Dec 25, 2013


முன்னால் இல்லையென்று

 தலையசைத்துவிட்டு
பின் திரும்பி பாற்காமல் 
ஆம் என்று இரகசியமாய்
சிமிட்டும் பிடரிக்கண்கள்
உறுத்தாமல் படுத்துகிறது....


சாத்தியமில்லாத ஒன்றில்

சாத்தியங்களை தேடும்
சகட்டுத்தனம் முன்கூட்டியே 
தீர்மானித்து தவறிழைத்து
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும்
முகங்களின் அநீதம்....

காதறுந்த துலாசில்

எடைக்கான கற்கள்
காலூன்றி நிற்பதில்லை
அநீதமும் அப்படித்தான்

நீதத்தை கொன்று சேர்த்த

சிரிப்பில் புன்னகையின்
வெளிப்பாடிருப்பதில்லை
அழிவின் எக்காளம் 
அறை முழுக்க எதிரொலிக்கும்...

சுருட்டிய உன் பாய்களில்

சோதனைகள் தொடர்கிறது - நீ
எல்லா பகல்களிலும் பாயை
மறந்துபோவதுபோல் 
பாவத்தையும் மறந்துபோகிறாய்
இரவுகளில் படுக்கை விரிப்பதுபோல்
மீண்டும் பாவமோட்சம் தேடுகிறாய்...

கண் திறந்து பார்

உன் கண்ணெதிரே 
கண்களே தெரியும் - நீ
கண்ணாடியில் பார்த்தால்
உன் முகம் பார்த்து
முகம்சுழிக்கவே இயலும்...

வெளிச்சத்தில்

முகங்களை மூடாதீர்கள்
இருண்ட அகங்களை
அது வெளிப்படுத்தும்.....

Oct 14, 2013

ஆம்..நான் பொறுக்குகிறேன்.....


ஆமாம், நான் 

பொறுக்கிக்கொண்டேயிருக்கிறேன்
உங்கள் சல்லடைகளில் அகப்படாத
விலை மதிக்கமுடியாத
பலதும் என் கை விரல்களில்
சிக்கிக்கொள்கின்றன....

நீங்கள் உபயோகமற்றதாய்

வீசி எறியும் ஒவ்வொன்றும்
எனக்கு உபயோகமாகிறது
அதனாலேயே என்
குடல்கள் ஒட்டாமல்
பார்த்துக்கொள்கிறேன்.....

இன்னும் நான்

பொறுக்கிக்கொண்டேதான்
இருக்கிறேன் - என்
பைகளுக்கும் அகப்பட்டவை
அழுக்குகள் அல்ல
அடுக்கிவைக்கப்படாத என்
அறிவின் அகத்தட்டுகள்.....

எனது உடைகளை

குப்பைகளிலிருந்தே
தேர்வு செய்கிறேன் - எனினும் 
கிடைப்பதில்  கிழிசல்களோடே
அணிந்துகொள்கிறேன் 
ஆயினும் கிழிசல்கள் மனதை
புண்படுத்தவேயில்லை இதுவரை...

சகதிகளுக்குள் விழுந்து விழுந்து 

எழுகிறேன் நான் - சறுக்கல்களால் 
செதுக்கப்படுகிறது என் வாழ்க்கை 
சில சர்ச்சைகளால் வளர்ந்துவிடும் 
அரசியல்வாதிகள் போல்....

என் பாதங்களை குத்திக்கிழிக்கிறது 

சில உடைந்த குப்பித்துண்டுகள் - எப்போதோ
உடைத்தெறியப்பட்ட மது பாட்டில்களில்
உலர்ந்து தெரிகிறது இரத்தம் 
தோய்ந்த விரலடையாளங்கள்...


கொடிகளோடு சுற்றி 

சுருட்டப்பட்டநிலையில்
 சில சேலைகள்  - இழுத்து என்
முகம் துடைத்துக்கொள்ள 
என் விரல்கள் தேடுகிறது
அச்சேலையின் தலைப்பை
அழுக்கில்தானே கிடக்கிறோம்
சேலையும் நானும்......


என் கால் பாதங்களின் கீழ்

சிவப்புக்கம்பளம் - இதிகாசம்
பறைந்த ஏகோபகர் நடந்து தீர்த்ததால்
நிறம் மாறிப்போன கெளரவ
முகங்களின்  எந்த கால்பாடுகளும் இல்லை
அழிந்துபோன ரேகைகள் போல்......

இன்னும் நான்  

பொறுக்கிக்கொண்டே இருக்கிறேன் - நான்
மூற்சையாகி விழும் வரை
என்  கைகளின் வேகம் 
குறையாதிருக்கும்வரை
தேடிக்கொண்டே இருக்கிறேன்

சகதிகளில் அகதிகளாய்

பிறசவித்து வீசப்படும்
எம்மில் வெறுப்பின் வீச்சு
உணர்வதில்லையெனினும் 
நாதியற்றுப்போன வாழ்க்கையில்
நாற்றமடிக்கிறது நீதியற்ற
அழுகிய அரியணைகள்......

ஆமாம்...

நான் செத்து விழும்போதும்
என் பிணம் சுமக்கிறது 
பொறுக்கிப்பயல் எனும் 
பிறப்பில் வைக்கப்படாத
சமூகம் பிறப்பித்த பெயர்...

இன்னும் தேடித்தேடி

பொறுக்கிக்கொண்டே 
இருக்கிறேன் - என் 
கைகளுக்குள் எப்போதாவது
அகப்படும் அந்த மா மனிதம்......



Oct 9, 2013

ஆழிப்பேரலை

ஆழிப்பேரலை
*****************


இருட்டும் வெளிச்சமும்
உள்வாங்கி ஆற்பரிக்கும்
அலைகளினின்றும்
தெறித்துவீழும் துளிகளில்
தெரியவேயில்லை உன் கோபம்....

ஏதோ ஒர் அதிகாலை
நிசப்தத்தின் வாதில் உடைத்து
கரைகளேறிப்புறப்பட்டு
இழுத்துச்சென்ற முகங்களில்
தெரிந்தது அவர்களின் உள்ளிருந்து
கடைசியாய் வெளியேறிய
மூச்சுக்காற்றின் வெளிறிய நிறம்.....

எட்ட நின்று பார்த்து
தொட்டு நின்று ரசித்து
கொஞ்சி விளையாடிய
கால்களில் யாரும் எப்போதும்
உணர்ந்திருக்க வாய்ப்பேயில்லை
சமுத்திரத்தின் கோர தாண்டவம்......

சூரிய வெப்பத்தை
சகித்துக்கொள்கிறாய் - ஏனோ
எமது வலிகளை பொறுத்துக்கொள்ள
உன்னால் இயலவில்லை
சகித்தது போதும் செத்துவிடு
என்பதுபோல் கொன்று முடித்தாய் நீ.....



அலைகளுக்குமுண்டோ சாந்தம்
கடலுக்குமுண்டோ கண்ணீர்
எண்ணங்களையும் சின்னங்களையும்
சுமந்த இதயங்களை பிரட்டி
எடுத்துத்தான் விழுங்கியது கடல்....


இரத்தம் இல்லாமல்
சத்தம் இல்லாமல்
ஏதுமறியாததுபோல்
நிதானம் கொள்கிறாயே நீ....


பயம் இன்னும் போகவில்லை
இதயத்தில் வலி இன்னும்
குறையவேயில்லை - எனினும்
இப்போதும் அருகிலேயே
நிற்கிறேன் நான் 
கண்ணீரால் நிறைந்த கடலே...



இழப்பதற்கில்லை ஏதும்
இனி என்னிடம் - நான்
மட்டுமே உள்ளேன்
ஆட்படுவதும் ஆட்கொள்வதும்
உன் தீர்மானத்திலேயே உள்ளது....



என் இரவுகளை
எனக்காய் மீண்டும்
தேடிக்கொள்ளவே வந்தேன்
ஏசித்தீர்பதற்கானதல்ல
இத்தருணம் என்பதால்
மீண்டும் விடை சொல்லாமல்
வீடு திரும்புகிறேன்.....











Oct 8, 2013

வெளிநாட்டில் குடும்ப ஒன்றுகூடல்கள்.....


வெளிநாடு வாள் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும்...
***************************************************
குடும்ப ஒன்றுகூடல்கள் பற்றிய ஒரு பார்வை.

KIFA பற்றிய சில கேள்விகள் என் நண்பர்களிடமிருந்தும், KIFA வின் எந்த நிகழ்சியிலும் இதுவரை பங்குகொள்ளாத என்னைத்தெரிந்தவர்களிடமிருந்தும் சில நக்கல் விமர்சனங்கள் வருவதுண்டு...அது அவர்களின் குற்றமல்ல... முன்பு நானும் இதபோன்றே விமர்சிக்கவோ, கிண்டல் செய்வதோ உண்டுதான்..

சிலர் நான் KIFA-மீட்டிற்கு செல்வதைக்கூட கொஞ்சம் வெட்கத்தோடு உண்ரந்துகொள்கிறார்கள்.

ஆனால் அதன் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதற்கு ஒன்றுமே இல்லாத அந்த நிகழ்சிகளில் பங்கு கொள்ளும் குடும்பங்களின் குழந்தைகளிடம் கேட்டால் அந்த ஒரு நாளை பற்றி ஒரு நூறு கதைகள் சொல்லி தங்களுக்குள் மகிழந்துகொள்வதை எட்ட நின்று பார்த்தால்தான் அதன் எதார்த்தம் அல்லது அதன் தேவை புரியும்...


