சவ் மிட்டாய்....!!!!
****************
இது என்ன கலர்
நிறம்டீ இது -செவ்ப்பா
பச்சையாண்ணு தெரியல்லயே....
நாலணா குடுத்தா
ஒரு ரோஜாப்பூ செய்து தருவாரு
ஆனா உனக்கு பூ
புடிக்காதில்லா அதுனால
வேற ஒரு நாலணா குடுத்து
உனக்கு பொம்மை செய்து
வாங்கித்தாறேன்....
எனக்கட்ட பைசா இல்லை
அந்திக்கு வீட்டு பக்கத்தில வருவாரு
அப்போ வாங்கலாம் - இப்போ
வாங்கினாலும் நிறைய
தூரம் போகணும் வீட்டுக்கு...
எனக்கு இப்போ வேணும்
இங்கயே வாங்கீட்டு போலாம்
உனக்கு பூ புடிக்கும்
எனக்கு பொம்மை புடிக்கும்
செய்து கேக்கலாம்....
கம்புல சுத்தி தருவாரே
நீ உடனே தின்னுருவியா இல்ல
பொறவுதான் தின்னுவியா - நான்
வீட்டுல கொண்டு போயி தம்பிக்கு
காட்டிக்குடுத்துட்டுத்தான் தின்னுவேன்....
கொஞ்சம் பெருசா இருக்கட்டு
நாலணா தந்திருக்கேன் - இன்னும்
ஒரு நாலணா இருக்கு அதனால
பெருசா செய்து தாரும்
பூ வருமில்லியா பொம்மையும்
வருமில்லியா....
பிஞ்சுக்கைகளில்
சின்னக்குச்சிகளின் மேல்
பொம்மையும் ரோஜா பூவும்
ஓடியடைந்தது வீட்டு முற்றத்தை
இனிப்பு நிறைந்த
சவ்வு மிட்டாயின் புன்னகையும்......
எங்கலே போனே
இவ்வளவு நேரம் - கோபத்தில்
துரத்திய அப்பாவின்
கையிலிருந்த கம்பு தட்டி
மண்ணில் விழுந்தது ரோஜாப்பூ...
குச்சிப்பொம்மையை பார்த்து
பூரிப்பில் பூத்த தம்பியுடன்
தின்ன மறந்த கண்களோடும்
அகம் மகிழ்ந்த இதயத்தோடும்
பக்கத்து வீட்டு முற்றத்தில் அவள்....
ஏக்கப்பார்வையும்
தொலைந்துபோன ரோஜாப்பூவின்
வலிகளோடும் தெருமுனையில்
விழி வைக்க
சவ் மிட்டாய்காரனிடம் அவள்
இந்தா எட்டணா இருக்கு
ரோஜாப்பூ பெருஸ்சா இருக்கட்டு
குச்சியில வேண்டாம்
முழுசும் முட்டாயிலே.......
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...