வளைகுடாவில்

ஹலோ...ஹலோ...றஃபீக் எங்கடா இருக்க..?

ஹலோ..சொல்லு சொல்லு மச்சான்..என்ன என் விஷயம்...

இல்ல மப்ள இண்ணக்கி வீக் எண்டுல்ல.., மத்தியானமே டியூட்டி முடிஞ்சிடிச்சி..அதான் போண் பண்ணினேன்...நீ ஃபிறீயா...

இல்லடா இன்னும் முடியல, 7:30 ஆயிடும், என்ன விஷயம்...என்னடா மச்சான் சொல்லு...என்ன விஷயம்...

ஒண்ணுமில்லடா நைட் அபுதாபில இருந்து அஸ்கர் வாறேண்ணு சொன்னான்.. அப்புறம் ஷஃபீக் வருவான், அன்சார் மத்தியானமே வந்து என் உயிரை எடுக்கிறான்... நீ வயேன், வந்தா நல்லா இருக்கும், கழிஞ்ச வாரம் நீ ஏமாத்திட்டே...சரி வருவியா மாட்டியா...

நான் டிறை பண்றேன் மாப்ள...இனி வீட்டுக்கு போய், டிறஸ் எல்லாம் கழுவணும், அப்புறம் எத்தனை மணிக்கு புறப்பட்டு எப்போ வர்றது மாப்ள...நான் வரலடா மச்சான்....

என்ன நீ இப்டி சொல்றே..நீ வர்றே... அவ்வலவுதான்...நோ பிராப்ளம் நான் வெயிட் பண்றேன்...

சரி மச்சான், நீ கோபப்படாத, நான் ஒரு 8:30-க்கெல்லாம் வந்துடறேன்...

ஓ.கேடா மாப்ள...

--
வாடா அஸ்கர், சாதனம் வாங்கீட்டு வந்திருவோம்...

என்னது வாங்கணும், எல்லாம்தான் றூம்ல இருக்கே...அதில்லடா இண்ணக்கி கொஞ்சம் நல்லா டிரை பண்ணலாம்ணு பாக்கறேன்...டேய் நீயே கஷ்டப்படுறே இதுல வேற இவ்வளவு செலவு பண்ணவேண்டிய தேவை எதுக்கு...இருக்கிறது போதும், 5 பேர் தானே...

இரவு 9 மணி, றஃபீக் வந்தவுடன் காமில் மகிழச்சியில் சத்தம் போட்டான், இருந்தாலும் உனக்கு பந்தா ஓவர்டா றஃபீக், வாறியாண்ணு கேட்டா வரணும், அதை விட்டுட்டு ரீல் வேற...

வா..வா..

றூமுக்கு போறதுக்கு முன்னால சொல்லு, அவனுங்க ஓ.கே.. உனக்கு என்ன வேணும்...

எல்லாரையும் போல போதும், எனக்குண்ணு ஸ்பெஷியல் எதுவும் வேண்டாம்...

சரி எவ்வளவு வாங்கலாம்... 1 ஃபுள் போதாது, 2 ஃபுள்...??



டேய் மச்சான் என்னடா தேவையில்லாம் காசை கரியாக்குறே... 5 பேருக்கு 1 புள் போதும் கறெக்டா இருக்கும், இவனுங்களை நம்பி அதிகமா வாங்காதே...


சரி உன் இஷ்டம்...

போடா உன்னால முடியலைண்ணா விடு....பாரு இவனுங்களை....எப்புடி இருக்கானுங்கண்ணு... அஸ்கர் நீ சொல்லு...

நிறைய வாங்காத தேவைக்கு வாங்கு..ஓ.கே...

ஆமா இவரு பெரிய ஆளு...போடா...கேட்டா பதில் கறெக்டா சொல்லு...

மாப்ள நீ வாங்குடா பாக்கி இருந்தா நாளைக்கு அடிக்கலாம்...

கூட என்ன வேணும்....பெப்ஸி ...7-அப்....மிரண்டா...

