Jun 27, 2011

ஐ.டி. ஊளியன்

காதில் கடுக்கண்,
கண்ணில் கலர் லென்ஸ்,
பிருவம் துளைத்து வளையம்
காதிலும் வளைந்து....

முன்குறிப்புடன் பனியன்
பின்னங்கீற்று தெரிய பேன்ட்
பிடரியின் கீழ்வரை மயிர்
கையில்லாதவனும்
அடிக்க நினைக்கும் முகம்,

தேய்த்துப் பழக்கமில்லாத சட்டை
அதில் சும்மா இரண்டு பொத்தான்கள்
இடுப்பை இறுக்காத பெல்ட்
கர்மம் என்னத்துக்கோ என தொங்கும்
முன்னாலே...

தீய்ந்துபோன வயிறு
தேய்ந்து போன தோள்பட்டை
அதில் தூக்கு மாட்டும் அளவுக்கு
நீளத்தில் ஒரு பை,

இரண்டு புத்தகம்,
15 சி.டி க்கள்,
கிரியேஷனும் பாதியில்
இம்ப்ளிமென்டேஷனும் பாதியில்

ராத்திரியில் கப்பும்
நடு சாமம் வரை பப்பும்,
குட்டிகள் சிலநேரங்களில்
சிலருடன் - கேட்டால்
கேள் பிரண்ட்,
கேட்காவிட்டால் எந்த பெட்டோ....

நுனி நாக்கில் ஆங்கிலம்
ரோட்ல எவனாவது
பிச்சை கேட்டா மட்டும்
தள்ளக்கும் தகப்பனுக்கும்
தானா வரும்...

தூங்காம பேஸ் புக்
தூங்கி தூங்கி
பீஸிபிள் புடுங்கல்,
இதுக்கு லகரங்களில் சம்பளம்

வீட்ல பணம் கேட்டா
சாரிம்மா இனி எதுவும் கேக்காத
நான் MBA ஜாயின் பண்ணீருக்கேன்...

இவனுக்காக அம்மாபொண்ணு பாத்து வப்பா
கால் காசுக்கு தேறாத சுபாவம்
இவனுக்கு ஒண்ணேகால் கிலோ தங்கம்
கேக்கும்...

சைக்கிள்ள ஏத்தினாலே
கொய்யால பத்து தபா கழுவணும்
இவனுக்கு ஸ்கோடா கார்
கேக்கும்....

இவன நம்பி பொண்ண குடுக்கிறவன்
நேந்துதான் குடுக்கணும்
குடுக்கிறவனுக்கென்ன
பையன் ஐ.டி.யா.? வாங்குறது லகரமா
அவ்ளவுதான்...
அவன் கன்னியா..!!!
துலாமா எதுவும் வேண்டாம்...

இவன்தான்
இன்றைய ஐ.டி ஊளியன்...

எல்லாரும் இல்லப்பா
இப்படி இருக்கிற பலரைப்பற்றி
சொல்றேன்....

மனசு வலிச்சா திருந்திரு...

இல்லண்ணா
எழுதுன என்னைய திட்டீரு....

அன்புடன்

குளச்சல் ""பூ ஃபஹத்.""


காதில் கடுக்கண்,
கண்ணில் கலர் லென்ஸ்,
பிருவம் துளைத்து வளையம்
காதிலும் வளைந்து....

முன்குறிப்புடன் பனியன்
பின்னங்கீற்று தெரிய பேன்ட்
பிடரியின் கீழ்வரை மயிர்
கையில்லாதவனும்
அடிக்க நினைக்கும் முகம்,

தேய்த்துப் பழக்கமில்லாத சட்டை
அதில் சும்மா இரண்டு பொத்தான்கள்
இடுப்பை இறுக்காத பெல்ட்
கர்மம் என்னத்துக்கோ என தொங்கும்
முன்னாலே...

தீய்ந்துபோன வயிறு
தேய்ந்து போன தோள்பட்டை
அதில் தூக்கு மாட்டும் அளவுக்கு
நீளத்தில் ஒரு பை,

இரண்டு புத்தகம்,
15 சி.டி க்கள்,
கிரியேஷனும் பாதியில்
இம்ப்ளிமென்டேஷனும் பாதியில்

ராத்திரியில் கப்பும்
நடு சாமம் வரை பப்பும்,
குட்டிகள் சிலநேரங்களில்
சிலருடன் - கேட்டால்
கேள் பிரண்ட்,
கேட்காவிட்டால் எந்த பெட்டோ....

நுனி நாக்கில் ஆங்கிலம்
ரோட்ல எவனாவது
பிச்சை கேட்டா மட்டும்
தள்ளக்கும் தகப்பனுக்கும்
தானா வரும்...

தூங்காம பேஸ் புக்
தூங்கி தூங்கி
பீஸிபிள் புடுங்கணும்,
இதுக்கு லகரங்களில் சம்பளம்

வீட்ல கேட்டா
சாரிம்மா இனி எதுவும் கேக்காத
நான் MBA ஜயின் பண்ணீருக்கேன்...

அம்மா பொண்ணு பாத்து வப்பா
கால் காசுக்கு தேறாத சுபாவம்
ஒண்ணேகால் கிலோ தங்கம்
கேக்கும்...

