அந்த அரச மரம்....
*************
அந்த மரம் மிகவும்
உயரமாய் இருந்தது
பார்ப்பதற்கு அழகாககவும்
அதன் நிழலில் உட்கார்ந்தால்
இதமாகவும் இருக்கும்.....
அதன் இளந்தளிர்
இலைகளை தண்ணீரில்
போட்டு வைப்பார் - தீர்த்தம்
என எல்லோருக்கும் அந்த
தண்ணீரை கைகளில்
ஊற்றி தருவார்...
மரத்தை சுற்றி வர
ஆண்களை மட்டும்
அனுமதிப்பதுண்டு - பெண்கள்
வெளிப்புற கட்டிடத்தை
சுற்றிவருவதில்
ஆட்சேபனை தெரிவிப்பதில்லை....
புனிதத்தின் எல்லை
வெயிலில் கரிந்து வீழும்
சருகுகளை மென்று உண்பதையும்
கடந்து சென்றது.....
கழிந்த மாத மழையில்
அந்த புனித மரம்
சரிந்து வீழ்ந்ததாம் - ஊர் கூடி
மரத்தை வெட்டி
அகற்றினார்களாம்....
சில நாட்களாய் நான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
சாய்ந்து விழுந்த
புனிதமிக்க மரம் அடக்கம்
செய்யப்பட்ட சமாதியை.....
சருகுகளும் கிளைகளும்
வெட்டி நறுக்கப்பட்டு
விற்கப்பட்டதாம் - எழும்புங்கள்
மரம் அறுவை நிலையத்துக்கு
எடுத்துச்செல்லவேண்டும்
வாகனம் வந்து நின்றது...
மரம் நின்ற சமாதியில்
புதிய செடி நடப்பட்டிருந்தது
அந்த செடிக்கும் பழைய
பெயரும் வரலாறுமே
மீண்டும் சொல்லத்துவங்கியிருந்தனர்....
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...