எனக்கு 7அப், லேய் வேண்டாம் பெப்ஸிதான் நல்லா இருக்கும்,

எதாவது ஒண்ணு சொல்லுங்கடேய்..எல்லாத்தையும் வாங்கவா முடியும்...

மாப்ள ஒரு சலாட் வாங்கிக்கோ....அது அவனே தருவாண்டா...

அதெப்படிடா... நீ பேசாம வா....முதல்ல உள்ள போய் பார்ப்போம்...

சரி காமில்.. கூட எதாவது வேண்டாமா...

என்ககு வேணாம்... நான் தூங்கீடுவேன்... டேய் எனக்கு....எனக்கும் வேணும்...

சரி பாப்போம்....

மாப்ள உன் மாமா வருவாரா.... வந்தா வெலங்கினமாதிரிதான்... அது நடக்காது...

கடைக்குள் போனார்கள் றஃபீ்க், அஸ்கர், ஷஃபீக். காமில்.

ஆர்டர் கொடுத்தான் காமில்...

2 புள்


means....Hot or normal... hahahaa..cool dear,

ஸ்பைசி or Normal...

நார்மல் ஓ.கே...

One Full How many person can.??

heai.. up to your cap...

normally how you do for 1 person.

3

I mean 3 pcs Chicken, one glass fountain Pepsi..

1Full How many pieces...??

21 Pieces of Chicken (1 full Bucket) 2 lit. Pepsi or 7Up, 1 Sweet Salad pocket, 250 gram potato chips, khapus...

மாப்ள 2 ஃபுள் வாங்கினா 42 பீஸ் சிக்கன் ஆகிடும், அப்போ எப்புடி..அதான் சொன்னேன் தேவைக்கு வாங்குண்ணு...

அப்படி அன்றைய தினம் இரவு 1 ஃபுள் கெண்டக்கே சிக்கன் மற்றும் 1 ஆஃப் கெண்டக்கே சிக்கன் வாங்கி அனைவரும் சூப்பராக சாப்பிட்டு தூங்கினர்...



கடமை.....!!!
**********

""டேய்....டேய்...எப்பவே எழுப்புறேன்...எழுந்திருடா...டேய்...பீர்,"".. முஜீப் உருட்டி எழுப்பினான்...

கம்பளிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த தனது காலை உள்ளே இழுத்தவாறு

""ம்ம்...சரி, இப்போ எழும்பறேண்டா....சே...என்னடா...இப்பவே...கொஞ்சம் வெயிட் பண்ணு இப்பே எழுந்திருவேன்..."

மீண்டும் சுக தூக்கத்தில் பீர் முஹம்மது.."


டேய் நீயாவது எழும்புடா...டீ போட்டு வச்சிருக்கேன்...சாதனம் எதுவும் இல்லை, நெஸ்டோ வரைக்கும் போணும்...எனக்கு டிரைவிங் தெரிஞ்சா அல்ளாண உங்களை எழுப்பவே மாட்டேண்டா...முஜீப் அடுத்த பெட்டில் படுத்திருந்த மஹபூபை அழைத்தான்..." வேலைக்கு ஆகாது...

டேய் அரை மணிநேரத்தில எழும்பலைண்ணா தண்ணியை தலைவழியா ஊத்தீருவேன்.."" - முஜீப்.

அல்ளோ இவன் தொல்லை தாங்க முடியலைடா..இப்பதாண்டா தூங்கினேன்...அதுக்குள்ளே ஏண்டா உயிரை எடு்க்கறே..

மஹபூப் உளறித்தள்ளிவிட்டு கைகளை கால்களுக்கிடையில் சொருகி மீண்டும் தூங்கலானான்..

சரி ஓ.கே..நான் போறேன்.. கோல்டு ஸ்டோர்ல போய் எதாவது கெடக்கிறத வாங்கி வக்கீட்டு வாறேன்...""

