கண்ணீர்
*********

வா என்றழைத்தால் உடனே
வந்துவிடுவதில்லை - யாரும்
விரும்பி அழைக்க மழைத்துளிபோல்
அவ்வளவு அழகானதுமல்ல....
பரிவின் பாஷை இன்றும்
கண்ணீரென்கிறது பிரபஞ்சம் - உன்
இயலாமை கண்டும் என்னில்
துளிற்காத கண்ணீரை உன்னால்
ஈரமற்றவனே என்று
எனை இகழச்செய்துவிடுகிறது.....
வலிகளும் சுகங்களும்
ஒன்றோடொன்று முரண்படும்போதும்
அதனின்று வெளிப்படும் விழிநீரில்
இருவேறு அர்த்தங்கள் - எனினும்
கண்ணீரின் உவர்ப்பில் எனக்கு
வேறுபாடு தெரியவில்லை....
தான் பயணப்படும் வழியை
தானே தீர்மானித்துக்கொள்கிறது - ஏதும்
தடைகள் இருப்பினும்
வழிமாறி பயணிப்பதே இல்லை....
எப்போதும் கேட்கும் ஏச்சும்
இகழ்சியும் இதயத்தில் பெரிதாய்
எதையும் ஏற்படுத்துவதில்லை - எனினும்
எப்போதாவது கேட்கும் புகழ்சியின்போது
சட்டென புறப்படும் கண்ணீரின் அழகு
ஒரு தாய்போல் அன்பானது....
இறப்புகளும் இழப்புகளும்
ஏற்படும்போதும் இமை கடக்கும்
கண்ணீர் கூடவே இதயத்தையும்
பிழிந்து பூமியை நனைத்துவிடுகிறது.....
யாருமற்ற இரவுகளும்
ஏகாந்த வாழ்க்கையும் நமை நாதியற்றதாய்
உணரச்செய்யும்போதும்
உள்ளிருக்கும் உணர்ச்சிகளை
உயிர்வலிக்காவண்ணம் வெளிக்கொணர்கிறது
விலைமதிப்பற்ற கண்ணீர்....
தாகங்களோ ஏக்கங்களோ அதிகம்
தங்குவதில்லை இதயங்களில் - புதிய
வழிகள் திறந்து தடம் பதித்துவிடுகிறது
சில பல சிரமங்களை துளிகளில்
கரைத்து உதறித்தள்ளிவிடுகிறது......
விழி நனையா வழிகள் வெற்றியின்
வழியில் வெகு சிலதே - ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் நாம் கடந்த
காலம் சென்ற தோல்விகள்.....
நேற்றும் அழுதேன் நான்
இன்றும் அழுகிறேன் - இதுவரை
என் கண்கள் கண்ணீரை
பிரசவிக்கவில்லை ஆதலால் என்
அழுகை பொய்யுமல்ல....
நேற்றும் கண்ணீர் சிந்தினேன்
இன்றும் கண்ணீர் வழிகிறது - என்னில்
வலிகளேதும் இல்லை
இதயம் கனக்க நொந்துபோகவுமில்லை.....
ஒற்றைச்சொல்லில் என் கண்கள்
குழமாகிவிடுகிறது சிலநேரங்களில்- எனினும்
இம் மண் தொட மறுக்கிறது கண்ணீர்,
புரியவில்லை எனக்கு அவ்வின்சொல்லில்
காயங்களில்லையோ
அது தாய் வாய் பிறந்ததால்......
யாவருக்கும் ஒரு நாள் வேண்டும்
அது தனிமையாய்
இருத்தலும் வேண்டும் - ஏதேதோ
சொல்லி அழவும் வேண்டும் அது
கண்ணீரில் பிறக்கவும் வேண்டும்.......
கண்ணீரோடு
அபூ ஃபஹத்
*********

வா என்றழைத்தால் உடனே
வந்துவிடுவதில்லை - யாரும்
விரும்பி அழைக்க மழைத்துளிபோல்
அவ்வளவு அழகானதுமல்ல....
பரிவின் பாஷை இன்றும்
கண்ணீரென்கிறது பிரபஞ்சம் - உன்
இயலாமை கண்டும் என்னில்
துளிற்காத கண்ணீரை உன்னால்
ஈரமற்றவனே என்று
எனை இகழச்செய்துவிடுகிறது.....
வலிகளும் சுகங்களும்
ஒன்றோடொன்று முரண்படும்போதும்
அதனின்று வெளிப்படும் விழிநீரில்
இருவேறு அர்த்தங்கள் - எனினும்
கண்ணீரின் உவர்ப்பில் எனக்கு
வேறுபாடு தெரியவில்லை....
தான் பயணப்படும் வழியை
தானே தீர்மானித்துக்கொள்கிறது - ஏதும்
தடைகள் இருப்பினும்
வழிமாறி பயணிப்பதே இல்லை....
எப்போதும் கேட்கும் ஏச்சும்
இகழ்சியும் இதயத்தில் பெரிதாய்
எதையும் ஏற்படுத்துவதில்லை - எனினும்
எப்போதாவது கேட்கும் புகழ்சியின்போது
சட்டென புறப்படும் கண்ணீரின் அழகு
ஒரு தாய்போல் அன்பானது....
இறப்புகளும் இழப்புகளும்
ஏற்படும்போதும் இமை கடக்கும்
கண்ணீர் கூடவே இதயத்தையும்
பிழிந்து பூமியை நனைத்துவிடுகிறது.....
யாருமற்ற இரவுகளும்
ஏகாந்த வாழ்க்கையும் நமை நாதியற்றதாய்
உணரச்செய்யும்போதும்
உள்ளிருக்கும் உணர்ச்சிகளை
உயிர்வலிக்காவண்ணம் வெளிக்கொணர்கிறது
விலைமதிப்பற்ற கண்ணீர்....
தாகங்களோ ஏக்கங்களோ அதிகம்
தங்குவதில்லை இதயங்களில் - புதிய
வழிகள் திறந்து தடம் பதித்துவிடுகிறது
சில பல சிரமங்களை துளிகளில்
கரைத்து உதறித்தள்ளிவிடுகிறது......
விழி நனையா வழிகள் வெற்றியின்
வழியில் வெகு சிலதே - ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் நாம் கடந்த
காலம் சென்ற தோல்விகள்.....
நேற்றும் அழுதேன் நான்
இன்றும் அழுகிறேன் - இதுவரை
என் கண்கள் கண்ணீரை
பிரசவிக்கவில்லை ஆதலால் என்
அழுகை பொய்யுமல்ல....
நேற்றும் கண்ணீர் சிந்தினேன்
இன்றும் கண்ணீர் வழிகிறது - என்னில்
வலிகளேதும் இல்லை
இதயம் கனக்க நொந்துபோகவுமில்லை.....
ஒற்றைச்சொல்லில் என் கண்கள்
குழமாகிவிடுகிறது சிலநேரங்களில்- எனினும்
இம் மண் தொட மறுக்கிறது கண்ணீர்,
புரியவில்லை எனக்கு அவ்வின்சொல்லில்
காயங்களில்லையோ
அது தாய் வாய் பிறந்ததால்......
யாவருக்கும் ஒரு நாள் வேண்டும்
அது தனிமையாய்
இருத்தலும் வேண்டும் - ஏதேதோ
சொல்லி அழவும் வேண்டும் அது
கண்ணீரில் பிறக்கவும் வேண்டும்.......
கண்ணீரோடு
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...