பாதைகள் என்னவோ
எனக்கானதுதான் - ஆனால்
நான் எனக்காய் நடக்க
நேற்றுவரையில்
அனுமதியில்லை இங்கே....
இந்நேரம் நான்
கயிற்றுப்பாயில் ஓரமாய்
ஒருக்களித்து படுத்திருப்பேன்
என என்னை அப்படியே
அநாதையாய் விட்டுச்சென்ற
என் மகன் எண்ணலாம்...
முதுமையின் வாயிலில்
என் முதுகால் கூனி
வீட்டுக்குள்ளேயே நான்
நெரங்க துவங்கியிருப்பேன்
என எண்ணலாம் நகரத்தின்
நெரிசலில் புழுகும் என் மகள்....
பாட்டி எப்படி இருக்காங்க
என யாரும் என் பேத்தியிடம்
விசாரித்தால் வயசாகிப்போய்
கண்ணெல்லாம் தெரியாதுண்ணு
நெனக்கிறேன் என்று யாரிடமோ
அறியாமல் சொல்லக்கூடும்...
சதைகள் தாழ்ந்து
நரம்புகள் புடைத்து
சருமங்கள் உலர்ந்துபோய்
கறுத்துப்போனதொரு
ஏகாந்தக்கிழவிதான்
இந்த வீட்டில் இருப்பாள்
என ஏதேனும் அரசு
அதிகாரிகள் எனது வீட்டை
புறக்கணித்துச்செல்லலாம்....
நான் மட்டும் தனிமையில்
என்பதால் எனக்கான எல்லா
சலுகைகளையும் யாரோ
என் வீட்டு வாசல்
மிதியாமல் செய்யலாம்...
இதோ இன்னும்
இருக்கிறேன் - என்
தளர்ந்த தசைகளில்
மிளிரும் நரம்புகளில்
நோய்த்திசுக்களற்ற குருதியின்
ஓட்டம் என்னோடு
உற்சாகமாய் பயணிக்கிறது...
எனக்கான சுவாசத்தை
இறைவன் நிறுத்தும்வரை
நானும் நிறுத்தப்போவதில்லை
இடையறாத என் உழைப்பில்
நானும் சிலரும் கொஞ்சம்
இழைப்பாறுவோம்.....
இதோ எனக்கான பாதை
நானே தீர்மானித்துள்ளேன் - என்
கால்களை மட்டுமல்ல
நான் கைவிடப்போவதில்லை என
என் மீதான நம்பிக்கையையும்
சேர்த்தே சுமந்து செல்கிறது
என் வாகனம்.....
ஏகாந்தத்தை நான்
உணர நினைப்பதில்லை - ஏனெனில்
நான் அநாதையாக
விருப்புவதில்லை.....
அபூ ஃபஹத்
நன்றி :
புகைப்படம் சகோ. திருவட்டாறு சிந்துகுமார்...