உள்ளீடற்ற உருவம் கண்டு
பயந்து நடுங்கும்போது
நான் இரவில் இருக்கிறேன்
என்பதை மறந்துபோகிறேன்...
உள்ளீடற்றது உருவமா
அல்லது இரவின்
நிலா வெளிச்சத்தில்
வீழ்ந்த எதோ ஒன்றின்
நிழலா...
இவை இரண்டுமாயிருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
பயம் மட்டும் நிஜத்தில்
என்னோடு பயணிக்கிறது.....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...