தாண்டவம்...
****************
விண்ணை முட்டுகிறது
விலைவாசி - துண்டா
வலைவீசி பிடிக்கப்பட்டான்
தலைப்புச்செய்தியில்
தொங்கும் கோவணத்தில்
எங்கும் பெரிய ஓட்டைகள்....
தொடர்ந்து நிராகரிக்கப்படும்
கருணை மனுக்கள் - அரக்கர்களின்
பெயரோடு நரகத்தின்
விலாசத்தில் சேர்ந்திருக்கலாம்
உங்கள் மனுக்கள்.....
என் கைகள் நிறைய
ரூபாய் நோட்டுக்கள் - எதிலும்
காந்தியின் சிரிப்பைக்காணோம்
ஒரப்பார்வையில்
தீக்குச்சி கேட்கிறார்.....
தினம் தினம் பிறக்கின்றன
திரையில் த(று)தலைகள் - இனி
திரைப்படங்களின் நிர்வாண
நடனக்கூடங்களாகலாம்
ஆட்சி மன்றங்கள்....
பெண்கள் கவர்ச்சியாய் உடை
அணியாதீர்கள் - காவல்துறை
தாய்மை காக்க கண்ணியத்தை
பிச்சை கேட்கிறது
நமது பெண்களிடம்....
நமது தெருக்கள்
குறுகிப்போயின -மாடிப்படிகள்
உயர்ந்துகொண்டேசெல்கிறது
இடையில் எப்போதாவது
முகங்களை சந்திப்பது
மின்சார லிஃப்டில் மட்டும்....
சலாமும் வணக்கமும் சொல்வது
நின்று போயிருக்கிறது - ஆங்காங்கே
ஆள் தெய்வங்களின்
அலங்கோலங்களில்
அடிமையாகிப்போயிருக்கிறது
மனிதகுலம்....
இன்னும் இன்னும்
உயிர் இருக்கிறது - கிணற்றிலேயே
இருப்பதால் தவளைகளாகவும்
வெளியே வந்தால்
விஷ ஜந்துவாகவும் பாற்கப்படும்
உணற்சியற்ற தேசத்திற்கும்
மக்களுக்கும்......
அபூ ஃபஹத்
****************
விண்ணை முட்டுகிறது
விலைவாசி - துண்டா
வலைவீசி பிடிக்கப்பட்டான்
தலைப்புச்செய்தியில்
தொங்கும் கோவணத்தில்
எங்கும் பெரிய ஓட்டைகள்....
தொடர்ந்து நிராகரிக்கப்படும்
கருணை மனுக்கள் - அரக்கர்களின்
பெயரோடு நரகத்தின்
விலாசத்தில் சேர்ந்திருக்கலாம்
உங்கள் மனுக்கள்.....
என் கைகள் நிறைய
ரூபாய் நோட்டுக்கள் - எதிலும்
காந்தியின் சிரிப்பைக்காணோம்
ஒரப்பார்வையில்
தீக்குச்சி கேட்கிறார்.....
தினம் தினம் பிறக்கின்றன
திரையில் த(று)தலைகள் - இனி
திரைப்படங்களின் நிர்வாண
நடனக்கூடங்களாகலாம்
ஆட்சி மன்றங்கள்....
பெண்கள் கவர்ச்சியாய் உடை
அணியாதீர்கள் - காவல்துறை
தாய்மை காக்க கண்ணியத்தை
பிச்சை கேட்கிறது
நமது பெண்களிடம்....
நமது தெருக்கள்
குறுகிப்போயின -மாடிப்படிகள்
உயர்ந்துகொண்டேசெல்கிறது
இடையில் எப்போதாவது
முகங்களை சந்திப்பது
மின்சார லிஃப்டில் மட்டும்....
சலாமும் வணக்கமும் சொல்வது
நின்று போயிருக்கிறது - ஆங்காங்கே
ஆள் தெய்வங்களின்
அலங்கோலங்களில்
அடிமையாகிப்போயிருக்கிறது
மனிதகுலம்....
இன்னும் இன்னும்
உயிர் இருக்கிறது - கிணற்றிலேயே
இருப்பதால் தவளைகளாகவும்
வெளியே வந்தால்
விஷ ஜந்துவாகவும் பாற்கப்படும்
உணற்சியற்ற தேசத்திற்கும்
மக்களுக்கும்......
அபூ ஃபஹத்

No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...