சுதந்திர தினம்....
******************
தலைநகரிலும்
தலை நகரங்களிலும்
கற்பழிப்புகள் - பாரதத்தாயா
அவள் எப்போதோ கற்பை
இழந்துவிட்டாள் இன்றைய
தலைமகன்களால்
என்றான் வழிப்போக்கன்.....
ஆளும் கட்சியின் ஊழல்களும்
எதிர் கட்சியின் அராஜகங்களும் - அவள்
கால்களில் சீழ் வடிகிறது
விழுப்புண்களில் பாய்ச்சப்படும்
சூலாயுதங்கள்....
சிறைகள் முழுக்க
தொப்பிகளும் தாடிகளும் - புழுத்துப்போன
சிறைகள் இப்போதுதான்
புனிதம் பெறுகின்றன
உழுத்துப்போன மனிதம்
உண்மை அறியவில்லை.....
சுதந்திரக்காற்று முழுவதும்
நச்சுக்களின் வீச்சு - விதைகளும்
விருட்சங்களும் கூடவே
விந்தணுக்களு ம்செயலிழந்து போயின....
கோட்சேவின் குண்டுகளுக்கு
வீழ்ந்தது காந்தியல்ல
அவர் கனவுகளும்
சுதந்திரத்தின் எதிர்காலமும் - இதோ
கோட்சேக்களின் கைகளில்
நெரிக்கப்படுகிறது
சுதந்திரத்தின் குரல்வளை.....
எனதும் உனதும்
வாக்குரிமையை பறிப்பதாய்
வந்தேறிகளின் கூக்குரல் - பாஷிசத்தீயில்
வெந்துகொண்டிருக்கிறது
வந்தே மாதரங்கள்.....
வெண்சாமரம் வேண்டாம்
சிவப்புக்கம்பளம் வேண்டாம்
சிந்தை மகிழ என்
தாய் தேசத்தில் நேசம்
மிகுந்த சுந்திரம் போதும்....
எங்கே எனது நேசம்
எங்கே எனது பாசம்
எங்கே எங்கே எங்கே
எனத்தேடுகிறேன் விஷமும்
வேஷமும் கலக்காத
சுதந்திரக்காற்றை....
எனினும்
என் தேசம்போல் ஒன்று
இன்னும் இல்லை - என்
மக்கள் போல் யாரும்
எங்குமில்லை
எம்மைப்போல் சுதந்திரமாய்
யாருமில்லை....
எவனும் என்
தேசத்தின் மீதான
பற்றில் நச்சு வீசவேண்டாம்....
இனியொரு விதி செய்வோம்....
அபூ ஃபஹத்
அனைவருக்கும்
எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...