எதுவுமறியாமல் தூங்கிக்கொண்டிருந்தனர், பீர், காதர், மஹபூப், ஷமி மற்றும் நாசர்..

முஜீப் நடையை கட்டினான்.. முக்கா மணிக்கூரில் கை நிறைய பொருட்களுடன் வந்து கதவை திறக்க முடியாமல் பெல் கூட அடிக்க முடியாமல் திணறினான். ஒரு கையில் முழுவதும் பிளாஸ்டிக் கீஸ், மறு கையில் ஒரு டிறே முட்டை... கீழே வைக்க கூட முடியவில்லை...


ஒரு வழியாக எதிர் ஃபிளாட்டில் வசிக்கும் சலாம்கா முஜீபின் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்து கொடுத்துவிட்டு முஜீபிடம் கோபத்தில் ஏதோ சொல்லிச்சென்றார்...

கள்ள சூவருகளு நன்னாவில்ல இவரொன்னும் முஜீபே...இ்வம்மாரு நன்னாவில்லா... நினக்கு வட்டா..ராத்ரி முழுவன் வண்டிக்கதகளும் சீட்டும் களிச்சிட்டு ராவில சுப்ஹ் பாங்கு விளிக்கும்போ ஒரு ஒறக்கு... இதிநொக்கே நீயாணு காரணம் முஜீபே...என்று மலப்புறம் மலையாளத்தில் திட்டித்தீர்த்தார் சலாம்கா...

கதவை திறந்து பார்த்த முஜீப் அதிர்ந்துபோனான்...

"" டேய் என்னடா பன்னாடைகளா இதுவரை எழும்பலியா...என்ன எளவும் செய்யுங்கோ..நான் குளிக்கப்போறேன் ""

எதையும் காதில் எடுத்துக்கொள்வதாக இல்லை தூங்கும் நால்வரும்...

குளித்து முடித்து உடை அணிந்து டேய் நேரம் ஆச்சு வாங்கடா...வந்தா கெடக்கும்....இல்லைண்ணா பழைய கதைதான்..நான் போறேன் என்று சொல்லி முஜீப் றூமை விட்டு வெளியேறினான்..""

கொஞ்ச நேரம் போயிருக்கும் திடீரென மஹபூப் எழும்பினான்.. அல்லாஹ் நிறைய நேரம் ஆயிட்டே...சே..பாத்றூமுக்கு ஓடினான்...

5 நிமிடத்தில் குளி்த்து உடை மாற்றி எதையோ கையில் எடுத்துக்கொண்டு ஓட தயாராகும்போது பீர் எழும்பினான்...டேய் முஜீப் ஏண்டா என்னைய எழுப்பைல....?? நீ ஒரு மை.... போடா என்று சொன்னவாறே் பக்கத்தில் படுத்திருந்த காதரையும், ஷமீமையும் ஓங்கி ஒவ்வொரு அறை விட்டதில் பதறி எழும்பி என்னல..தூங்க உடமாட்டியாண்ணு கேட்டுக்கொண்டே பக்கத்தில் இருந்த 1100 நோக்கயா போணை எடுத்து மணியை பாத்துவிட்டு...படச்சோனே...அந்த றாஸ்கல் எங்கடா அன்சாரை...எழுப்பாமலே போய்ட்டான்...""


மஹபூப் குறுக்கிட்டான், டேய் சும்மா போ..அவன் காலைலயே எழுப்பினான்...யாரும் எழும்பல...சரி நான் போறேன் வந்து சேருங்க...

பீர் பேசிக்கொண்டிருக்கும்போதே காதர் பாத் றூமுக்கு உள்ளே நைசாக போய்விட்டான்.

ஷமீம் கோபத்தில் பாத்றூம் கதவை தள்ளினான்...டேய் முடியலடா ப்ளீஸ்...""

இப்போ வந்திருவண்டா என்று சொல்லியவாறே எல்லாம் முடித்து குளித்துவிட்டு வெளியே வந்தவுடன் ஷமீம், பின்னர் பீர் என எல்லோரும் றெடியானபோது ஏறத்தாள நேரம் அதிகம் ஆகிவி்ட்டது.