சகோ. Mohamed Sainuddin B, சகோ. Bava Sulaiman A,  இதுநாள் வரை எங்களோடு எல்லா KIFA MEET -லும் எங்களோடு சரி சமமாக இருந்து, குழந்தைகளுக்கு குழந்தையாய், பெரியவர்களுக்கு பெரியவராய், என்னைப்போன்ற சிறியவர்களுக்கு சிறியவராய் நகைச்சுவைக்கு நகைச்சுவையாய் இருந்த Ahmed Shajahan அவர்கள் போன்றவர்கள் தந்த அந்த ஒரு நாள் சந்திப்புகள் பல கதைகளை சொல்லும்...


வலிகளையும், வேறு வேறு மனிதர்களின் உள்ளக்குமுறல்களை, சந்தேஷங்களை, விளையாட்டுக்களை, நாடு மற்றும் ஊர் சார்ந்த சமூக தொண்டுகள் பற்றிய தகவல்களை, அரசியல், மற்றும் மார்க்கம் பற்றிய வேறுபட்ட கருத்தாடல்களை ஆங்காங்கே குழுமியிருந்து பகிரந்துகொண்டுவிட்டு,

கடைசியில் விளையாட்டாய் சில விளையாட்டுப்போட்டிகள் வைத்து ஏறத்தாள குழந்தையாகவே மாறும் அந்த விலை மதிக்கமுடியாத தருணங்களை ஏகாந்த வாழ்க்கை வாழும் யாராலும் யோசித்துப்பாற்கவே இயலாது...


எப்போதும் எல்லோரும் போகிறோம், வருகிறோம், ஆனால் அதனை ஒன்றுதிரட்டி ஒரு குடையில் கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக முடிப்பது என்பது மிகவும் சிரமம்.... அதற்காகவே சகோ. செய்னுத்தீன் சாஹிபையும் பாவா சுலைமான் போன்றோர்களை எத்தனை பாராட்டினாலும் தீராது...




வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களின் தினப்படி வாழ்க்கை என்பதே ஒரு வகையில் ஜாடிக்குள் அடைத்து வைத்து வளற்கப்படும் தங்க மீன்களின் வாழ்க்கையேதான்....


மனைவி பக்கத்தில் இருந்தால், பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் நலம் என்று நினைக்கும் நாம் அவர்களின் இயந்திரமயமான இந்த நகர வாழ்க்கையில் அவர்கள் அதிகம் விரும்பும் ஊர் வாழ்க்கை போன்ற ஒரு ரிலாக்ஷேஷனாக மாற்றுவதற்கான ஒரு தருணத்தை பலபொழுதும் நாம் சிந்திப்பதில்லை....


எல்லா வாரமும் விடுமுறை நாட்களில் நண்பனை பாற்கவேண்டும், அல்லது மாமாவை, காக்காவை பாற்கவேண்டும் என்று நினைக்கும் என்போன்ற பேக்ஷலர்கள், குறோணிக் பேக்ஷலர்கள், குடும்பத்தோடு இருப்பவர்களை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு செல்வதால், அவர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, அல்லது அவர்களின் ஒரு ரிலாக்ஷேஷன் கிடைப்பதற்காக வெளியே செல்வதை தடை போடுகிறோம் என்றே சொல்லலாம்...


நாம் அவர்கள் வீட்டில் சென்று மணிக்கணக்கில் பேசிப்பேசி இருந்து அவர்களின் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதைவிட அந்த குழந்தைகளின் ஆசையை, அவர்களுக்கு சுதந்திரமா்க விளையாட கிடைக்கும் ஒரு மாலை நேரத்தை சூறையாடுகிறோம் என்றே சொல்லலாம்...




அப்படியென்றால் பேக்ஷலர்கள் என்னதான் செய்வது..?? மன்னிக்கவும்,


குடும்பமாக இருப்பவர்களை முடிந்தவரையில் நாம் அவர்கள் குழந்தைகளோடு விளையாடும், அல்லது நேரம் செலவிடும் இடத்திற்கு அவர்கள் அனுமதி பெற்று சென்று பாற்கலாம், அடுத்து வீட்டிற்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும், நிறுவனத்தில் வேலையிலும் இருந்து புழுங்கிப்போன நாம் இன்நொரு வீட்டின் அறையை ஆக்கிரமிப்பதைவிட புத்துணற்சியூட்டும் பூங்காக்களில் அல்லது, கடற்கரைகளில் அவர்களோடும் அவர்களின் பிள்ளைகளோடும் நேரம் செலவிடலாம்....



ஒரு வீட்டை அடைந்தாலே அவர்களின் வரவேற்பு அறையில்முதலில் கேட்கும் நலம்தானா என்ற கேள்வியி்ல் ஆரம்பிக்கிறது நமது மன அழுத்தத்தின் முதல் வாயில்படி...அதிகமானவர்களின் மனதில் ஏதோ ஒரு சோகம், நிறை மாத கற்பிணியாக வலியோடு நின்றுகொண்டேதான் இருக்கும், அதனை இறக்கி வைக்க அங்கே நினைத்தால் அடு்தது இருக்கும் மற்றொருவரோடும் அது பகிரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அது அப்படியே வலி வழிமாறி வேறு வேறு கதைகளாக பயணித்து பின் மிக மோசமாந மன அழுத்தத்திற்கும் அதன் வாயிலாக பல ஆபத்துக்களுக்கும் வழி வகுக்கும்,

பின் நம்மிடையே இருந்த அழகிய நட்பு, அல்லது சகவாசம் தேவையற்ற புரிந்துகொள்ளாமையினால் அறுந்துபோகும். இவைகள் அனைத்தையும் களையும் முகமாகத்தான் நாம் குடும்பமாக இருப்பவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகமும் வெளியே வைத்துக்கொள்வது நல்லது என்று சொல்கிறேன்....



ஊரில் இருக்கும்போதான பிரச்சினைகள் இல்லை இங்கே வெளிநாடுகளில் வாழும்போது வருவது. மிக மோசமான பிரச்சினைகள் வந்து நல்ல உறவுகள் கூட தொடர்பற்று பல வருடங்களாக பேசால் இருக்கும் நிலைகள் ஊட இங்கே இருந்துதான் வருகிறது.

நாம் எப்போதும் மறந்துபோகும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது குழந்தைகளின் வாழ்க்கை. கூட்டுக்குள் புதிதாக வாங்கி விடப்பட்டிருக்கும் கோழிக்குஞ்சைக்கூட அவ்வப்போது நாம் அதிசயித்து பார்த்துக்கொள்வோம். அவைகளுக்கு ஒரு நாளில் சில மணி நேரங்கள் சுதந்திரமாக மேய அணுமதிப்பதுண்டு. மீண்டும் கூடையால் மூடி வெளியே இருந்து அதிசயிப்போம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நாம் குழந்தைகளை அப்படி பாற்கிறோமா..?? அவர்களின் குசுருதிகளை அதிசயித்தோமா...?? அவர்களுக்கு அப்படிப்பட்ட குறும்பு செய்வதற்கான அழகிய தருணங்களை  உருவாக்கி கொடுத்தோமா...? அவர்களுக்கு நமது நட்பு வட்டாரத்திலோ, சொந்த பந்தங்களிலோ நண்பர்களை ஏற்படுத்திக்கொடுத்தோமா...?
அப்படி அவர்கள் பழகிய நண்பர்களோட குறைந்தபட்ஷம் வாரத்திற்கு ஒருமுறையேனும் பரஸ்பரம் பேசிப்பழக வாய்ப்பேற்படுத்திக்கொடுத்தோமா.....?? இல்லவே இல்லை...


பணம், பணம், பணம்.. என்ற ஒற்றை வேட்டைக்குப்பின் மறந்துபோவது குழந்தைகளின் மகிழ்ச்சி..... ஆனாலும் நாம் நமது தேவைக்கான மகிழ்ச்சிக்காக நமது நண்பர்களை சந்திப்பதற்கோ அல்லது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து பார்த்து சந்தோஷிப்பதற்கோ மறப்பதோ இல்லை... என்ன ஒரு கேவலமான சுயநலம்.....


ஆக மேலே குறிப்பிட்ட ஒரு நாள் சந்திப்புகள் வெறும் சாப்பாடு அல்லது பார்ட்டி அல்லது கெளரவம் சாரந்ததே அல்ல... மாறாக நமது குழந்தைகளுக்கான ஒரு மகத்தான ஒன்றுகூடல் அல்லது குழந்தைகள் பழகிப்பயிலும் அழகிய தளம். A wonderful platform for our children's get together...



மனோவியல் ரீதியாக நாம் படித்தறிவதைவிட ழகி அறியவேண்டிய விஷங்கள் நிறையவே இருக்கிறது.

சகோதரர் Colachel Mj Hussain அவர்களின் வற்புறுத்தலின் பேரில் நான் கலந்துகொண்ட முதல் KIFA MEET எனக்கும் மிக மோசமான போர் அடிக்கிற ஒரு அனுபவத்தை தரும் என்றே நினைத்தேன்...


சவூதி அரே்பியா வந்தபின் இன்னும் சொல்லபேனால் வளைகுடாவில் ஏறத்தாள வெறும் 12 வருடங்கள் அனுபவத்தில் எனக்கு பல விதமான புதிய மாறுதல்களை தந்ததும் நிறைய நண்பர்களை நல்ல மனிதர்களை சமம்பாதிக்க இயன்றதும் முதல் KIFA MEET -ற்குப்பின்தான்...

ஆக நாம் ஒன்றை விமர்சிப்பதற்கு முன் அவைகளை பற்றிய சரியாக தெரிந்துகொள்வேண்டியதும் நமது கடமையாகும்...



சகோ. JAHIR HUSSAIN அவர்களுக்குத்தான் அத்தனை நன்றிகளும் கூறவேண்டும்...