சைக்கிள்ள ஏத்தினாலே
கொய்யால பத்து தபா கழுவணும்
இவனுக்கு ஸ்கோடா கார்
கேக்கும்....

இவன நம்பி பொண்ண குடுக்கிறவன்
நேந்துதான் குடுக்கணும்
குடுக்கிறவனுக்கென்ன
பையன் ஐ.டி.யா.? வாங்குறது லகரமா
அவ்ளவுதான்...
அவன் கன்னியா..!!!
துலாமா எதுவும் வேண்டாம்...

இவன்தான்
இன்றைய ஐ.டி ஊளியன்...

எல்லாரும் இல்லப்பா
இப்படி இருக்கிற பலரைப்பற்றி
சொல்றேன்....

மனசு வலிச்சா திருந்திரு...

இல்லண்ணா
எழுதுன என்னைய திட்டீரு....

அன்புடன்

குளச்சல் ""அபூ ஃபஹத்.""

Jun 10, 2011


கருவின் குற்றம்....

"என் உயிரினும் மேலான"
எனும் போதெல்லாம் உனக்காய்
உடன் பிறப்புக்கள் தனது
உயிரையே கொடுத்தார்கள்...

முரண்பாடுகள் முளைக்காமல்
உடன்பிறப்பின் முகங்களை
முரசொலியின் முந்தானையால்
மூடிமறைத்தாய்..

வலத்தொன்றும் இடத்தொன்றுமாய்
கவிக்கோக்களும் கவியரசுகளும்
நின் புகழ் பாட
மானும் மயில்களும்
நின் முன் ஆட திரைத்துறையாய்
மாறிப்போனது உன் வாழ்க்கை...

எமக்குத்தெரியும் இப்போதெல்லாம்
நின் புகழ் பாடாத எந்த வரிகளும்
கவிதையாவதில்லையென்று-
வரிகளோ வார்த்தைகளோ
விஷம் கலக்காமல் விஷயம்
அறியத்தருவதே எமது லட்சியம்

சுயநலத்தின் சுய ரூபம்
அரசு ஊளியன் – நின் கைகள்
அவனுக்காக மட்டும் சூரியக்கதிராய்
சுழன்று வெளிச்சம் பரப்பும்,
நீயும் அப்படித்தானே
பாட்டாளியை ஏமாற்றினாலும்
படிப்பாளியை ஏமாற்றமாட்டாய்...

பாழ்பட்ட பாட்டாளிக்கு ஒரு ரூபாய்க்கு
அரிசி கொடுப்பாய் - நின்
வீட்டில் மட்டும் பட்டை தீட்டிய
பசுமதி அரிசியல்லவா

உனது விழுதுகள்
நிமிர்ந்தால் பாரீசில் மதிய உணவு
உட்கார நேர்ந்தால் ஹாங்காங்கில்
தேநீர் விருந்து.....

எமது குழந்தைகள் இன்றும்
கையால்தான் உண்கிறது
பசுமதி ஆனாலும் பழைய சோறானாலும்
ஏனெனில் கரண்டிக்கு ஆசைப்பட
அவர்களுக்கு காரணங்கள் இல்லாததால்....

எம்மீது உனக்கு சிரத்தை போனது
உமது குடும்பம் சிறைக்கு போகிறது
உனக்கென்ன கவலை
வீரத்தம்பிகளாய் நின்
முன்னால் அஞ்சா நெஞ்சர்கள்
நின் பின்னால் தழபதிகள் – தங்கை
என்ன தரணியையே மீட்பார்கள்...


வழி பிழைத்ததோ உனக்கு..?
பெரியார் தெரியாதானாய்,
அண்ணாவின் அறிவிழந்தாய் - உன்
உதிரத்தில் முழைத்த
விருட்சங்களுக்கு மட்டும் கிளை
பரப்பினாய் அதற்காய் எம் செந்நீரை
பிழிந்தெடுத்தாய்......


முதல் முதலாய் நின்
இமை தாண்ட துடிக்கிறதோ
குளமாகிப்பான விழி நீர் – வேண்டாம்
உம் கண்ணீர் பட்டு இம்மண் நச்சுறவேண்டாம்....


ஊழல் எனும் முதல் விதையை
குளோனிங் செய்து
எமக்கறிவித்தவன் நீ – இதோ
கணம் நோக்கி நின் கால்களையே கொய்யப்போகிறது...


யாருமின்றி அன்னமுண்டு,
அன்னமின்றி யாருமில்லை
இவ்வுலகில் - அன்றே கொல்லும்
அரசனுக்கு பிழைக்கும்,
நின்று கொல்லும் இறைவனுக்கு பிழையேது....

உன் வழி பிழைத்தது யார் குற்றம்...???
வாழ்விழந்து போன எமது குற்றமா....???
ஊழல் கிளை பரப்பி நிற்கும் நி்ன்
குற்றமா..???

விழி பிதுங்கி நிற்கும்
உடன் பிறப்பிற்கோர் வழி சொல்,
இல்லையேல் வழக்கம்போல்
அவன் மீதே பழி சொல்....
அவனறியான் ஒருபோதும்
இது கருவின் குற்றமென்று......



அன்புடன்

குளச்சல் அபூ ஃபஹத்