மரிச்சதில் இந்தியக்கார் எத்றா

மலையாளிகள் எத்தறா....

20க்கு 20 உலகக்கோப்பை

மலையாளியாய ஸ்ரீசாந்த்

இல்லாவிட்டால் இந்தியா கேரளாவிடம்

தோற்க வேண்டும்...

50 க்கு 50 உலகக்கோப்பை கிறிக்கெட்

இந்தியா கிரீடம் வென்றது –

மலையாளியாய ஸ்ரீசாந்த் பைனலில்

எறிஞ்சு, இந்தியா ஜெயிச்சு.....

ஸ்ரீசாந்தா கொக்கா....

உலகில் எந்த விருது யாருக்கு

வழங்கப்பட்டாலும் அவனின்
ஏதாவது ஒரு தலைமுறை

மலையாளியாக்கப்படும்.

தமிழனுக்கு கேரளாவில் பெயர்

பாண்டி – ஆனால் பாண்டியின்

லாறி படுத்துவிட்டால் பால் கூட

பாண்டியாடும் கேரள அடுப்புகளில்....

வளைகுடாவில் எங்கு பார்த்தாலும்

கேரள முதலாளிகள் – அவர்களின்

கணக்குகள் பார்க்க மட்டும் தமிழக

அறிவு ஜீவிகள்....

எவன் தலையை மிதித்தும்

மேலே போவான் - எந்த

தடையும் ஒரு தடையில்லை - ஆனால்

கடைசி தடையில் மட்டும் தோற்றுப்போவான்

அதைதாண்ட முடியாது, அது

அறிவுத்தடையல்லவா – அங்கே எசமானன்

தங்கத்தமிழனல்லவா.....

உயர உயரப் பறந்தாலும்

ஊர் குருவி பருந்தாகுமா –

எவ்வளவு பாரை வைத்தாலும்

மெத்தப்படித்த தமிழனைத்

தாண்ட முடியுமா...

அறிவுக்கும் பொருளுக்கும்

போர் வந்தால் பொருள்தான்

பொசுங்கிப்போகும்...

எதை விற்கவேண்டும்

என்று தெரிந்து விற்பவன் வியாபாரி...

எதையும் விற்று காசு பார்த்தால்

அவன் மலையாளி –

ஆனால் உலகம் வியக்கும் அவன்

ஒற்றுமையை

உலகம் தோற்கும் அவன் இன பாசம்

முன்னால்

உலகம் தோற்கும் அவன் அன்புக்கரம்

முன்னால்...

பாரதி கண்ட ஒற்றுமை கேரளக்கரையில்

மலர்ந்து பந்தலித்திருக்கிறது...

அன்பு காட்டினால் உயிரையும் கொடுப்பான்

மலையாளி

ஆப்பு வைக்க நினைத்தால்

மவனே உனக்கு

ஆப்பிளே தருவான் ஆப்பாக....

அன்புடன்

அபூ ஃபஹத்