எனது வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணமான மகத்தான மனிதர்களை கொண்டது KIFA எனும் குடும்ப சங்கமம்...



மனோவியல் ரீதியான எனது பல கருத்துக்களை ஒரு தந்தை என்ற இடத்திலிருந்து உங்களோடு பகிர்ந்துகொண்டேன்...

படிக்க கொஞ்சம் சிரமமாகவே இருக்கலாம்... ஆனாலும் சகித்துக்கொள்ளுங்கள்..


நேசத்துடன்


அபூ ஃபஹத்

Oct 4, 2013


முதுமை...

**************

சாலையோர மைல் கல் 

பிடுங்கி எடுக்கப்பட்டது 
சாலையில்- வேறொரு
இடத்தில் வேறொரு
எண் எழுதப்பட்டு மீண்டும்
நாடப்பட்டது....

பிடுங்கி எடுக்கப்பட்ட கல்லில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
ஒரு கைத்தடியும் பழைய
துணிகள் கொண்ட பை ஒன்றும்
அங்கேயே விடப்பட்டது....

வழியே சென்ற ஆட்டிடையன்
ஒருவன் கைத்தடியை
எடுத்துக்கொண்டான் - அந்த
அழுக்குப்பையை
குறத்திப்பெண்ணொருத்தி
துளாவிக்கொண்டிருந்தாள்....

உள்ளே இருந்த எந்த
ஆடையிலும் ஒட்டைகள்
இல்லாமலில்லை - எதற்காகவோ
சிலதை தோளில் போட்டவள்
அழுக்குப்பையையும் கூடவே
எடுத்துக்கொண்டாள்....

தேர்ந்தெடுத்ததை தவிர
சில பொட்டலங்களும்
ஒரு சில பழைய புத்தகங்களும்
அங்கேயே விடப்பட்டிருந்தது...

முதுகில் பெரிய சாக்குப்பை
ஒன்றை தொங்கவிட்டு
நடக்க இயலாம் அந்த
இடம் அடைந்தான் பேப்பர்
பொறுக்கும் சிறுவன் ஒருவன்....

அழுக்கால் கசங்கிப்போன
விளிம்புகள் சுருண்ட
அந்த புத்தகங்களில் காகிதத்தின்
வாடை வரவில்லை
வியர்வை நாற்றம் மட்டுமே இருந்தது...

எல்லாவற்றையும் எடுத்து
பைக்குள் திணித்தான் - ஏதோ
ஒரு புத்தகத்தின்
நடுப்பக்கம் வாய் பிழந்து
அதனுள்ளே நீளமாய்
உதிரியாய் நின்றது
ஒரு காகித அட்டை.....

எடுத்தவைகளில் அந்த
புத்தகத்தை மட்டும் அங்கேயே
விட்டுச்சென்றான் சிறுவன்- ஏதோ
யோசித்தபடி தலைசொறிந்து
அடுத்த இடம் நோக்கி
நடந்தான் அவன்...

அநாதையாய் விடப்பட்ட
அந்த புத்தகத்தின் ஒரத்தில்
ஏகாந்தமாய் தூங்கும்
அந்த முதியவர் யாராலும்
கவனிக்கப்படாமலே போனார்....

கண் விழித்துப்பார்த்து
புத்தகத்தை கையிலெடுத்து
விளிம்பு சுருங்கிய வியர்வை
நாற்றத்தின் நடுவே கசங்காமல்
வீற்றிருந்தான் மகன்...

அருகே மருமகளும்
குழந்தைகளும் அடங்கிய
அந்த புகைப்படத்தில்
சட்டென விழுந்தது சுத்தமான
அந்த ஒற்றைக்கண்ணீர்......


எழுந்து நடக்க முற்பட்டபோது
பின்னாலிருந்து தாத்தா
எனும் சில சப்தங்கள்...

ஆட்டிடையன்
குறத்திப்பெண்
காகிதப்பையன்
இவர்களோடு
மைல் கல்லுடன்
அந்த தொழிலாளியும்....

சிறகுகளை வைத்துக்கொண்டு
தன்னை தூக்கிச்செல்ல 
காற்றுக்காய் காத்திருக்கின்றன 
சில குருவிகள்.....

*************










அவள் புன் சிரித்தால்
என்ன செய்வதென்றறியாமல்
பதிலுக்கு நானும்
புன்சிரித்துவிடுகிறேன்.....

*************






படித்துக்கொண்டிருக்கும்போது
மாதமிருமுறை மகனை
பள்ளி விடுதியில்
சென்று பார்ப்பேன்....

படித்து முடித்தபின் 
இப்போது வருடத்திற்கொருமுறை
என்னை முதியோர் விடுதியில்
வந்து பாற்கிறான்....

  ********
எத்தனை நேரமிருந்தாலும்
இரவு மிகவும்
குறுகியதாகவே இருக்கிறது.........


இங்கே தமிழன்
தமிழில்தான் பேசுகிறான்
மலையாளி மலையாளத்திலும்
மற்றவர்கள் ஹிந்தியிலும்
பாகிஸ்தானிகள் உருதுவிலும்
பஞ்சாபிகள் பஞ்சாபியிலும்
பேசுகிறார்கள்....

தமிழ்நாட்டில் இப்போது
தமிழர்கள் ஆங்கிலத்திலும்
ஆங்கிலம் கலந்த தமிழிலும்
பேசப்படுகிறார்களாம்...

நான் ஹிந்திக்காரனிடம்
ஹிந்தியில் பேச கற்றுக்கொண்டேன்
மலையாளத்தை மலையாளியிடம்
பேசியேதான் தீற்கவேண்டியிருக்கிறது....

அரபிகள் அடிக்கடி
அன்த கேரளா என்று
கேட்டுதான் நமது நாடு
எது என்று தீர்மானித்துக்கொள்கிறார்கள்....

மதராஸி வல்லாஹி
மிஸ்கீன் என்று சில அரபிகள்
கேரளா ஹராமி என்று
பல அரபிகளும் இந்திகளும்....

எப்போதெல்லாம் தமிழன்
மலையாளியிடம் ஏமாறுகிறானோ
அப்போதெல்லாம்
மலையாளி கொலையாளி
என்று திட்டி மனதை
தேற்றிக்கொள்வான்....

அதிகமான இடங்களில்
பாகிஸ்தானிக்கு உற்ற
நண்பர்கள் பட்டர்களாக
மட்டுமே இருக்கிறார்கள்
கேட்டால் இருவருமே
ஹமாரா தோஸ்த் ஹே
என்று நாறுகிறார்கள்.....

வழி கேட்டால் மலையாளி
எவ்வளவு தூரம், எப்படி
போகலாம் என்பது வரை
சொல்லிக்கொடு்பபான்...

இன்றைக்கும் ஓஃபீசுக்கும்
கோஃபிக்குமான உச்சரிப்பு
சர்ச்சைகளில் உடன்பாடு
ஏற்படவே இல்லை....

நாம் வழி கேட்போம் என்று
முன்கூட்டியே தெரிந்து
ஒதுங்கி ஒன்றுமறியாததுபோல்
நின்றுகொள்வான் தமிழன்...

டிக்கெட் இல்லாத
பயணம் இ்பபோது சாத்தியம்
லேப்டாப் இல்லாத பயணம்
இப்போது சாத்தியமற்றது...

என்னதான் கேமரா வைத்தாலும்
சிக்னல் போஸ்ட்களை
இடித்தே நிற்கும் ஜி.எம்.சி
வண்டிகள்....

செவியில் சேம்சங்
நொடியில் செவிடு....
சொல்ல வந்தேன் உன்னிடம்.... 
***************************

நீ வருவாய் என 
காத்திருந்தால் நீ
வருவதே இல்லை

நீ வந்ததாய் சொல்லும்
நேரங்களில் நான்
இருப்பதும் இல்லை....

நான் வரும்போது
நீ இருந்தாலும் நான்
அறிவதில்லை - நீ
இருப்பதை ஒருபோதும்
தெரிவித்ததும் இல்லை....

நீ சாங்கேத பாஷையில்
நிறைய சங்கதிகள்
சொல்கிறாய் - என்ன
சொல்கிறாய் என்று
அறியாதபோது சங்கடாமாய்
இருக்கிறது.....

நொடியிடையில் என் இமைகள்
சுருங்கிவிடுகிறது உன்
விழியை பாற்கையில்- சூரியனை
உற்று நோக்கி
தோற்றுப்போவதுவதுபோல்
இருக்கிறது....

ஏதோ சொல்ல வருகிறேன்
நீ எதையோ சொல்லி
சிரித்துவிடுகிறாய் - நான்
சொல்லாமலேயே
நிறுத்தி விடுகிறேன்

என் சிந்தனைகள்
புலம்பெயர்கின்றன.....

--------------------

எனது பழைய நாட்குறிப்பேடிலிருந்து.....

கலைஞரின் அறிவு பிடிக்கும்

மூப்பனாரின் அரசியல் பிடிக்கும்

வைகோ வின் கம்பீரம் பிடிக்கும்

அம்மாவின் துணிச்சல் பிடிக்கும்

இல.கணேசனின் தமிழ் பிடிக்கும்

நல்லக்கண்ணுவின் எழிமை பிடிக்கும்

பி.ஜெ வின் உடனடி பதில்கள் பிடிக்கும்

பேரா. ஜவாஹிருல்லாஹ்வின் மேடைப்பேச்சு பிடிக்கும்

தெஹ்லானின் நட்பு பிடிக்கும்

திருமாவின் வீரம் பிடிக்கும்

ஆர்.எம்.வீ.யின் அமைதி பிடிக்கும்

கேப்டனின் அறியாமை பிடிக்கும்

தளபதியின் பணிவு பிடிக்கும்

நாஞ்சில் சம்பத்தின் இலக்கிய பேச்சு பிடிக்கும்

வைரமுத்துவின் கவிதை வாசிப்பு பிடிக்கும்

சத்தியராஜின் நக்கல் பிடிக்கும்

கவுண்டமணியின் கோபம் பிடிக்கும்

வடிவேலுவின் காமெடி பிடிக்கும்

இப்படியே வெட்டியாய் இருந்து எழுதவும் பிடிக்கும்.......

