May 1, 2013

பற்றாக்குறைகள்...

பற்றாக்குறைகள்..
***********************

வி்தைத்தது 
முளைக்கவில்லை - உண்பதற்கே 

இல்லாமல்மண்சோறு 
தின்னும்போது விற்பனைக்கேது....

இறைத்து இறைத்து எங்கோ
விற்கப்படுகிறது தண்ணீர் - என்
நிலத்தடியை தோண்டினால்
இனி பெட்ரோல் ஊறலாம்....

தினமும் என் வானம்
சிவக்கும்முன்னே
கார் முகில்கள் கறுப்பாக்குகிறது
மழை எனச்சொல்லி
சில துளிகள் தூவி
கடுப்பேத்துகிறது.....

கடற்கரையில் வாழ்கிறேன்
எனக்கு மீன் கிடைக்கவில்லை - மலிவு
விலையாம் மல்ஸியம்
கடலே இல்லாத ஊர்களில்....

நியாயவிலைக்கடையில்
வரிசையாய் நிற்கி்றேன் - எல்லா
கண்களும் கடைசியில் நிற்கும்
என்னையே பார்க்கின்றன
விலைப்பட்டியலை
பார்ப்பதுபோல்....

காக்கைகளின் கரைச்சல்
குறைந்திருக்கிறது - நாய்களின்
ஊளைச்சத்தம் இப்போதெல்லாம்
பகலிலும் அதிகம் கேட்கிறது....

தங்கத்தின் விலை
அகோரமாய் இருக்கிறது - மாப்பிள்ளைகளின்
விலையிலும் எந்த குறைவும்
ஏற்பட்டதாய் தெரியவில்லை
கோடிகளின் வால் நட்சத்திரங்கள்....

நான் பத்து வரிகளை
எழுதிமுடிப்பதற்கு
பனிரெண்டுமுறை
யோசிக்கிறத மின்சாரம்
போய் போய் வருகிறது....

பற்றாக்குறைகள்
வற்றாமல் இருக்கிறது
என்னைச்சுற்றி
பற்றாமல் இருக்கவேண்டும்....

No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...