தலைநகரத்து
வன்கொடுமைக்கு
வரிந்துகட்டிய மாணவன்
வாச்சாத்திக்கு வரவில்லை...
விஸ்வரூபத்தின்
துவேஷத்திற்கு வீரம்
முளங்கிய மாணவன்
விதர்பாவில் செத்துவிழும்
விவசாயிக்காய் வரவில்லை....
போலி காந்திகளோடும்
திருட்டு சாமியார்களோடும்
ராம் லீலாவில் கூடிய மாணவன்
தர்மபுரிகளின் தெருக்களுக்கு வரவில்லை...
இலங்கையின் ஈழத்தமிழனுக்காய்
ஆழத்தில் இறங்கி நின்று
அமெரிக்காவை வாழ்த்தும் மாணவன்
இந்தியத்தாயின்
கஷ்மீர் குழந்கைளின்
ஈரல்குலைகளை அறுத்தெறிவதை
கண்டுகொள்ளவே இல்லை....
நம் இனம் அழிக்கப்படும்போது
அதற்காய் உயரும்
உன் குரலை மதிக்கிறேன் - நம்
தேசத்திலும் மனித இனங்கள்
அழிந்துகொண்டிருக்கிறது...
உன் குரல்கள் வளைகள்
சாகவில்லையெனில்
குரல்கொடு..
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...