எப்போதோ எழுதிய வரிகள்
**************************

உன் பார்வை
பயப்படுத்துகிறது - உன்
விழியால் விழுங்கிவிடுவாயோ
என பயப்படுத்துகிறது.....

என் இதயம்
படபடக்கிறது - நீ
உதிற்கும் வார்த்தைகள்
என்னவாக இருக்குமென்று....


நான் இன்னும்
தூங்கவில்லை - என்
இமைகள் மூட
மறுப்பதால் சொல்கிறேன்.....

இன்னும் உயிர்
இருக்கிறது - என்
இதயம் துடித்துக்கொண்டே
இருப்பதால்
சொல்கிறேன்....

யாரைக்கேட்டு
என் எதிரில் வந்தாய் - என்
பாதிப்புக்கு யார்
பதில் சொல்வார்......

உன் கண்களை
தந்துசெல் - நான்
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன்...

உன் இதயத்தை
தந்துசெல் - நான்
வாழ்ந்துகொண்டேயிருப்பேன்....

நான் கற்றுமுடித்த
பாடங்களில் இதுவரை
தோற்றதே இல்லை - இதோ
காற்றில் வரும் உன்
வார்த்தையில் தினம் தினம்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.....


நினைவுகளை என்னில்
நெய்து செல் - உன்
கனவுகளாய் நான்
வாழ்ந்துகொள்வேன்....








Sep 29, 2013


பயணம்
********

வீட்டுத்தோட்டம்
வெறித்துப்பாற்கும் - ஒவ்வொரு
முறையும் நான்
வீட்டை விட்டு 
வெளியேறும்போதும்.....

வீட்டுப்படியில் கால்
தட்டினால் போதும் - உள்ளே
வந்துட்டு போ மோனே 
பயணம் சரியில்லைபோல
என்பாள் என் கிழம் 
வாப்பும்மா....

காம்பவுண்ட் கதவையே
நோக்கி நிற்பார் உப்பா - இவ
ஒருத்தி யாராவது வெளியே
போகும்போதுதான் குறை
குடத்தோட வருவா....

எதேச்சையாக என்
கைகளிலிருந்து தவறும்
கார் சாவி பக்கத்து வீட்டு
மாமியை ஏதாவது
பேச வைத்துவி்டும்...

தெருவின் தூரத்து மதிலில்
ஒரு பூனை வலதும் இடதும்
கீழும் பார்த்து நிற்கும் - எனது 
கார் சத்தம் கேட்கும்போது 
முன்னங்கால்களை கீழ்நோக்கி
வைத்து பயப்படுத்தும்.....

வெள்ளையும் சொள்ளையுமா 
காலைலயே எங்கடேய் போறே - கோபத்தின்
நிறம் அப்போதுதான் 
இமைகளுக்குள் வெறி பிடித்து 
நடனமாடிச்செல்லு்ம்...

நானும் கூட வருவேன்
இல்லைண்ணா முட்டாய்
வாங்கீட்டு வரணும் - மகன்
செல்லமாய் அடம்பிடிக்கக்கூடும்....

அம்மாவின் சேலைக்குள் 
முகம்புதைத்து லேசாய்
திரும்பிப்பாற்கும் மகளை
முத்தபிட்டபடி கையசைத்து
வழியனுப்புவாள் மனைவி......

அவள் முகம் பார்த்து திரும்பும்
நொடிப்பொழுதில் சட்டென
கீழிறங்குகிறது சில துளிகள்
பயணத்தின் ஆரம்பம்
அழகான ஆனந்தமாய்.....

Sep 13, 2013


ஹலோ...கொஞ்சம் நில்லுங்க...!!

யாருண்ணு புரியலையே....??

நீங்கதானே அவர்...என என் பெயர் சொல்லி கேட்டார்...


உங்களை எனக்கு நல்லா தெரியும், உங்கள கவிதைகளை நான் படித்திருக்கிறேன்...

அப்டியா...ரொம்ப நன்றி... என்னோட Blog பார்த்தீங்களோ...??

இல்ல... அவ்வப்போது வரும் நிகழ்வுகளைப்பற்றி நீங்கள் எழுதும் கருத்துக்களையும் நான் ரசித்திருக்கிறேன்...உண்மையிலேயே எனக்கு ரொம்ப புடிக்கும்...

ஓ... நீங்க யாருண்ணு தெரிஞ்சிக்கணும்ணு ஆசைப்படுறேன்...

நான் சொன்னாலும் உங்களுக்கு புரியாது..நான் பக்கத்து ஊர்தான் என்றாலும் எப்படி சொல்றதுண்ணு தெரியல...

ஃபேஸ்புக்ல உங்களை பார்த்திருக்கேன், அதுலதான் உங்க கவிதைகள் ஸ்டேட்டஸ்கள் பார்த்திருக்கேன்...

நீங்க விவாதம் பண்றதும் எல்லாமே சூப்பர்... உங்களை சந்திக்கணும்ணு ரொம்ப ஆசைப்பட்டேன்...இண்ணக்கி அது நடந்திட்டு பாத்தீங்களா...

சரி...சரி...இப்போ எங்கே போறீங்க...??

சும்மாதான் கடைக்கு வந்தேன்...நீங்க எங்க இந்தப்பக்கம்...??

நானும் சில பொருட்கள் வாங்கத்தான் வந்தேன்...

நீங்க இவ்வளவு புகழ்துமளவுக்கு நான் பெருசா ஒண்ணும் எழுதலியேங்க..

என்னைவிட அதிகம் ஆதங்கமும், விஷயமும் தெரிந்த ஆயிரக்கணக்கானோர் இப்போதும் அங்கே சும்மாதான் இருக்காங்க...

அப்டியெல்லாம் இல்லண்ணே.. நீங்க எழுதுறதுக்கும் மத்தவங்க எழுதறக்கும் வித்தியாசம் இருக்குண்ணே....நீங்க எழுதுற எதையும் கொஞ்சமும் தப்பு சொல்ல முடியாது....



சரி பாப்போம்... எனக்கு கொஞ்சம் அர்ஜெண்டா போகணும் என்று கூறி அந்த தெரியாத மனிதரிடமிருந்து விடை பெற்றேன்....


ஏதோ பெரிய்ய ஒரு வேலை முடிந்ததைப்போல் மனதில் நினைத்தாரோ என்னவோ, உடன் வந்தவரிடம் என்னை எப்படி அறிவாரோ அந்த பெயரைச்சொல்லி, இவர்தான் அவர் என்று பெருமையாக பேசி சந்தோஷப்பட்டுக்கொண்டே சென்றார்....


என்னை விட்டு அவர் சில அடி தூரங்கள் கடந்தபோது அவரை நான் கேட்க நினைத்த கேள்விகளை மனதில் யோசித்துக்கொண்டேன்...


என்ன இவர், என்னை இப்படி புகழ்ந்துகொண்டே செல்கிறார்....??

உங்களுக்கு எனது எல்லா எழுத்துக்களும் பிடித்திருந்ததா...?? நான் தவறாகவே இதுவரை எவுதவில்லை என்கிறீரே...??

எனது எழுத்துக்களில், எனது கவிதைகளில், எனது கோணங்களில் தவறுகளோ, கோபமூட்டுவதோ இல்லாமலா இருந்திருக்கும்...??


நான் எத்தனை மோசமாக எழுதியிருக்கிறே்ன்...எத்தனை மோசமாக விமர்சித்திருக்கிறேன்.. எத்தனை கருத்துக்கள் தவறானவை...நானே உணர்ந்து மன்னிப்பு கேட்டதுண்டு..நானே உணர்ந்து திருத்திக்கொண்டதுண்டு...

இன்னுமா நான் முழுமையாக தவறவில்லை....

எப்படி இவர் புகழ்கிறார்..என்னை நானே குற்றம் சொல்லியிருக்கிறேனே...இவர் என்னை குற்றமே  இல்லை என்கிறாரே....இதவென்ன புகழ்ச்சி....


அறிமுகம் உள்ளவரோ இல்லாதவரோ, உங்களிடம் இந்த தவறு எனக்கு பிடிக்கவில்லை, இந்த சரி பிடித்திருக்கிரது...நீங்க விமர்சித்ததில் சிலதில் தவறிருக்கிறது, அதை உண்ரந்துகொண்டதில் நான் பாராட்டுகிறேன்...நீங்க ஏன் சிலநேரங்களில் உணற்சிவசப்படவேண்டும்...என்று எதையும் சொல்லாமல், ஒரேமாதிரியான பாராட்டு எனக்கு சந்தேகத்தை தருகிறதே.


என நான் சில மணித்துளிகள் என்னை நானே கேட்டுக்கொண்டு...

நீ யாரையும் இப்படி புகழாதே என நான் என்னை சொல்லி்ககொண்டேன்...


Aug 24, 2013




பாதைகள் என்னவோ
எனக்கானதுதான் - ஆனால் 
நான் எனக்காய் நடக்க 
நேற்றுவரையில் 
அனுமதியில்லை இங்கே....

இந்நேரம் நான்
கயிற்றுப்பாயில் ஓரமாய்
ஒருக்களித்து படுத்திருப்பேன்
என என்னை அப்படியே
அநாதையாய் விட்டுச்சென்ற
என் மகன் எண்ணலாம்...