மெதுவாக ஜன்னலை திறந்து பார்த்தான் ஷமீம் சத்தம் குறைந்து வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது...சிக்னல்களில் வாகனங்கள் இல்லை... தம்மாம் மெயின் சிக்னல் ஆட்கள் சில் ஓடிக்கொண்டிருந்தனர்...ஷமீம் படார் என ஜன்னலை அடைத்துவிட்டு ஓடினான்...""



டேய் நேரம் நெறய ஆயிட்டுடா மச்சான்..ஓடுறா இண்ணக்கும் பழைய கதைதான்ணு நெனக்கியேன்...என்று சொல்லி கையில் கிடைத்ததை எடுத்து சுருட்டிக்கொண்டு மூவரும் ஓடினர்...

""என்ன கொடுமைடா இது இவ்வலவு நேரம் ஒரு வண்டி கூட இல்லை..இப்போ பாரு என்ன
போக்கு போறானுவோ""....சிக்னலை முறிச்சி கடந்து ஓடினர்...அல்லாஹ்...கொஞ்சம் ஸ்லோவா போங்கடா களியில்லடா....காதர் இரைத்தான்...

ஒரு வழியாக ஓடிச்சென்றடைந்து பள்ளிக்கு வெளியே வெகு தூரத்தில் இருக்கும் பிஸி மேன் மார்க்கெட்டுக்கு முன்னால் வரிசையாக கை கட்டி நின்றிருந்தவர்களுக்கு பக்கத்தில் முசல்லாவை விரித்து அல்லாஹு அக்பர் என்று கை கட்டினர்"" கை கால் நடுங்க தொழுதனர்...

கிடைத்த ஒரு றக்கஅத்தையும் முடித்த கையோடு நேரத்தில் தொழ முடியாத ஏமாற்றத்தோடு மூவரும் முசல்லாவை மடக்கி கையில் எடுத்துக்கொண்டு முஜீபை நோக்கி நின்றனர்.....

இவன் தொழுதா உடனே வரமாட்டான்...இவன்ட்ட இதுதான் பெரிய பிரச்சினை...எவ்வளவு நேரம்டா இவன் பள்ளியில இருப்பான்....பசிக்கிதுடா..என்று ஷமீம் சொல்ல பீர் முஹம்மது சொன்னான் வாருங்கோ நமக்கு போவோம்..நல்லா பசிக்கிது..முதல்ல நம்ம சாப்பிடுவோம்..அவன் வருவான்...

இனி எல்லாரையும் பாத்து முத்தி மணத்தீட்டு வரும்போ வயிறு கொத்துபா ஓதீரும்..வாங்கடேய்...என அவசர அவசரமாக நடையை கட்டினர்..

மாப்ள காதர்..இண்ணக்கி முஜீப் என்னத்தை வச்சானோ....?? பிரியாணி வச்சிருப்பானோ...??

ஏன் நீ கிச்சன்ல போனால்லா...பாக்கலியா...??

நல்லா மணம் மாப்ள...ஆனால் என்ன இருக்குண்ணு கவனிக்கலை...

எதுவும் வச்சானா இல்லியா....?? பீர்..

அப்டியெல்லாம் செய்யாம இருக்கமாட்டான்.... - காதர்...

ேய் மாப்ள ஒண்ணும் வக்கலைண்ணா சத்தியமா கொண்டே புடுவேன் அவனை... நான் மெனக்கெட்டு ரஸ்தனூறால இருந்து வந்து கடைல ஒண்ணும் சாப்பிட முடியாது.... நாசர் பின்னாலிருந்து குரல் கொடுத்தான்..


அடங்கு மாப்ள...நீ அடங்கு....சாப்பாடுதானே...சவூதி அரேபியால பஞ்சமா...-காதர்


""எதுக்கும் சிறாஜ் காக்கா வரும் அதுவரை நில்லு எல்லாரும் ஒண்ணா போலாம்...""

