Jul 12, 2015


அன்புள்ள அம்மாவுக்கு,

அண்ட சராசரங்கள் உன்னால்தான்
ஆளப்படுகிறது என உன் பிள்ளைகளால் ஆற்பரித்தறைகூவல் விடுத்தபோது
நீதியின் வெளிச்சம்காணவியலாமல்
நேற்றும் முந்தைய நாட்களிலும்
சிறை கொண்டிருந்தாய்...
.*
அஃதோர் அகல்விளக்கு
உடைந்து தெறித்ததில்
இருண்டுபோன இடைவெளியில்
சத்தமின்றி நீ வெளியேறியதில்
செத்து விழுந்த நீதியை நானறிவன்....
*
அதுவல்லவென் வினா..
.
அ' என எழுத்தறிவிப்பாயென
ஆ' வென்றழுதேன் நான் - ஆனால்
அம்மா என்றழைக்காத
உயிரில்லாவிடத்து சும்மாவேனும்
அம்மாவாகிப்போனாயோ நீ...
.
அமுதம் தொடும் காலத்தும்
அம்மாவென்றே அழுகிறேன் - என்
அம்மாவென்றால் நீ என்
அழுகுரல் கேட்டிருப்பாய் நீதான்
சும்மாவேனும் அம்மாதானே.....
.
பாலருந்து வயதில் எனக்கு
மதுவூட்டும் தமிழ்குலத்தில்
பிறந்துபோயினேன் நான் - விஷம்
கொண்ட நாவால் நான் சும்மாவேனும்
அம்மா என்றழைக்கிறேன் உனை...
*
தள்ளாடும் தந்தையும்
ஃபுள்ளாடி வீழும் தங்கையும்
அரை நிர்வாணமாகும் அண்ணனும்
ஆட்டுவிக்கப்படுகின்றனர்
உன் மதுக்குப்பிகளால் - இன்னும்
உனை தவிக்கவைக்கவில்லையோ
நீ சும்மாவாகிப்போன அம்மாவோ....
.
அன்றொருநாள் அப்பா
பிறசவித்த சாராயக்குப்பிக்கு
இன்றும் புனிதம் தேடுகிறார் -ஆனால்
அப்பாக்களையே குடிமுழுகவைத்து
சும்மாவேனும் ஆர்ப்பரிக்கிறாயோ...
.
என் வலிகளோ வார்த்தைகளோ
உனை ஏதும் செய்யாதிருக்கையில்
நீ அம்மாவல்லவே .....
நீ சும்மாவாகிப்போனவள்....