முதுமையின் வாயிலில்
என் முதுகால் கூனி
வீட்டுக்குள்ளேயே நான்
நெரங்க துவங்கியிருப்பேன்
என எண்ணலாம் நகரத்தின்
நெரிசலில் புழுகும் என் மகள்....

பாட்டி எப்படி இருக்காங்க
என யாரும் என் பேத்தியிடம்
விசாரித்தால் வயசாகிப்போய்
கண்ணெல்லாம் தெரியாதுண்ணு
நெனக்கிறேன் என்று யாரிடமோ
அறியாமல் சொல்லக்கூடும்...

சதைகள் தாழ்ந்து
நரம்புகள் புடைத்து
சருமங்கள் உலர்ந்துபோய்
கறுத்துப்போனதொரு
ஏகாந்தக்கிழவிதான்
இந்த வீட்டில் இருப்பாள்
என ஏதேனும் அரசு
அதிகாரிகள் எனது வீட்டை
புறக்கணித்துச்செல்லலாம்....

நான் மட்டும் தனிமையில்
என்பதால் எனக்கான எல்லா
சலுகைகளையும் யாரோ
என் வீட்டு வாசல்
மிதியாமல் செய்யலாம்...

இதோ இன்னும்
இருக்கிறேன் - என்
தளர்ந்த தசைகளில்
மிளிரும் நரம்புகளில்
நோய்த்திசுக்களற்ற குருதியின்
ஓட்டம் என்னோடு
உற்சாகமாய் பயணிக்கிறது...

எனக்கான சுவாசத்தை
இறைவன் நிறுத்தும்வரை
நானும் நிறுத்தப்போவதில்லை
இடையறாத என் உழைப்பில்
நானும் சிலரும் கொஞ்சம்
இழைப்பாறுவோம்.....

இதோ எனக்கான பாதை
நானே தீர்மானித்துள்ளேன் - என்
கால்களை மட்டுமல்ல
நான் கைவிடப்போவதில்லை என
என் மீதான நம்பிக்கையையும்
சேர்த்தே சுமந்து செல்கிறது
என் வாகனம்.....

ஏகாந்தத்தை நான்
உணர நினைப்பதில்லை - ஏனெனில்
நான் அநாதையாக
விருப்புவதில்லை.....

அபூ ஃபஹத்

நன்றி :
புகைப்படம் சகோ. திருவட்டாறு சிந்துகுமார்...

Aug 21, 2013







தாண்டவம்...
****************


விண்ணை முட்டுகிறது
விலைவாசி - துண்டா
வலைவீசி பிடிக்கப்பட்டான்
தலைப்புச்செய்தியில்
தொங்கும் கோவணத்தில்
எங்கும் பெரிய ஓட்டைகள்....

தொடர்ந்து நிராகரிக்கப்படும்
கருணை மனுக்கள் - அரக்கர்களின்
பெயரோடு நரகத்தின்
விலாசத்தில் சேர்ந்திருக்கலாம்
உங்கள் மனுக்கள்.....

என் கைகள் நிறைய
ரூபாய் நோட்டுக்கள் - எதிலும்
காந்தியின் சிரிப்பைக்காணோம்
ஒரப்பார்வையில்
தீக்குச்சி கேட்கிறார்.....

தினம் தினம் பிறக்கின்றன
திரையில் த(று)தலைகள் - இனி
திரைப்படங்களின் நிர்வாண
நடனக்கூடங்களாகலாம்
ஆட்சி மன்றங்கள்....


பெண்கள் கவர்ச்சியாய் உடை
அணியாதீர்கள் - காவல்துறை
தாய்மை காக்க கண்ணியத்தை
பிச்சை கேட்கிறது
நமது பெண்களிடம்....


நமது தெருக்கள்
குறுகிப்போயின -மாடிப்படிகள்
உயர்ந்துகொண்டேசெல்கிறது
இடையில் எப்போதாவது
முகங்களை சந்திப்பது
மின்சார லிஃப்டில் மட்டும்....


சலாமும் வணக்கமும் சொல்வது
நின்று போயிருக்கிறது - ஆங்காங்கே
ஆள் தெய்வங்களின்
அலங்கோலங்களில்
அடிமையாகிப்போயிருக்கிறது
மனிதகுலம்....

இன்னும் இன்னும்
உயிர் இருக்கிறது - கிணற்றிலேயே
இருப்பதால் தவளைகளாகவும்
வெளியே வந்தால்
விஷ ஜந்துவாகவும் பாற்கப்படும்
உணற்சியற்ற தேசத்திற்கும்
மக்களுக்கும்......


அபூ ஃபஹத்


அந்த அரச மரம்....
*************

அந்த மரம் மிகவும்
உயரமாய் இருந்தது
பார்ப்பதற்கு அழகாககவும்
அதன் நிழலில் உட்கார்ந்தால்
இதமாகவும் இருக்கும்.....

அதன் இளந்தளிர்
இலைகளை தண்ணீரில்
போட்டு வைப்பார் - தீர்த்தம்
என எல்லோருக்கும் அந்த
தண்ணீரை கைகளில்
ஊற்றி தருவார்...

மரத்தை சுற்றி வர
ஆண்களை மட்டும்
அனுமதிப்பதுண்டு - பெண்கள்
வெளிப்புற கட்டிடத்தை
சுற்றிவருவதில்
ஆட்சேபனை தெரிவிப்பதில்லை....

புனிதத்தின் எல்லை
வெயிலில் கரிந்து வீழும்
சருகுகளை மென்று உண்பதையும்
கடந்து சென்றது.....

கழிந்த மாத மழையில்
அந்த புனித மரம்
சரிந்து வீழ்ந்ததாம் - ஊர் கூடி
மரத்தை வெட்டி
அகற்றினார்களாம்....

சில நாட்களாய் நான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
சாய்ந்து விழுந்த
புனிதமிக்க மரம் அடக்கம்
செய்யப்பட்ட சமாதியை.....

சருகுகளும் கிளைகளும்
வெட்டி நறுக்கப்பட்டு
விற்கப்பட்டதாம் - எழும்புங்கள்
மரம் அறுவை நிலையத்துக்கு
எடுத்துச்செல்லவேண்டும்
வாகனம் வந்து நின்றது...

மரம் நின்ற சமாதியில்
புதிய செடி நடப்பட்டிருந்தது
அந்த செடிக்கும் பழைய
பெயரும் வரலாறுமே
மீண்டும் சொல்லத்துவங்கியிருந்தனர்....

அபூ ஃபஹத்

சுதந்திர தினம்....
******************

தலைநகரிலும் 
தலை நகரங்களிலும் 
கற்பழிப்புகள் - பாரதத்தாயா
அவள் எப்போதோ கற்பை
இழந்துவிட்டாள் இன்றைய
தலைமகன்களால்
என்றான் வழிப்போக்கன்.....

ஆளும் கட்சியின் ஊழல்களும்
எதிர் கட்சியின் அராஜகங்களும் - அவள்
கால்களில் சீழ் வடிகிறது
விழுப்புண்களில் பாய்ச்சப்படும்
சூலாயுதங்கள்....

சிறைகள் முழுக்க
தொப்பிகளும் தாடிகளும் - புழுத்துப்போன
சிறைகள் இப்போதுதான்
புனிதம் பெறுகின்றன
உழுத்துப்போன மனிதம்
உண்மை அறியவில்லை.....

சுதந்திரக்காற்று முழுவதும்
நச்சுக்களின் வீச்சு - விதைகளும்
விருட்சங்களும் கூடவே
விந்தணுக்களு ம்செயலிழந்து போயின....


கோட்சேவின் குண்டுகளுக்கு
வீழ்ந்தது காந்தியல்ல
அவர் கனவுகளும்
சுதந்திரத்தின் எதிர்காலமும் - இதோ
கோட்சேக்களின் கைகளில்
நெரிக்கப்படுகிறது
சுதந்திரத்தின் குரல்வளை.....

எனதும் உனதும்
வாக்குரிமையை பறிப்பதாய்
வந்தேறிகளின் கூக்குரல் - பாஷிசத்தீயில்
வெந்துகொண்டிருக்கிறது
வந்தே மாதரங்கள்.....

வெண்சாமரம் வேண்டாம்
சிவப்புக்கம்பளம் வேண்டாம்
சிந்தை மகிழ என்
தாய் தேசத்தில் நேசம்
மிகுந்த சுந்திரம் போதும்....

எங்கே எனது நேசம்
எங்கே எனது பாசம்
எங்கே எங்கே எங்கே
எனத்தேடுகிறேன் விஷமும்
வேஷமும் கலக்காத
சுதந்திரக்காற்றை....


எனினும்
என் தேசம்போல் ஒன்று
இன்னும் இல்லை - என்
மக்கள் போல் யாரும்
எங்குமில்லை
எம்மைப்போல் சுதந்திரமாய்
யாருமில்லை....

எவனும் என்
தேசத்தின் மீதான
பற்றில் நச்சு வீசவேண்டாம்....


இனியொரு விதி செய்வோம்....




அபூ ஃபஹத்


அனைவருக்கும்

எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்....

Aug 9, 2013




நேற்றில் முடியாத பயணம்.....
************************

என் பயணம் மீண்டும்

தொடர்கிறது - உடைசல்களும்
கிழிசல்களுமாய் தெரிந்த
என் பாதைகளை நானே 
செப்பனிட்டேன்....

மீண்டும் மீண்டும்

விரிசல்களுக்கான வரைகோடுகளின் 
சில சாத்தியக்கூறுகள்
என் பாதையில் பரிணமிக்காது
போகவேண்டும்.... 

