அடையாளங்கள்...
**********************
ஆமாம்
அவன் கையில் செல்ஃபோண் இருந்தது
தோளில் ஜோல்னாபோல்
லேப்டாப் தொங்கியது....
இறுக்கமான சட்டையின்
பொத்தான்களுக்கிடையே
சட்டை வாய் பிளந்து நின்றது
அவ்வப்போது குனிந்து
நிமிர்ந்தபோது அவன்
இடுப்புக்கு கீழே
உள் ஆடையின் கால் பகுதி
வெளியே தெரிந்தது....
இடது கையில்
இருக்கும் வீதியான
செல் போணின் மேல்
விரல்களால் கீச்சிக்கொண்டே
இருப்பது தெரிந்தது...
நெற்றியை துடைத்து
உருட்டி உருட்டி வீசிய
பேப்பரில் அழுக்கின்
நகக்கீரல்கள் தெரிந்தன...
ஏனோ தெரியவி்ல்லை
அவனுடைய காற்சட்டை
கீழே விழுவதுபோல்
எனக்கு தோன்றியது..
செருப்புக்கு பதில் ஏதோ
கயிற்றுப்பாயின் நிறத்திலான
தகட்டில் கம்பி
வைத்து தைத்ததுபோல் இருந்தது...
தேங்காய் உரிக்கும்
கொம்பின் முனைபோல்
இருந்தது அவன்
தலை முடியின் கோலம்....
சரிம்மா... எல்லாம் ஓ.கே
அந்த பையனோட
முகம் எப்படி இருந்தது..
சாரி சார், அவன் என்னையவே
பார்த்துக்கொண்டிருந்ததால் அவன்
முகத்தை சரியா பாக்கலை
அதுக்குள்ளே பஸ் வந்திடிச்சி
நான் பார்த்தவரைக்கும்
முகத்தில சொல்றமாதிரி
எதுவும் அடையாளம் இல்லை சார்....
அவள் பார்வையில்
தெரிந்த அடையாளங்களில்
அவள் மறந்துபோனது
அவனது நிஜமான முகம்....
பார்வைகளில்
பறிபோகிறது நிஜம்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...