Sep 18, 2015

நீ நானில்லை....




சட்ட கீசையில பைசா இரிக்கி
பத்து ருவா எடுத்து குடு
பஸ்ஸுல டிக்கெட்டும் எடுத்து
உச்சக்கி சாப்பிடவும் சொல்லு
சாப்பாடு கொண்டு போவச்சென்னா
கெளரவக்குறச்சலு ஒம் மவனுக்கு.......
.
ரேஷன் கட அரி வாங்கி
தின்னு வளத்துனா என் உம்மா
பள்ளிக்கொடத்துக்கு புஸ்தவம்
வாங்க வழியில்லேண்ணு
அஞ்சாங்கிளாசோட நிறுத்திட்டேன்...
.
அதுக்குணு உங்க புராணத்த
படிக்கிய புள்ளைட்ட பாடாதீங்கோ
அவனும் அப்டிஒண்ணும் இல்லாம
வளரட்டுண்ணா செல்லுதீங்கோ
உங்களுக்கு வாங்கி தர யாருமில்ல
அவனுக்கு நீங்க இரிக்கிதீங்கல்லியா....
.
படிச்சிருந்தா சர்க்கார்
உத்தியோகத்துல இரிக்கிலாம்
படிக்காத்ததுனால இப்போ
இந்த வட்டு புடிச்சி நோவ நோவ
ஓடவேண்டியிரிக்கி....
.
புள்ளியளுக்கு பைசா செலவு
செய்யியத சொல்லைல - பைசாக்க
அரும தெரியாம வளரக்குடாதுண்ணுதான்
வாயில வாறதை பொலம்புறது.
மொவனுக்க மேல பாசம் கூடுன
உம்மாக்கு தேச்சியம் வரத்தான் செய்யும்....
.
நாம பட்ட பாடு நம்ம
புள்ள படப்டாது அதுதான்
எனக்க ஆசையும் பிரார்த்தனையும்
செரமம் அறியணும் ஆனால்
செரமப்படுத்தப்டாது....
.
துளித்திளியாய்
பெய்திறங்குகிறது கண்ணீர்
போட்டும்மா உனக்கு மட்டுமா புள்ள
என் வாரிசுல்லா அவன்
நல்லா வரணும் நல்லா இரிக்கணும்
அதுக்குத்தான் எல்லாம்...

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...