வெண் புகை போல் என்

விழிகளை தாண்டிச்சென்றது
புரைகள் அவ்வப்போது - நான்
ஒருபோதும் என் கண்களை 
மூடிக்கொள்ளவில்லை
நல்லவை நோக்கி 
விழிகளை விலக்கிக்கொண்டேன்
ஆகாததை அநாதையாய்
அலட்சியம் செய்தேன்...

கேட்பதற்கான செவிப்புலனை

கேள்விகளுக்காய் மட்டும்
திறக்கவில்லை - சில 
வேள்விகளுக்காகவும்
புறக்கணித்த கேள்விகளை
அடிக்கடி கேட்டுக்கொண்டேன்...

வாசித்து முடித்தபின்தான்

மனம் சாந்தமானது - இன்று
இத்தனை வாசித்ததில்
எத்தனை வசனங்கள் 
உளபூர்வமாக இதுவரை 
விவாதிக்காத வசனங்கள் என்று......


நாவை அடக்கிவைப்பதற்காய் 

நான் ஒன்றும் வாய் மூடி
இருந்துவிடவில்லை - நாயன்
நவின்றதை நாள்தோறும்
மொழி பெயர்ந்து படித்ததில்
நான் நா நடுங்கினேன்....

இப்போதும் பயப்படுகிறேன்

 நான் பாதுகாத்துக்கோர்த்த
மாலைகளினின்றும் இனி 
ஒருபோதும் என் முத்துக்கள்
சிதறாதிருக்கவேண்டும்...


என் கால்கள் இன்று லேசாய்

பதறித்துடிக்கிறது - என் 
பாதைகளில் விரல் நகங்கள்போல்
அகோரமாய் நீண்டு நிற்கும்
பட்ட மரக்கொம்புகளில் என்
மாலைகள் மாட்டிக்கொள்ளாமல்
இருத்தல் வேண்டும்...


என்னால் இயன்றவரை

நானே பாதுகாத்தேன்
நானே சேர்த்து வைத்தேன்
நானே ஒப்புவித்தேன் உன்னிடம்
இறைவா..!!!

உன்னிடம் யாசிப்பதற்கா

யோசிப்பேன் நான் 
என் இறைவா- உன்
இசைவுகளுக்காய்
இன்னும் இன்னும்
யாசித்துக்கொண்டே

என் பயணம் மீண்டும்

தொடர்கிறது - என்
பாதைகளை பாதுகாப்பாயாக....



அபூ ஃபஹத்


Jul 27, 2013

எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம்...



















நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் அல்லது சமூக அமைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நாம் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். 

தினமும் வேலை, தொழில் என் வீடு, என் குடும்பம் என ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே நமது வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கும்போதும் நம்மைச்சுற்றியும் நமது பகுதியை சுற்றியும் நடக்கும் நல்ல விஷயங்களையும் அதே போன்று நமது சமூகத்தை தொடர்ந்து பாதித்துக்கொண்டிருக்கும் அநியாயங்களையும் அவலங்களையும் நாம் நம்மில் உட்கொள்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன்.  

ஏதோ வெகு சிலர் மட்டும் சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் எல்லா விதமான நல்லது கெட்டதுகளையும் தமது வாழ்க்கையோடும் தமது சுற்றத்தோடும் சேர்த்து உணர்ந்து அதற்காக வாழ்த்தவேண்டியவைகளை வாழ்த்தி, விமர்சிக்கவேண்டியவைகளை விமர்சித்து, எதிற்கவேண்டியவைகளை எதிர்த்து, கோபப்படவேண்டியவைகளை கோபித்து சமூகத்தை தனதாக்கிக்கொள்கிறார்கள்.

துர்ரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும், சமூகத்தில் இப்படிப்பட்ட வெகு சிலரை இந்த சமூகம் கோமாளியாகவோ, அல்லது ஏதுமற்ற ஒரு ஒன்றுமில்லாதவனாகவோ ஏளனமாகவே பாற்கிறது. இது இந்த நாட்டின் சாபம் என்றோ அல்லது இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் விழுந்துபோன சுயநலத்தின் விஷ விதை என்றோதான் சொல்லத்தோன்றுகிறது.  

இப்படி சமூகத்தின் முக்கியத்துவதையும் சமூகத்தினூடே நடந்துகொண்டிருக்கும் அவலங்களையும் அக்கிரமங்களையும் எதிர்த்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் அக்கிரமக்காரர்களுக்கு எதிராகவும், அல்லது அதிகார வற்கங்கங்களுக்கு எதிராகவும் தன்னால் ஆயுதம் ஏந்தவோ, அல்லது சட்டரீதியாக மோதவோ இயலாமல் தனிமைப்பட்டு போகும்போதும் தன்னால் இயன்ற அளவுக்கு விமர்சனங்களாலோ, தனது குரல்களாலோ தமது ஆதங்கத்தை இந்த சமூகத்திற்காக வெளிப்படுத்தும்போது அவனோடு குறைந்த பட்ஷம் கை கோற்கவோ அல்லது குரல் கொடுக்கவோ தாயராகாமல் அவர்களை சமூகநல அநாதைகளாகவும் கோமாளிகளாகவும் நாம் பாற்க ஆரம்பித்து பல காலங்களாகிவிட்டது என்பதே உண்மை.

காலம் செல்லச்செல்ல அதிகார மோகத்தின் கைகள் இரண்டிலிருந்து ஈராயிரமாக படர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நாட்டின் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி இராஜாங்கமாகவும், மிகப்பெரும் பிராந்தீய பிரபுக்களாகவும் சுல்தான்களாகவும் இருப்பதிலிருந்தே இந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு கேவலமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ள இயலும். 

இன்றும் இந்த நாட்டில் சிறிதேனும் மனிதாபிமானமும், மனிதநேயமும், மக்கள் வாழ்வதற்கான சூழலும் இருப்பதற்கு காரணம் இதுபோன்ற சமூகத்திற்காக சமூக அவலங்களுக்காக குரல்கொடுக்கும் கோமாளிகள் இருப்பதால்தான்...

ஒரு பக்கம் பணம் மட்டும் பொருளாதாரம் சார்ந்த கொள்ளையடிக்கும் கூட்டம், இன்னொரு பக்கம் அதிகார வற்கங்களின் ஊழல் ராச்சியம், அரசில் கொலைகள், கொள்ளைகளின் வளற்சியும் அதனை  எதிர்த்துக்கேட்பவர்களை கூலிப்படைகளை ஏவி தலைமுறையே வளராத அளவுக்கு அழித்துவிடல் என தொடரும்போதும் மறு பக்கம் சிறுபான்மை மக்களும், ஜாதீய இன்னல்களால் பரிதவிக்கும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதப்படும் மக்களும் திட்டமிட்டு சித்திரவதைக்குள்ளாவதும், திட்டமிட்டு தாக்கப்படுவதும், அவர்கள் மீது திட்டமிட்டு சுமத்தப்படும் வீண்பழிகளும் இந்த நாட்டின் இறையாண்மையை சீர்குலைத்துவிட்டுத்தான் இருக்கின்றன.

அதன் விழைவு இப்போது மிகவும் துல்லியமாக கணக்கிட்டு செயல்திறன் உருவாக்கி, பல வித வழிகளில் ஒட்டுமொத்த சமுதாயத்தை அழித்தொழிக்க பலவிதமான வழிகளில் சூழ்ச்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இப்போது நடக்கும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் என்று கூறலாம்.  

காலம் நம் மீது சில பொறுப்புக்களை தருகிறதோ என்று நினைக்கிறேன்
அதன் வெளிப்பாடுகளினூடே நாம் பயணித்து மனித உயிர்களின் விலை என்ன என்பதை இந்த சமூகத்திற்கு உணர்த்தும் காலம் வந்துவிட்டதோ என்றும் நான் எண்ணுகிறேன்.

இயேசுவும், மோசேவும் மற்றும் அதற்கு முன்பு வந்த  தூதர்களும் இறைவன் எந்த ஒரு அழகான மார்க்கத்தை அல்லது வாழ்க்கை வழிமுறையை இந்த உலக மக்களுக்கு தருவதற்காக பணித்தானோ அதன் மூலம் எந்த வெற்றியை மக்களுக்கு தருவதற்கு விரும்பினானோ அதையே இறுதியாக முஹம்மது நபி (PBUH)யின் மூலம் தந்திருக்கிறான். ஏதேதோ காரணங்களால் அந்தந்த சமூகங்கள் வேறுபட்டுப்போயிருந்தாலும்   போதித்த விஷயங்களில் எந்த மாற்றத்தையும் காண இயலவில்லை. அப்படிப்பட்ட சத்திய மார்கத்தை, அமைதியின் வழியை போதிக்கும் இஸ்லாம் எனும் வழிமுறையை இன்று கூண்டிலேற்றி கிழித்தெறியப்பார்க்கும் சில சமூக விரோத கும்பல்களின் வெறுப்பிலிருந்து உமிழப்பட்ட விஷமானது அந்தந்த சமூகத்தின் மக்களிடம் முஸ்லிம்களை கோரமாக பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் மிகவும் வெட்டவெளிச்சமானதும் கூட. 

எந்த ஒரு செயல் அல்லது எந்த ஒரு கொள்கையை நோக்கி மக்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கிறார்களோ அந்த கொள்கைக்கு எதிராகத்தான் அதிகம் எதிர்ப்பும் இருக்கும் என்பது நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவே நிதர்சனமான உண்மை.