சரி, இண்ணக்கி சாப்பிட்டதிரிதான்.... அவரு அசர் தொளுது மஃரிபுக்கு வருவாரு அப்போ உச்ச சாப்பாடா...நான் போறேன்..சாவியை இஞ்ச எடு....


சரி வாங்க போவோம்.. என விரைந்தனர் றூமை நோக்கி...""

றூமை நெருங்கும்போதோ மூக்கை துளைத்தது வாசனை...என்ன மாப்பள இது முஜீபை தவிர எவனும் இப்புடி வக்கமாட்டான்..கண்டிப்பா கலக்கீருப்பான்...சாப்பிட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை... ---நாசர்.

பீரு நீ பிளைட்டை கழுவி வச்சிரு நான் போய் ஒரு 7அப் வாங்கீட்டு வந்திர்றேன்..."" - மஹபூப்..

சரி மாப்ள...நீதாண்டா பாசம் உள்ளவன்... --காதர்""

றூமின் கதவை திறக்கும்போது எதிர் வீட்டு வாசலில் சலாம்கா நின்றார்...

எந்தா நல்ல பார்ட்டிகள்..ஏவிடே இருந்நு தொழுது...நான் பேக்கில் நின்நு நோக்கி....நிங்ஙளொக்கே ஒந்நிச்சி இமாமின்றே தொட்டு பின்னில் நின்நது கண்டாயிருந்நு.....எந்தா சுகம் அல்லே மக்களே....

நந்னாயிக்கீடேடா மக்களே...... என்று கிண்டல் பண்ணிவிட்டு ஷெரி ஷெரி..வா.. கழிக்காம்.. நல்ல நெய்சோறு உண்டு..வாடா குறே உண்டு...வாடா மக்களே... என்று வாய் நிறைய கூப்பிட்டார்...

அவர் மீது கோபத்தில் முறைத்துவிட்டு சும்மா ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேண்டாம் நம்மள் இவிடே கழிக்காம் என்று களியிக்காவிளை பாஷையில் ஷமீம் சொல்லிவிட்டு வீட்டில் பிரியாணி இருக்கும் நம்பிக்கையில் கெத்தாக கதவை திறந்து உள்ளே வந்தனர் அனைவரும்....

எல்லோரும் றூமின் உள்ளே போய் இருக்க பீர் முஹம்மது பிளேட்டை கழுவ கிச்சனுக்கு வர லைட்டை போட்டவுடன் அதர்ந்துபோனான்....நேராக றூமில் வந்து,

டேய் இண்ணக்கி ஆப்புதான் மோனே....என்று சொல்ல அங்கே ஏற்கெனவே நியூஸ் பேப்பர் விரித்து ரெடியாக காத்திருந்த காதரை மிதித்துவிட்டு....பீர் சொன்னான்,

கிச்சனை பாத்தியா நீ...பாக்காமலே நல்லா மணக்குது, அவன் மலத்தீட்டான், பயங்கர பிரியாணி..என்னடா இது...அங்க போய் பாரு கிச்சன்ல....

காதர் போய் பாத்துட்டு வந்து, """இல்லடா மாப்ள நல்லா மணத்துதுடா...இன்னா இப்போகூட மணக்குது....."""

கொன்னுருவேன் போயிரு...சலாம்கா நல்லா கூப்பிட்டாரு அவரையும் நக்கல் பண்ணீட்டு வந்துட்டு....டேய்..பசிக்கிடா....---ஷமீம்....


இப்போ என்ன செய்றது வெளியே போவோமா என மஹபூப் கேட்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது...

அஸ்ஸலாமு அலைக்கும்... சிராஜ் காக்கா உள்ளே வந்தது...

