பசி....
சுண்ணாம்பில் தோய்ந்த
வெற்றிலை வாயில் - வெறுமனே
மென்று துப்புகின்ற
சிவப்புக்கறைகளில்
உண்ட உணவு செரித்ததாய்
மனம் கொள்ளும் போதை...
விற்று வரவுகளைமூன்று
முறை எண்ணிவிட்டேன்
ஒரு நோட்டு அதிகமாகவே
இருப்பதுபோல் தெரிகிறது
அது பொய்யென
எனக்குப்புரிகிறது ஆயினும்
வெற்று வயிற்றோடு
பசிக்கிறது என்று மெய்யாய்
பலமுறை யாசிக்கும்
வயோதிகரின் குரலை
ஏனோ நான் கேட்கவில்லை...
பசி தாங்கவில்லை
ஒரு நாள்தான் வீட்டில்
யாருமில்லை
வெளியே உண்ண
மனமில்லாமல் வயிற்றில் துணியை
கட்டிக்கொண்டேன்
தண்ணீரை தின்றேன்
தூங்கித்தீர்த்தேன் என பாடித்தீர்த்தேன்
காற்றையும்
அழுக்கையும் புகையையும்
சுவாசித்தும் தின்றும்
குடித்தும் ஏதோ சில ஆண்டுகளாய்
கட்டிய அழுக்காடையோடு
சாலையில் திரிந்த ஊருக்கே
பரிச்சயமான அந்த
பைத்தியக்காரனின் வயிற்றிலோ
சிரிப்பிலோ பசியால்
கட்டப்பட்ட எந்த துணியையும்
காணவில்லை நான்....
ஏதோ ஒரு திருமணத்தில்
தின்ற பிரியானிக்குப்பின்
விளம்பப்பட்ட சிகரெட்டுக்காய்
நான் முந்திக்கொண்டதில்
முட்டிமோதி என் கைகளை
வந்தடைந்தது பஞ்சு மட்டும்தான்
அதே திருமணப்பந்தலின்
பின்னால் எச்சில்
இலைகளுக்காகவும் முட்டி
மோதிக்கொண்டதில்
வயதின் முதுமை பாராத
அந்த அழுக்குத்தாயின்
கையில் சிக்கியது
யாரும் தின்றறியாத
பல்சுவை பருக்கைகள்
அவள் பின்னாலிருந்து வந்த
பிஞ்சுக்குரலில் கிழியாத
எச்சில் இலையின் சாதம்.....
எப்போதாவது
பசிப்பவனுக்கு மட்டுமே
பசி பிணியாய் தெரியும் - சதா
பசியிலேயே இருப்பவனுக்கு
அது ஒரு சிறு பிழை...
சுண்ணாம்பில் தோய்ந்த
வெற்றிலை வாயில் - வெறுமனே
மென்று துப்புகின்ற
சிவப்புக்கறைகளில்
உண்ட உணவு செரித்ததாய்
மனம் கொள்ளும் போதை...
விற்று வரவுகளைமூன்று
முறை எண்ணிவிட்டேன்
ஒரு நோட்டு அதிகமாகவே
இருப்பதுபோல் தெரிகிறது
அது பொய்யென
எனக்குப்புரிகிறது ஆயினும்
வெற்று வயிற்றோடு
பசிக்கிறது என்று மெய்யாய்
பலமுறை யாசிக்கும்
வயோதிகரின் குரலை
ஏனோ நான் கேட்கவில்லை...
பசி தாங்கவில்லை
ஒரு நாள்தான் வீட்டில்
யாருமில்லை
வெளியே உண்ண
மனமில்லாமல் வயிற்றில் துணியை
கட்டிக்கொண்டேன்
தண்ணீரை தின்றேன்
தூங்கித்தீர்த்தேன் என பாடித்தீர்த்தேன்
காற்றையும்
அழுக்கையும் புகையையும்
சுவாசித்தும் தின்றும்
குடித்தும் ஏதோ சில ஆண்டுகளாய்
கட்டிய அழுக்காடையோடு
சாலையில் திரிந்த ஊருக்கே
பரிச்சயமான அந்த
பைத்தியக்காரனின் வயிற்றிலோ
சிரிப்பிலோ பசியால்
கட்டப்பட்ட எந்த துணியையும்
காணவில்லை நான்....
ஏதோ ஒரு திருமணத்தில்
தின்ற பிரியானிக்குப்பின்
விளம்பப்பட்ட சிகரெட்டுக்காய்
நான் முந்திக்கொண்டதில்
முட்டிமோதி என் கைகளை
வந்தடைந்தது பஞ்சு மட்டும்தான்
அதே திருமணப்பந்தலின்
பின்னால் எச்சில்
இலைகளுக்காகவும் முட்டி
மோதிக்கொண்டதில்
வயதின் முதுமை பாராத
அந்த அழுக்குத்தாயின்
கையில் சிக்கியது
யாரும் தின்றறியாத
பல்சுவை பருக்கைகள்
அவள் பின்னாலிருந்து வந்த
பிஞ்சுக்குரலில் கிழியாத
எச்சில் இலையின் சாதம்.....
எப்போதாவது
பசிப்பவனுக்கு மட்டுமே
பசி பிணியாய் தெரியும் - சதா
பசியிலேயே இருப்பவனுக்கு
அது ஒரு சிறு பிழை...