9/11 க்கு பின்னர்தான் 20 -ம் நூற்றாண்டின் இறுதி யை விட 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும், இதனை குறைக்கவும் உலகமெங்கும் பல வழிகளில் சூழ்ச்சிகளும், பெரும் கொடூரங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது. ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களிடையே இஸ்லாம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
 அதன் தாக்கம் இந்திய துணைக்கண்டத்திலும் பரிணமித்து படர்ந்துகொண்டிருக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சமூகம் புதிய யுக்திகளை கையாள்கிறது. அதன் வெளிப்பாடுதான் நாம் தொடர்ந்து கண்டுவருவது.

இதற்கிடையில்  பல சூழ்சிகள் இங்கே இறைவனால் முறியடிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு கல் நம்மீது விழும்போதும் அதைவிட பெரிய கற்களால் இறவன் எதிரிகளை தாக்குறான் என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்...

ஆக இதுபோன்ற பல நிகழ்வுகளும், பழி சாரல்கள் நம்மை குற்றவாளிகளாக ஆக்குவவதற்காக நடைபெற்றாலும் இறைவன் எல்லா சமூகத்தாரிலும் நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் நம்மோடு வைத்துள்ளான் என்பதே உண்மை.

நம்மீதோ அல்லது ஜாதீய கொடுமைகளாலும், சமூக்தினின்றும் வெளியேற்றப்படும் மக்கள்மீதோ சுமத்தப்படும் பழிகளுக்கும் , கொடுமைகளுக்கும் ஒரு மிகப்பெரிய தோல்வியை ஆதிக்க வற்கமும் பாஸிஷ சக்திகளும் எதிக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை...

ஆனாலும் இந்த சமூகத்தில் நம்மை நாமாக வெளிக்காட்டவேண்டிய கட்டாயமிருக்கிறது. 

அதற்கான களம் இப்போது நமக்காக ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.தொடர்ந்து நடைபெறும் பல இன்னல்களையும் நாம் பொறுத்துக்கொணேடும், நமக்கென்ன எவனோ பாதிக்கப்பட்டால் நாம் எதற்கு கவலை கொள்ளவேண்டும் என்கின்ற குரூர புத்தியை களையும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே சரி.

சமீப காலமாகவே தமிழ்நாட்டில் தொடர்ந்து பல கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. 

பெரும்பாலான கொலைகள் அரசியல் சார்ந்த கொலைகளாக இருக்கிறது, அடுத்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களுக்காக கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் அரசியல் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய கொலைகளில் கொலை செய்யப்பட்டவர்கள் சாதாரண மக்களாக இருக்கும் பட்ஷத்தில் எந்த பெரிய கட்சிகளும் போராட்டம் நடத்துவதோ பந்த் நடத்துவதோ அல்லது அந்த கொலைகளை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை கோரவோ செய்வதில்லை. அது போன்ற கொலைகள் நடக்கும்போது அந்த கொலைகள் பற்றி பொதுவாக கருத்துக்கேட்க இப்போது வருவதுபோல் மத்தியிலிருந்தும் மாநிலத்திலிருந்து சிறப்பு குழுக்கள் யாரும் வருவதில்லை...

ஆனால் சில கொலைகளில் கொலை செய்யப்படுபவர் ஏதாவது அரசில் கட்சியிலோ, அல்லது பெரும்பான்மை சமூகத்தைச்சார்ந்த மதவாத கட்சிகளை சார்ந்தவர்களாக இருப்பின் கொலை செய்யப்பட்டது சொந்த பிரச்சினைக்காகவோ, அல்லது பொருளாதாரம் மற்றும் றியல் எஸ்டேட், றவுடியிசம் போன்ற காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டிருப்பினும் அந்த கொலைகளை தமது கட்சியின் அல்லது மதத்தின் சார்பாக மாற்றி அதனை வைத்து கேவலமான அரசில் செய்யும் நிலையும் தமிழ்நாட்டில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

தொடர்ந்து பல கொலைகளில் எந்த விசாரணையும் துவங்கும் முன்பே அந்த கொலை இவர்களாதான் செய்தார்கள், இதற்காகத்தான் செய்தார்கள் என்பதபோல் ஒரு சமுதாயத்திந் மீதோ இனத்தின்மீதோ, ஜாதியின்மீதோ திணித்து அதனை உலகம் நம்புவதற்கும் பொதுப்புத்தயில் மோசமான தீவிரவாத முத்திரை விழுவதற்காகவும் தமிழ்நாட்டின் முக்கிய ஒளி மற்றும் அச்சு ஊடகங்கள் முன்னமே பெரிதுபடுத்திவிடுகின்றன. ஆனால் விசாரணைகள் தொடர்ந்து நடக்கும்போது அதில் வரும் முடிவுகளை பின்னர் இதே தரம் கெட்ட ஒளி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் குற்றவவாளி முஸ்லிமல்லாதவராக இருக்கும் பட்ஷத்தில் அதனை வெளியிடுவதோ, அல்லது தொலைக்காட்சியில் திரும்பவும் அதனை சொல்வதோ இல்லை மாறாக இருட்டடிப்பு செய்துவிடுகின்றனர்...


ஆனால் தொடர்ந்து சில கொலைகளில் கைது செய்யப்படும் முஸ்லிம்கள் வீண் பழி சுமத்தப்படுகிறார்களா,, அல்லது அவர்கள்தான் குற்றவாளிகளா என்பதை அறியத்தருவதும், இவர்கள்தான் அந்த கொலைகளை செய்திருந்தால் அந்த கொலைகள் என்ன காரணத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நேரமையாக விசாரித்து முக்கியமாக பொதுமக்களுக்கு சொல்லவேண்டியது காவல்துறையின் மற்றும் நீதித்துறையின் கடமையாகும்...

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்தவர்களைப்பற்றியும், ஊடகங்கள் திடீரென வெளியிடும் முஸ்லிம் பெயர்கள் பற்றியும், காவல்துறையோ அரசோ வெளியிடும் வரைபடங்கள் மற்றும் அடையாளங்கள் பற்றியும் சரியாக தெரிந்துகொள்ளவும், அவர்கள் இந்த கொலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதையும் அவர்கள் ஏன் இப்படி பழி சுமத்தப்பட்டனர் என்பதுபோன்ற காரணங்களையும் சமூகத்திற்கு சரியாக தெரிவிக்க வேண்டியதும் ஊடகங்களின் கடமையாகும். 


தொடர்ந்து நடக்கும் இந்த கொலைகள் மற்றும் அசம்பாவிதத்திற்கு மதச்சாயம் அல்லது மதத்தோடு தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின்மீது பழி சுமத்துவதற்கும் காரணம்தான் என்ன என்பதை ஆயந்தறியவேண்டியதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொறுப்பிருக்கிறது.


நாம் ஏன் பழி சுமத்தப்படுகிறோம், அப்படியே நமது சமுதாயத்தினர் ஏதேனும் கொலைக்கு காரணமாக அமைந்திருந்தால் அதற்கான காரணம்தான் என்ன..??? அவர்கள் சம்மந்தப்பட்ட அல்லது செய்த கொலைக்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருந்ததா..அல்லது பொருளாதார பிரச்சினைக்கான கொலையா..அல்லது மதம் சார்ந்த முன் விரோதமா என எந்த காரணமாக இருப்பினும் அதனை அறியவேண்டியதும், பிரச்சினைகள் தனிப்பட்ட பிரச்சினைகளாக இல்லாத பட்ஷத்தில் சமுதாயத்தின் மீது பழி விழும் அளவுக்கு ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது எந்த அளவுக்கு கேவலமானது என்பதையும், அதுபோன்ற செயல்கள் சமுதாயத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதையும் அதுபோன்ற குற்றவாளிகளுக்கும், சமுதாயத்தின் மக்களுக்கும் விளிப்புணர்வை ஏ்ற்படுத்தவேண்டியதும் நமது கடமையும், பொறுப்புமாகவும் இருக்கிறது என்பதையும் நாம் எடுத்து வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...

அதே போன்று எந்த கொலைக்கும், எந்த பிரச்சினைக்கும் முஸ்லிம்களையே குறிவைத்து பழி சுமத்தும் மதவாத அமைப்புகளின் கேவலமான அரசியல் கொள்கைக்கும், மதக்கலவரங்களை உருவாக்கும், அல்லது பெரும்பான்மை மக்களின் மனதை மாற்றி அவர்களின் மனதிலும் வாழ்க்கை நடைமுறையிலிருந்தும் முஸ்லிம்களை அகற்றி தனிமைப்படுத்தி  முஸ்லிம்கள் மீதான எண்ணங்களி்ல் விஷத்தை ஊற்ற நினைப்பவர்களிடமி்ருந்து பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் எதார்த்த நிலைமையை காட்டவேண்டிய கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்....


முந்தைய காலங்களில் முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞர்களும், சமுதாய மக்களும் அந்தந்த ஊர் அல்லது பகுதி சார்ந்த ஜமாஅத்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஊர் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டனர். அசம்பாவிதங்கள், அக்கிரமங்களை எதிர்த்து மத இன ஜாதி மொழி மறந்து அனைவரோடும் சேர்ந்து கட்டற்று போராடவும்  சமுதாய நலனுக்காக உழைக்கவும், சமுதாய மக்களின் நலனுக்கு ஏற்படும் இன்னல்களை சமுதாயத்தின் துணையோடு போராடவும் முடிந்தது. ஜமாஅத்களின் மீது மக்களுக்கும் மிகுந்த மரியாதையும், ஜமாஅத் நிர்வாகங்களின் மீது மக்களுக்கும், அரசு இயந்திரங்களுக்கும் பயமும் மரியாதையும் இருந்தது..