வியாழாச்ச ராத்திரி தொடங்கணும், எனத்தடா பேசுதியோ...ஒறங்குறவனையும் ஒறங்க உடாம ஒரே அவுத்து தட்டுயல....இவனுக்கு வாய்ல ஸ்பீக்கர்தான் இருக்கோ என்னவோ...சத்தத்துக்கு ஒரு கணக்கு இல்ல.... நாலு மணி வரை நல்லா கும்மாளம் போட்டுட்டு சுப்ஹ் வாங்கு இடும்போ சத்தம் கேட்டுது, நான் பாத்துட்டுதான் கெடந்தேன்...

நான் பாத்றூம் போவும்போ எல்லாரும் பேசீட்டு இருந்தத...வெலியே வந்து பாக்குறேன்....எனக்கு பாத் றூம் லைட்டையும் சேத்து அணைச்சிட்டு வந்து கெடந்துட்டானுவோ....


ஒவ்வொருத்தனா எழுப்புனேன்...எல்லாவனும் வாறேன் வாறேன்ணுதான் சொல்ளியானுவோ..கடையிவரை வாறம மாதிரி இல்லை....பீரம்மது உனக்கு இதுல வேற தவ்ஹீது பேச்சி... காதர் எல்லாம் முடிச்சாச்சி, இனி தொழாண்டாம்....ஷமிக்கு ஒரு கெட்டு சீட்டு மட்டும் போரும்....நடைங்கோ...எவ்வளவு நாள் இப்புடீ நடக்குதியோண்ணு பாப்போம்....

காரியமெல்லாம் செரி...தொழாம இனி எவனும் தவ்ஹீது, சுன்ன்ததுண்ணு எதாவது பேச்சு கேக்கணும்...அப்போ இரிக்கி... ---சிராஜ் காக்கா டென்ஷனந் ஆனார்....

ஷமீம் இடை மறித்தான்...செரி செரி காக்கா போட்டு...போட்டு காக்கா ...இ்பபோ அடுத்த வேலைய பாப்போம்... அங்க கனிமொழி அறஸ்டாம்...ராஜா உள்ளுக்காம்..எந்று சொல்லி ஷமீம் சிராஜ் காக்காவின் வாயை அடைத்தான்....

கொஞ்சம் கழியும்... என்று சொல்லிவிட்டு வெளியே தட்டக்கேட்ட கதவை திறந்துகொடுத்தார் முஜீபுக்கு...

இரண்டு கையிலும் கீஸ் நிறைய சாப்பாடும் வாங்கிவி்ட்டு தூக்க களியாமல் வந்து நின்றான் முஜீப்...

உள்ளே வந்து பார்த்தால் ஒரு 7 அப் இருந்தது... முஜீப்கேட்டான் யார் வாங்கினா....நான் வாங்கியாச்சே....

சிராஜ் காக்கா சொன்னார், பிரியாணிக்க மணத்துல மயங்கி மஹபூப் வாங்குனது அது...நீ வா...என்ரு சொல்லி...விரித்த பேப்பரில் எல்லாருக்கும் பிளேட் கழுவி எுத்து வந்து எல்லோருக்கும் விளம்பி கொடுத்தார் சிராஜ் காக்கா..

முஜீப் நாசரை கூப்பிட்டான், வாடேய் அடுத்தவாரம் பிரியாணி சூப்பரா வக்கலாம்...இப்போ இதை சாப்பிடு...இது ராயல் மலபார் பிரியாணி....நம்ம ஊர் பிரியாணிமாதிரியே இருக்கும்..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல...இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் அடிச்சி பொளிப்போம் என்று கலகல என சிரித்தவாறே அனைவரும் சோற்றில் கை வைக்க ஷமீம் கேட்டான்,

குரு ஊறுகா இருக்கா......

சிராஜ் காக்கா பொட்டிச்சி்ரி்ததுவி்டடு....இருந்தாலும் ஒனக்கு...என அனைரும் சிரிக்க
அந்த வார வெள்ளிக்கிழமை கடந்துகொண்டிருந்தது...


அன்புடன்

அபூ ஃபஹத்