முதுமை...
**************
சாலையோர மைல் கல்
பிடுங்கி எடுக்கப்பட்டது
சாலையில்- வேறொரு
இடத்தில் வேறொரு
எண் எழுதப்பட்டு மீண்டும்
நாடப்பட்டது....
பிடுங்கி எடுக்கப்பட்ட கல்லில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
ஒரு கைத்தடியும் பழைய
துணிகள் கொண்ட பை ஒன்றும்
அங்கேயே விடப்பட்டது....
வழியே சென்ற ஆட்டிடையன்
ஒருவன் கைத்தடியை
எடுத்துக்கொண்டான் - அந்த
அழுக்குப்பையை
குறத்திப்பெண்ணொருத்தி
துளாவிக்கொண்டிருந்தாள்....
உள்ளே இருந்த எந்த
ஆடையிலும் ஒட்டைகள்
இல்லாமலில்லை - எதற்காகவோ
சிலதை தோளில் போட்டவள்
அழுக்குப்பையையும் கூடவே
எடுத்துக்கொண்டாள்....
தேர்ந்தெடுத்ததை தவிர
சில பொட்டலங்களும்
ஒரு சில பழைய புத்தகங்களும்
அங்கேயே விடப்பட்டிருந்தது...
முதுகில் பெரிய சாக்குப்பை
ஒன்றை தொங்கவிட்டு
நடக்க இயலாம் அந்த
இடம் அடைந்தான் பேப்பர்
பொறுக்கும் சிறுவன் ஒருவன்....
அழுக்கால் கசங்கிப்போன
விளிம்புகள் சுருண்ட
அந்த புத்தகங்களில் காகிதத்தின்
வாடை வரவில்லை
வியர்வை நாற்றம் மட்டுமே இருந்தது...
எல்லாவற்றையும் எடுத்து
பைக்குள் திணித்தான் - ஏதோ
ஒரு புத்தகத்தின்
நடுப்பக்கம் வாய் பிழந்து
அதனுள்ளே நீளமாய்
உதிரியாய் நின்றது
ஒரு காகித அட்டை.....
எடுத்தவைகளில் அந்த
புத்தகத்தை மட்டும் அங்கேயே
விட்டுச்சென்றான் சிறுவன்- ஏதோ
யோசித்தபடி தலைசொறிந்து
அடுத்த இடம் நோக்கி
நடந்தான் அவன்...
அநாதையாய் விடப்பட்ட
அந்த புத்தகத்தின் ஒரத்தில்
ஏகாந்தமாய் தூங்கும்
அந்த முதியவர் யாராலும்
கவனிக்கப்படாமலே போனார்....
கண் விழித்துப்பார்த்து
புத்தகத்தை கையிலெடுத்து
விளிம்பு சுருங்கிய வியர்வை
நாற்றத்தின் நடுவே கசங்காமல்
வீற்றிருந்தான் மகன்...
அருகே மருமகளும்
குழந்தைகளும் அடங்கிய
அந்த புகைப்படத்தில்
சட்டென விழுந்தது சுத்தமான
அந்த ஒற்றைக்கண்ணீர்......
எழுந்து நடக்க முற்பட்டபோது
பின்னாலிருந்து தாத்தா
எனும் சில சப்தங்கள்...
ஆட்டிடையன்
குறத்திப்பெண்
காகிதப்பையன்
இவர்களோடு
மைல் கல்லுடன்
அந்த தொழிலாளியும்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...