ஆனால் முஸ்லிம் சமுதாயம் பல நூறு இயக்கங்களால் பிளவு பட்டு வீட்டுக்கு ஒரு கட்சித்தலைவரும் இயக்கத்தலைவரும் வந்தபின் சமுதாய கூடங்கள் களை இழந்து செயலிழந்து கேட்பாரற்று போயிருக்கிறது. இதனாலேயே இன்றைய இளைஞர்களில் பலரும் கூட சிறு வயதிலேயே கட்டுப்பாடற்று வழிகெட்டுப்போவதும், பயமற்றநிலையில் தனது இயக்கத்திற்காகவும், இயக்கங்களின் கொள்கைக்காகவும் உள்ளுக்குள்ளேயே துவேஷமும் காழ்ப்புணற்சியும், பகையும் கொண்டு சக மனிதர்களை நேசிக்க மறந்த நிலைக்கு போய்க்கொண்டிருப்பதும் நிகழ்கிறது...

இதுவரை நடந்த எந்த கொலைகளும் இஸ்லாத்திற்காகவோ அல்லது இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்காகவோ, நமது நாட்டில் இஸ்லாமிய முறைப்படி வாழ இயலவில்லை என்பதற்காகவோ நடக்கவில்லை, ஆனால் முஸ்லிம் இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காகவும், முஸ்லிம்களை அழித்தொழிக்கவேண்டும் என்னும் எண்ணத்தை உட்புகுத்துவதற்காக பாஷிச சக்திகள் செய்யும் பல தமூக விரோத செயல்களால் பாதிக்கப்பட்டதாலும் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும், பொருளாதாரம், மற்றும், தொழி போட்டி என வேறு வேறு காரணங்களுக்காகவே நடந்திருக்கிறது என்பதே உண்மை...

யாரையாவது எப்படியாவது பிடித்து, மனதை மாற்றி, அவர்களுக்கு எதையாவது கொடுத்து ஆள் சேர்த்து இஸ்லாத்தை நிலை நிறுத்தவேண்டிய அவசியம் இஸ்லாத்திற்கு இல்லை, அதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைவிட இஸ்லாம் அதனை வெறுக்கிறது என்பதே உண்மை...

இஸ்லாத்தில் போலீஸிற்கு ஆள் எடு்க்கவில்லை... 

இஸ்லாம் எனும் இனிய மாற்கத்தை அது சொல்லும் நற்பண்புகளை, நன்நெறிகளை, எந்த அளவுக்கு நான் அறிந்து என்னுடைய வாழ்கையில் உட்படுத்தியிருக்கிறோனோ அதே போன்று  அதனை அறியாத மக்களுக்கு நன்மை கருதி எடுத்துச்சொல்வது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு கடமையே தவிற வலுக்கட்டாயப்படுத்துவதோ யாரையும் இஸ்லாம் என்றால் என்று தெரியாதவாறே அவர்களை  இணைத்துக்கொண்டு அடையாள அட்டை கொடுப்பதற்கோ இஸ்லாத்தில் இடமில்லை....


பிறப்பால் முஸ்லிமாக இருப்பவர்களெல்லாம் சுவர்க்கத்திற்கான அடையாள அட்டையோடு இருப்பதாகவோ, அக்மார்க் முஸ்லிமாக இருப்பதாகவோ மற்றவர்கள் நினைத்தால் அதுவும் மிகப்பெரிய மெகா தவறு. நீங்கள் படித்தறிந்தபின் அல்லது இஸ்லாத்தின் குணங்களால் ஈற்கப்பட்டு இஸ்லாத்தை தழுவ முற்பட்டால் அதற்காக பெரிய பெரிய தவமெல்லாம் இருந்து ஏதேதோ செய்து அடையாள அட்டை வாங்கவேண்டிய அவசியமெல்லாம் இங்கே இல்லை...

ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, இறுதித்தூதர் முஹம்மது ஸல். அவர்கள் அவனின் தூதர் என்று கூறினால்போதும்...அதன் பின் அவரேதான் அவருடைய வழியை தேடிக்கொள்ளவேண்டுமே தவிர அவர் இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக யாரும் அவருக்கு சும்மாசனத்தை வழங்கவோ, குறைத்து மதிப்பிட்டு கேவலமாக நினைப்பதோ இல்லை. அவரின் நன்மை தீமைகளைகளை இன்னொருவரோ இன்னொருவரின் நன்மை தீமைகளை அவரோ சுமக்கப்போவதில்லை....


ஆக தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் உட்கட்டமைப்பில் பல பெரிய பிழவுகள் ஏற்பட்டு அதன் சரியான கட்டமைப்பை இழந்து  இளைஞர்கள் பலவேறாக பலவிதமான அரசில் சார்ந்த கொள்கைகளால் பிழவுபட்டு அதனூடே தனது மார்க்க வழிமுறையிலும் பல கருத்துவேறுபாடுகொண்டு, இன்று தனது விலாசம் இழந்து நிற்கிறார்கள்.. 

இதனால் நாம் இழந்தது ஏறாளம். தலைமைகளே இல்லாத காலத்தில்கூட நாம் கட்டுக்கோப்பாய் இருந்தோம். தமிழ்நாட்டில் ஓராயிரம் இயக்கத்தலைவர்களும் அரசில் தலைவர்களும் ஆனபோது கட்டும் கோப்பும் கலைந்து கேவலப்பட்டுநிற்கிறோம்....

இயக்கங்களையும் அரசில் கட்சிகளையும், அமைப்புகளையும் சார்ந்திருந்தாலும் அவரவர் சார்ந்த ஜமாஅத்களோடு தொடர்பில் இருக்கவேண்டியதும் கடமையாகிறது...அதேபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞற்களையும், மக்களையும் உடனுக்குடன் தடுத்துவைப்பதும் இளைஞர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொள்வதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்றுவதும் அதற்கான விளிப்புணர்வு நடத்துவதும் இயக்கங்களுக்கும், ஜமாஅத்களுக்கும் கடமையாகும்....


அரசியல் சார்ந்த, இயக்கங்கள் சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும், அவர்களின் தவறான நிலைபாடுகளுக்கோ, அவர்களுக்குள்ளேயான பிரச்சினைகளுக்கோ அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கோ ஜமாஅத்கள் துணைபோவதோ, ஜமாஅத்தைச்சார்ந்த மக்கள் அதற்கு துணைபோவதோ கூடாது எனவும், நியாயமான பொதுவான செயல்பாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஒட்டுமொத்த மக்களோடு துணை நிற்பதும் போராடுவதுமே சிறந்தது என்றும் நாம் நினைக்கவேண்டும்....


பொதுவாகவே ஊடகங்களை எதிர்த்து மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தவேண்டிய கட்டாயம் ஜமாஅத் கட்டமைப்புகளுக்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன், மட்டுமல்லாது அசம்பாவிதங்களுக்கும், அரசில் பிரச்சினைகளுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவதையும், பழி சுமத்துவதையும் வன்மையாக கண்டித்து அதற்காக அரசு இயந்திரங்களை ஜமாஅத்கள் நேரடியாக புகார்கள் அனுப்புவதும், போராட்டம் செய்வதும் சிறந்த வழியாகும்...


எந்ஒரு ஜமாஅத் கட்டமைப்பும் எந்த இயக்கத்தாலோ, எந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாகவோ அறியப்படாமலும் இருக்கவேண்டியதும் மிக முக்கியமான பொறுப்புமிக்கதாகவும் இருக்கிறது...


ஆக முஸ்லிம்கள் எப்படிப்பட்ட  இக்கட்டான சூழ்நிலையில் எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் மிகவும் அறிந்து சமுதாயத்தின் மீதான் பழி சுமத்தல்களையும், கேவலமான குற்றவாளிகளாகவும், சமூகத்தின் முன்னால் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதையும் இந்திய தேசத்தின் முன்னால் தோலுரித்துக்காட்டும் கடமையும் உரிமையும் கூட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது...
அதே சமயம் நாம் வீண் பழி சுமத்தப்படுவதிலிருந்து நாம் நிரபராதிகள் என்று தெழிவு படும்போது அன்றைய தினம் மிகப்பெரும் போராட்டத்தின்மூலம் அதனை மக்களுக்கு முன்னால் தெரிவிக்கவேண்டிய கட்டாயமும் கடமையும் நமக்கிருக்கிறது...


மாறாத சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கேவலமான விவாதங்களோ நாய்கள் குரைக்கும்போது பதிலுக்கு  பன்றிகளைப்போல் அவர்களின் சாக்கடையை கலக்கி அவர்களைப்போல் ஆகாமல் நாம் பரிசுத்தமான மார்க்கத்தால் வழி நடத்தப்படுபவர்கள், ஆதலால் சுத்தமாகவே இருப்போம் என்று நமது நற்செல்களால் பதிலளிப்பதுமே நமது பெரிய கடமையாகும்....



அரசு இயந்திரங்களும் கபோதிகளின் கூடாரத்தில் கஞ்சி குடிப்பவைதான். ஆனாலும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தில் ஒரு சிறு பகுதியே அப்படி இருக்கிறதே தவிர இன்றும் நெஞ்சுரம் மிக்க நேர்மையான அதிகாரிககளும் அரசும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் நம் நினைவில் வைத்து அவர்களோடு ஒத்துழைத்து நமது நிபராதித்துவத்தை தெழிவு படித்த முற்படுவதும் நமது தலையாய கடமையாகவே நான் பார்க்கிறேன்....


அனைத்து சமுதாய, மத, இன, ஜாதி, மக்களும் ஒன்றாய் சேர்ந்து எந்த ஒரு வெறியும் அற்ற இறைவன்மீதான பற்றுதல்களோடு மட்டும் முன்னேறி நல்லதொரு சமூகத்தை உருவாக்க நாம் காரணமாக அமையவேண்டும்.....



அபூ ஃபஹத்