Oct 4, 2013

சொல்ல வந்தேன் உன்னிடம்.... 
***************************

நீ வருவாய் என 
காத்திருந்தால் நீ
வருவதே இல்லை

நீ வந்ததாய் சொல்லும்
நேரங்களில் நான்
இருப்பதும் இல்லை....

நான் வரும்போது
நீ இருந்தாலும் நான்
அறிவதில்லை - நீ
இருப்பதை ஒருபோதும்
தெரிவித்ததும் இல்லை....

நீ சாங்கேத பாஷையில்
நிறைய சங்கதிகள்
சொல்கிறாய் - என்ன
சொல்கிறாய் என்று
அறியாதபோது சங்கடாமாய்
இருக்கிறது.....

நொடியிடையில் என் இமைகள்
சுருங்கிவிடுகிறது உன்
விழியை பாற்கையில்- சூரியனை
உற்று நோக்கி
தோற்றுப்போவதுவதுபோல்
இருக்கிறது....

ஏதோ சொல்ல வருகிறேன்
நீ எதையோ சொல்லி
சிரித்துவிடுகிறாய் - நான்
சொல்லாமலேயே
நிறுத்தி விடுகிறேன்

என் சிந்தனைகள்
புலம்பெயர்கின்றன.....

--------------------

எனது பழைய நாட்குறிப்பேடிலிருந்து.....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...